உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குடும்ப பிரச்னையால் தவறு செய்துவிட்டேன்; போலீஸ் விசாரணையில் ஸ்ரீகாந்த் கண்ணீர்

குடும்ப பிரச்னையால் தவறு செய்துவிட்டேன்; போலீஸ் விசாரணையில் ஸ்ரீகாந்த் கண்ணீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'நான் தவறு செய்து விட்டேன்; போதைப்பொருள் வாங்கி யாரிடமும் விற்கவில்லை' என, கைதான நடிகர் ஸ்ரீகாந்த் வாக்குமூலம் அளித்துள்ளார்.போதைப்பொருளான கோகைன் பயன்படுத்தியது மற்றும் வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக, நடிகர் ஸ்ரீகாந்த், 46, கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் முதல் வகுப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தவறான நடத்தை

போலீசாரிடம் ஸ்ரீகாந்த் அளித்துள்ள வாக்குமூலம்: என் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் திருப்பதி. அதே ஊரில் என் தந்தை வங்கி அதிகாரியாக இருந்தார். என் தாய், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். நான் எம்.சி.ஏ., படித்துள்ளேன். பார்த்திபன் கனவு, ரோஜா கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளேன். எதிர்பார்த்த அளவுக்கு வணிக ரீதியாக என் படங்கள் வெற்றி பெறவில்லை. அதனால், ஓரங்கட்டப்பட்ட கதாநாயகன் பட்டியலில் இருந்தேன். எனக்கு பெண்கள் சகவாசம் அதிகம். திருமணத்திற்கு முன் நடிகை ஒருவருடன் நெருங்கிய நட்பில் இருந்தேன். அவருடன், நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு சென்ற போது, வந்தனா என்பவர் அறிமுகமானார்.பெரும் சர்ச்சைகளுக்கு பின், அவரை, 2007ல் காதல் திருமணம் செய்தேன். எங்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். எங்களின் மண வாழ்க்கை சரியாக அமையவில்லை. என் தவறான நடத்தை காரணமாக, சென்னை திருவான்மியூரில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தனா அடிக்கடி சென்று விடுவார்.தற்போதும் நாங்கள் பிரிந்து தான் வாழ்கிறோம். மகள் வந்தனாவுடனும், மகன் என்னுடனும் இருக்கின்றனர். நடிகர், நடிகையர் நடத்தும் இரவு பார்ட்டிகளில் பங்கேற்ற போது, கோகைன் பழக்கம் ஏற்பட்டது. அதற்கு அடிமையாகும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டேன். கோகைன் விற்பனை செய்வோரை தேடிப்போய் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.இந்த போதை காரணமாக, சில ஆண்டுகளுக்கு முன் ஹோட்டல் ஒன்றில் தகராறும் ஏற்பட்டது. படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்தபோது தான், நடிகை ஒருவர் வாயிலாக, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த பிரசாத் என்பவரின் பழக்கம் ஏற்பட்டது.

கோகைன்

தீங்கிரை என்ற படத்தை தயாரித்த அவர், கோகைன் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. பிரசாத்திடம் இருந்து, 5 லட்சம் ரூபாய் வரைக்கும், கோகைன் வாங்கி பயன்படுத்தி வந்தேன்.படத்தில் நடிப்பதற்காக, 10 லட்சம் ரூபாய், பிரசாத் தர வேண்டி இருந்தது. இந்த தொகைக்கு பதிலாக, கோகைன் தருவதாக கூறினார். கடைசியாக அவரிடம், 250 கிராம் வாங்கி பயன்படுத்தினேன். குடும்ப பிரச்னை காரணமாக போதைக்கு அடிமையாகி, தவறு செய்து விட்டேன். நான் கோகைன் வாங்கி மற்ற நடிகர், நடிகையருக்கோ, வேறு நபர்களுக்கோ விற்பனை செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நீதிபதியிடம் கெஞ்சல்

ஸ்ரீகாந்தை கைது செய்து, நேற்று முன்தினம் இரவு, எழும்பூர் நீதிமன்ற நீதிபதி தயாளன் வீட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது ஸ்ரீகாந்த், 'நான் குடும்ப பிரச்னை காரணமாக, கோகைன் வாங்கி பயன்படுத்தி தவறு செய்து விட்டேன். என் மகனுக்கு உடல்நிலை சரியில்லை. எனக்கு ஜாமின் வழங்க வேண்டும்' என்று, கெஞ்சினார். அதற்கு நீதிபதி, 'போதை பொருள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் தான் ஜாமின் பெற பெற முடியும்' என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Padmasridharan
ஜூன் 26, 2025 20:12

கோகைன் போதையில், தனியா அமைதியா இருந்தா தவறு. . ஆனால் TASMAC மது போதையில் ரோட்டில யார் தகராறு பண்ணாலும் தவறில்லையா சாமியோவ்..


