உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹைட்ரோகார்பன் திட்டம்: அமெரிக்காவிடம் முட்டி மோதுகிறது மத்திய அரசு; அனுமதிக்க மாட்டோம் என்கிறது மாநில அரசு!

ஹைட்ரோகார்பன் திட்டம்: அமெரிக்காவிடம் முட்டி மோதுகிறது மத்திய அரசு; அனுமதிக்க மாட்டோம் என்கிறது மாநில அரசு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:பெட்ரோலியம் இறக்குமதி விவகாரத்தில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் மத்திய அரசு போராடிக் கொண்டிருக்கும் நிலையில், 'தமிழகத்தில் எந்த பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி தர மாட்டோம்' என்று மாநில அரசு அறிவித்துள்ளது. அது என்ன ஹைட்ரோ கார்பன்!https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6gigbvtp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஹைட்ரோ கார்பன் என்பது கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற வளங்களை தேடி ஆய்வு செய்து பிரித்தெடுக்கும் திட்டங்களை குறிப்பதாகும். பெட்ரோலியம், நிலக்கரி, இயற்கை எரிவாயு போன்ற எரிபொருட்களின் முக்கியப் பகுதி ஹைட்ரோ கார்பன். பெட்ரோலியம், இயற்கை எரிவாயு போன்றவை இந்திய மக்களுக்கு தேவையான அளவு இங்கே உற்பத்தி செய்யப்படுவதில்லை. அதாவது கண்டறியப்படவில்லை. அதனால் வெளிநாடுகளில் இருந்து பெருமளவு அந்நியச் செலாவணி கொடுத்து இந்தியா அவற்றை இறக்குமதி செய்கிறது. விலை குறைவாகக் கிடைக்கிறது என்பதற்காக ரஷ்யா போன்ற தொலைதுார நாடுகளில் இருந்தும் அவற்றை இந்தியா இறக்குமதி செய்கிறது. இதற்கு இடையூறு செய்யும் வகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதிப்பு, அபராத வரி விதிப்பு செய்து வருகிறார். இத்தகைய சூழ்நிலையில், உள்நாட்டிலேயே நமக்குத் தேவையான பெட்ரோலியம், இயற்கை எரிவாயு வளங்களை கண்டறியும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் 20 இடங்களில் எண்ணெய்க்கிணறு தோண்ட திட்டமிட்டு முறைப்படி அனுமதியும் பெற்றுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தான், தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தும், அனுமதி தர மாட்டோம் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது.தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக அரசு கடந்த 20.02.2020 அன்று தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம், 2020ஐ இயற்றியதன் மூலம் காவிரி டெல்டா பகுதியினை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது. இச்சட்டத்தின் அடிப்படையில் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகள் ஆகிய டெல்டா பகுதிகளில் புதிதாக எரிபொருள், இயற்கை வாயு, நிலக்கரி மீத்தேன் மற்றும் ஷெல் வாயு போன்றவற்றின் இருப்பு குறித்த ஆராய்ச்சி மற்றும் அகழ்வுத் தொழில்கள் ஆகியவறை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது. மேலும் கடந்த 2023ம் ஆண்டு இத்தடை மயிலாடுதுறை மாவட்டத்துக்கும் விரிவுபடுத்தப்பட்டது.இதற்கிடையில், ONGC நிறுவனமானது ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் இருப்பு குறித்து ஆய்வு செய்ய விண்ணப்பித்து இருந்ததைத் தொடர்ந்து மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், சுற்றுச்சூழல் அனுமதியை நேரடியாக வழங்கியுள்ளது. இந்த செய்தி தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இதை அடுத்து ONGC நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை உடனே திரும்ப பெறுமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது.விவசாயிகள், பொதுமக்கள் நலன் கருதி, தமிழ்நாட்டின் எந்த ஒரு பகுதியிலும், ஹைட்ரோகார்பன் தொடர்பான எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்க முடியாது என்பதே தமிழக முதல்வர் ஸ்டாலின் திடமான கொள்கை முடிவாகும்.தற்போது மட்டுமின்றி எதிர்காலத்திற்கும் நம் மாநிலத்தின் எந்த ஒரு பகுதியிலும் இத்திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது.இவ்வாறு அதில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Sripathy Rajamanickam
ஆக 26, 2025 09:05

தமிழ் நாட்டில் எடுக்கவிருப்து ஷெல் கேஸ். இதை எப்படி எடுப்பார்கள் என்று தெரியுமா? தண்ணீர், கெமிக்கல்ஸ் மற்றும் மண்ணை அதிக அழுத்ததுடன் பூமிக்கு அடியில் செலுத்தி பாறையை வெடிகவைப்பார்கள். இதனால் குடிநீர், பழங்காலத்து கோவில்கள் மற்றும் கட்டிடங்கள் பாதிக்கப்படும். நீங்கள் இருக்கும் பகுதியில் இதனை செய்யலாமா?


