உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிடிவி தினகரன் குற்றச்சாட்டுகளுக்கு நான் பொறுப்பில்லை: நயினார் நாகேந்திரன்

டிடிவி தினகரன் குற்றச்சாட்டுகளுக்கு நான் பொறுப்பில்லை: நயினார் நாகேந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் வெளியேறிய பிறகு அவர் சொல்லும் குற்றச்சாட்டுக்கு நான் பொறுப்பேற்க முடியாது என தமிழக பாஜ நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.கோவையில் நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தேஜ கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறியதற்கு நான் காரணம் என்று எதை வைத்து தினகரன் சொல்கிறார் என்று தெரியவில்லை. கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் வெளியேறிய பிறகு அவர் சொல்லும் குற்றச்சாட்டுக்கு நான் பொறுப்பேற்க முடியாது. அவர் ஏன் அப்படி பேசினார் என எனக்கு தெரியாது. பாஜ கூட்டணியை வலுப்படுத்த நினைக்கிறது. திமுக ஆட்சியை அகற்ற எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என்று நான் எல்லா இடத்திலும் பேசி இருக்கிறேன்.எல்லோரும் ஒன்று சேர்ந்தால் தான் திமுகவை வீழ்த்த முடியும். லோக்சபா தேர்தலில் டிடிவி தினகரனுடன் கூட்டணியில் இருந்தோம். அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், செங்கோட்டையன் கூறியது குறித்து நாம் எப்படி கருத்து சொல்ல முடியும். பாஜ என்றைக்கு அடுத்தவர்கள் விவகாரத்தில் தலையிடாது. டிடிவி தினகரனும், ஓபிஎஸ்சும் சொல்லி வைத்துக் கொண்டு மாறி மாறி குற்றஞ்சாட்டுகிறார்களா? என தெரியவில்லை. நான் யாரிடமும் ஆணவமாக நடந்து கொள்பவன் இல்லை. அதிமுக ஒன்றுபடுவதே பாஜவின் விருப்பம். துக்கடா கட்சி என அமமுகவை நான் நினைக்கவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இருக்க வேண்டும் என விரும்பினோம். டிடிவி தினகரனின் நிபந்தனை என்னவென்றே தெரியவில்லை. இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

pakalavan
செப் 07, 2025 00:43

எடப்பாடியே ஒரு அடிமை, அந்த அடிமைக்கு நாயநாரு அடிமை


nagendhiran
செப் 06, 2025 19:56

ஒரு கட்சி தலைவன்? கூட்டணி கட்சிகள் பற்றி எனக்கு தெரியாதுனு"சொல்வது சரியா?


தத்வமசி
செப் 06, 2025 18:35

ஒரு கல்லூரியின் விடுதியில் வசித்த மாணவர்களுக்கு அவ்வப்போது உப்புமாவை உணவாக போட்டு சமாளிப்பார்களாம். உப்புமாவை எப்படியாவது பட்டியலில் இருந்து நீக்கி விட வேண்டும் என்று பெரும்பான்மை சதவிகித மாணவர்கள் போராடினார்களாம். எல்லோரும் சேர்ந்து போராட்டம் செய்ததால் விடுதியின் காவலர் ஒரு தேர்தல் வைத்தாராம். ஐந்து-ஆறு ஐட்டங்களை உணவுப் பட்டியலில் கொடுத்து எது அதிகமான மக்களின் விருப்பமாக இருக்கிறதோ அதையே முக்கியமான உணவாக தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவு செய்து தேர்தல் நடந்தது. அட பாருங்கள்.. உப்புமாவை வெறுத்த பெரும்பான்மையான மக்கள் மற்ற உணவுப் பொருட்களுக்கு பிரித்து தங்களின் ஓட்டைப் போட்டனர். ஆனால் உப்புமா விரும்பிகளான இருபது சதவிகிதம் ஒன்று சேர உப்புமாவுக்கு ஒட்டு போட்டனர். கடைசியில் உப்புமாவே வென்றது. அதுவே அனைவரது விருப்பமான உணவாக மாறியது. இது தான் இப்போது நடக்கவிருக்கும் தேர்தல். இந்திய ஜனநாயகத் தேர்தல்.


V K
செப் 06, 2025 14:16

ஆமாம் டி டி வி சொல்லும் நயினா வேறு இந்த நயினா வேறு கதையை முடிந்தது


Oviya Vijay
செப் 06, 2025 14:07

அவருக்கும் ஒரு விருந்து கொடுத்து கூல் பண்ணி இருக்கலாமே நைனா...


Tamilan
செப் 06, 2025 14:00

திமுக ஆட்சியை அகற்றவும் முடியாது . அதற்க்கு தலைமையேற்க இனியொருவர் பிறக்கவும் இல்லை. வீணாக மதவாத குண்டர்களான மோடி சாவை நம்பி மிரட்டலுக்கு பணிந்து கண்டதை உளறவேண்டாம் . மோடி சாவின் நோக்கம் என்னஎன்பதை தமிழகத்தில் உள்ள அணைத்து மக்களும் அறிய விரும்புகிறார்கள். இந்து மதத்தை போல் மக்களை காக்கும் மாமனிதர்கள் கடவுள்கள் என்று கற்பனைக்கதை கட்டுக்கதைகள் பல கூறி தமிழக மக்களை திராவிடர்களை ஏமாற்ற முடியாது


தியாகு
செப் 06, 2025 16:03

உண்மைதான் பாய், உங்கள் ஓட்டுக்கள், மதம் மாற்றும் கும்பல் ஓட்டுக்கள், தலைமுறை குடும்ப கொத்தடிமை கழக அடாவடி அடிமை இளிச்சவாய இந்து உடன்பிறப்புகள் கும்பல் ஓட்டுக்கள் இருக்கும் வரையில் கட்டுமர திருட்டு திமுகவிற்கு அழிவே கிடையாது.


Raman
செப் 06, 2025 16:30

All anti-national elements must be investigated.


புதிய வீடியோ