கல்யாணராமன் சு.
ஜூன் 25, 2025 19:48

இங்கே ஒன்று புரியவில்லை .... நடிகர் ஸ்ரீகாந்த் ஒரு பயனாளி கோன்சுமேரி, விற்பவரல்ல என்று வைத்துக்கொண்டால் , அவரை அந்த ஒரு பயனாளியை மட்டும் கைது செய்யவேண்டிய அவசியம் என்ன ? மற்ற பயனாளிகளையை ஏன் இன்னும் கைது செய்யவில்லை ? அந்த போதை மருந்து விற்பனையாளன் அவர் ஒருவரின் பெயரை மட்டுமா சொல்லியிருப்பான் ? அடுத்ததாக , இதே போல ஜாபர் சாதிக்கை கைது செய்தபோது, அவரிடம் போதை மருந்து வாங்கி பயன்படுத்தியவர்களை ஒருவரைக் கூட ஏன் கைது செய்யவில்லை ? why is this inconsistent approach ?


suresh guptha
ஜூன் 25, 2025 17:56

IN ECR RECENTLY ED NAMED PERSONS WITH MORE DRUGS ENJOYED WHY POLIC HAS NOT TAKEN ACTION


Rathna
ஜூன் 25, 2025 17:26

முறை இல்லாத வாழ்க்கை, வருமானத்திற்கு சம்பந்தம் இல்லாத ஆடம்பரம், சுய கெளரவம் இல்லாத தொழில்கள் இவைதான் சில கூத்தாடிகளின் வாழ்க்கை முறை. அவர்களோ அல்லது அவர்கள் குடும்பமோ ஒரு நல்ல வாழ்க்கைக்கு எடுத்து காட்டு இல்லை.


ஆரூர் ரங்
ஜூன் 25, 2025 16:36

அயலக அணியால் பாதிக்கப்பட்ட நபர்கள் இன்னும் ஏராளம்.


Easwar Kamal
ஜூன் 25, 2025 16:18

உன் வீடு ப்ரிச்சனியில் அந்த சுள்ளான் கும்மி அடித்து இருந்தால் அதையும் ஒரு காரணமாக சேர்த்து கொள்ளலாம். போலீஸ் கொஞ்சம் இரக்கம் கட்டலாம்


நிவேதா
ஜூன் 25, 2025 13:35

விந்தையான நாடு. இங்கே போதைப்பொருளை வாங்கி உபயோகிப்பவன் தண்டிக்கப்படுவான். அதை விற்பவன் இன்டர்நேஷனல் மாபியா . அந்த மாபியா தப்பிக்க கபில்சிபல், சங்வி போன்ற வக்கீல்கள். அவர்கள் வாத திறமையால் விற்றவன் அதை விற்கேவே இல்லை அதற்கு ஆதாரம் இல்லை என சொல்லி வெளியே வந்து விடுகிறான்.


Ramesh Sargam
ஜூன் 25, 2025 12:40

நான் தவறு செய்துவிட்டேன். ஓகே. இனிமேலும் அதுபோன்ற தவறுகளை செய்யாமல் இருப்பாயா, ஒழுங்காக ஒரு வேளையில் சேர்ந்து மகனை நல்ல முறையில் வளர்ப்பாயா என்று நீதிமன்றம் கேட்கவேண்டும் அவருக்கு ஜாமீன் கொடுப்பதற்கு முன்பு.


Ganapathy
ஜூன் 25, 2025 10:23

நமது பாடத்திட்டம் எதை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கிறது? பெற்றோர்கள் எந்த அளவில் தனது பிள்ளைகளைப் பற்றி அறிந்துள்ளனர்? நற்பண்புகளை போதிக்கும் நமது புராண கதைகளை பிள்ளைகளுக்கு முன்பு பள்ளிகளில் கூறும் வழக்கத்தை செகுலரிசம் பேசி கெடுத்ததன் விளைவு இன்று இவன் நல்ல படிப்பு இருந்தும் இத்தனை வயதில் ஒரு சமூக குற்றவாளியாக தலைகுனிந்து நிற்கிறான். பெண் சகவாசம், குடி, கூத்து, போதைக்கு அடிமை, ரவுடியிசம் என இரு வளர்ந்த பிள்ளைகளின் தகப்பன் செய்யக்கூடாத வேலைகளை பல பாவங்களை குற்றங்களைப் புரிந்து இன்று யாரோ ஒரு நீதிபதியின் முன் நடுநிசியில் தலைகுனிந்து கெஞ்சும் நிலை வர முதல் காரணம் நமது கல்வித்திட்டம் மற்றும் பெற்றோரின் வளர்ப்பு முறை இவை இரண்டும் 70 மற்றும் 80களின் முறைக்கு மாறவேண்டும். பள்ளிகளில் முன்பு வெள்ளிக்கிழமைகளில் நடக்கும் ஹிந்துக்களின் பிரார்த்தனைகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும். நமது குருகுல முறை மீண்டும் வர வேண்டும். இல்லையேல் பலரும் இவன்போல படித்த சமூக குற்றவாளி பெற்றோர்களாக வருங்காலத்தில் மாறுவது நிச்சயம்.


theruvasagan
ஜூன் 25, 2025 10:16

நல்லவர்களை எவனும் சீந்துவதில்லை. ஆனால் அரிதாரம் பூசிய கூத்தாடிகளை நம்பிக்கை நட்சத்திரமாக நினைத்து அவங்களை தலையில் வைத்து கொண்டாட புத்திகெட்டுப்போன ஒரு பெரிய கூட்டமே இருக்கு என்பதுதான் வேதனையான உண்மை.