வேங்கடசுப்பிரமணியன்
ஆக 25, 2025 17:18

இன்றைய சூழலில் நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமான திட்டம். திட்டத்தை எதிர்ப்பவர்கள் அமெரிக்க மற்றும் சீன கைக்கூலிகளாக கருத வேண்டியுள்ளது. கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து போராடியவர்களின் பின்புலம் பின்னர் அமிலமானது. தூத்துக்குடி தாமிர ஆலையை மூட வைத்தனர். குஜராத் அதனை வரவேற்றது. இன்று கோவை மற்றும் தூத்துக்குடி வேலைவாய்ப்புகள் இழந்து தவிக்கிறது. ஓட்டுக்காகவும் வேறு சில சக்திகளுக்ககாவும் தமிழக அரசு செயல்படுகிறதா அல்லது நாட்டின் வளர்ச்சிக்கு கைகோர்த்து தமிழகத்தை வளர்ச்சிக்கு இட்டுச் செல்லாமல் முட்டுக்கட்டை போடுகிறதா? மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்


Tetra
ஆக 25, 2025 16:40

இவன் அனுமதிக்க மாட்டான். ஆனால் பெட்ரோல் டீசல் கேஸ்வேண்டும். எங்கிருந்தடா வரும். இதே போல் மற்ற மாநிலங்களும்சொன்னால் கட்ட வண்டியில்தான் போக வேண்டும். இவனுங்க துபாய் போயிடுவானுங்க.


raja
ஆக 25, 2025 05:04

உலக மஹா திருடர்கள் யோக்கியன் மாதிரி அறிக்கை வெளியீடுகிறார்கள் தஞ்சை டெல்டா பகுதிகளில் மீத்தேன் எடுக்க கையெழுத்து போட்டதே இந்த திருடர்கள் என்பதை மக்களுக்கு தெரியவா போகிறது என்கிற நினைப்பு.


Modisha
ஆக 25, 2025 00:17

சுருக்கமா சொன்னா தமிழகத்துக்கோ , இந்தியாவுக்கோ எந்த நன்மைக்கும் நாங்க அனுமதி தரமாட்டோம் .


Oviya vijay
ஆக 24, 2025 23:50

முதல்ல பஞ்சமி நிலத்தை ஆட்டைய போட்டு கட்டின அறிவி ஆலய இடத்தை ஒப்படைத்து பிறகு இதை பேசலாமே...


ManiMurugan Murugan
ஆக 24, 2025 23:17

ManiMurugan Murugan விவசாய நிலங்கள் உள்ள இடங்களில் மீத்தேன் வாயுக்கு அனுமதி அளித்தவர்கள் வறண்ட இராமநாதபுரத்தில் ஆய்வு நடத்த ஏன் தடை செய்ய வேண்டும் கமிஷன் வரவில்லை என்றா வறண்ட பூமி மீன் தொழிலை மட்டுமே நம்பி இருப்பவர்களுக்கு ஓஎன்ஜிசியை போல் வந்தால் மக்கள் முன்னேறுவார்கள் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு க கூட்டணி க்கு மக்களுக்கு நல்லது என்றால் மகிழ்சிசியே கிடையாது போல கொத்தடிமைகளாக தான்இருக்க வேண்டும்?


xyzabc
ஆக 24, 2025 23:16

திருட்டு தி மு க மீண்டும் மதுரை டங்ஸ்டன் சுரங்க ஸ்டைல் நாடகம் போடுகிறது. தங்களுக்கு ஆதாயம் இல்ல என்றால் எதையும் செய்யவிட மாட்டார்கள்


GMM
ஆக 24, 2025 22:40

தமிழகத்தில் எந்த பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி தர மாட்டோம் என்று தமிழக அறிவிப்பு போல் கர்நாடகா ஆந்திரம், தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்று சட்டம் போட முடியும். தமிழக வாகனம் சரியாக பராமரிப்பு இல்லை. கேரளாவில் நுழைய முடியாது. பொருட்கள் கேரளா வண்டிக்கு மாற்ற வேண்டும் என்று சட்டம் போடலாம். உச்ச நீதிமன்றம் இது போன்ற பிரிவினை சட்டங்களை முடக்க வேண்டும். மத்திய அரசு திட்ட பயன் மாநிலங்களை மட்டும் சேரும். மத்திய அரசு டாக்டர். மருந்து டாக்டர் சாப்பிட மாட்டார்.


panneer selvam
ஆக 24, 2025 22:09

Thenrasu Sir , do not allow any projects in Tamilnadu whether airport , railway , highways or any sectors we have in mind . As per Dravidian Concept , Tamils should not be allowed to improve their living conditions and earning capacity . They should live with begging bowl at one hand and Tasmac bottle on another hand always in the lifetime . if they need better life , let them run away to Bangalore , Hyderabad or Gujarat . Meanwhile everyday Stalin ji should proclaim , we are the best and number ONE in the world . Go on


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை