வாசகர்கள் கருத்துகள் ( 38 )
கமல் பேச்சினால், கர்நாடகாவில் வாழும் லட்சக்கணக்கான தமிழர்களுக்கு ஏதாவது ஒரு சின்ன அடி விழுந்தால் கூட, கமல் தான் பொறுப்பு.
What Mr. Kamal said is correct. If someone argues incorrectly without knowing the truth, it is his/her foolishness. Kamal does not need to accept an apology at all. Suppose someone from Tamil Nadu supports the stupid politicians, who do not know about the history of Tamil Literature. In that case, that person should be punished very badly through electoral ballots, and thrown out of Tamil Nadu. I strongly support Kamal in this matter.
நாடு இருக்கும் சூழலில் இது தேவை இல்லாத ஒன்று. தமிழை வைத்து நீங்கள் எத்தனை காலம்தான் அரசியல் செய்வீர்கள். தமிழை தமிழர்களை வாழ விடுங்கள். நீங்கள் வாழ்வதற்காக இரு மாநிலத்துக்கு இடையே தேவை இல்லாத பிரச்சனைகளை உருவாக்க வேண்டாம். உங்கள் டைம் பாஸுக்காக தமிழை கையில் எடுக்க வேண்டாம். தமிழை உயர்த்தி பிடிக்க நினைத்தால் உங்கள் செல்வாக்கை வைத்து தமிழ் மாணவர்களுக்கு தரமான இலவச கல்வி கொடுங்கள். தமிழகம் நூறு சதவிகிதம் கல்வி பெற்றவர்கள் கூடமாக அமைய வழி செய்யுங்கள்.
இங்குள்ளவர் இல்லாத திராவிடத்தை வைத்து அரசியல் பண்ணுகிறார். அங்குள்ளவர் கன்னடத்தை வைத்து அரசியல் பண்ணுகிறார். மொழிகளின் வரலாறுகள் தெரிந்த இங்கும் அங்கும் உள்ள மேதாவிகள் இதனை கண்டுகொள்ளாமல் தங்கள் பிழைப்பை பார்க்க சென்று விடுவார்கள்.
ஆகா, கமல் வலையிலே சிக்கிட்டே , நிலைமை தெரியாத அடிமையே
கமல் நல்ல நடிகர். ஆனால் அவருக்கு அரசியல் தெரியாது. திமுக சாக்கடையில் விழுந்த பூமலர். அவ்வப்போது எதையாவது புரியாதபடி பேசுவார். புரிந்தால், இப்படித்தான் சர்ச்சை எழும்.
இப்போது தான் இந்திய தேசமே தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்று திரண்டு இருக்கிறது மேலும் கன்னடர்களும் தமிழர்களும் ஒருவருக்கொருவர் பிரச்சினை இல்லாமல் இருக்கிறார்கள் அது பிடிக்கவில்லையா
இதப்பத்தி நம்ம செல்லம் பிரகாஷ்ராஜ் எதுவுமே சொல்லலாமா வாய மூடிக்கிட்டு இருக்காரு. ஏன்? இதான் அந்த ஆளோடோ யோகியதை. இத வடஇந்தியர்கள் சொல்லி இருந்தா அந்த ஆளு என்ன பேசி இருப்பாருன்னு உங்க கற்பனைக்கு விட்டு விடுகிறேன். பா ஜா க பத்தி பேசும் போது தாறுமாறா பேசுவாரு...இந்த வாட்டி வாய குடுத்து மாட்டுனது அவரோட நண்பர் உலக வாய் வீரர் கமல் அவர்கள்.... அதனால கப்சிப் .... கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தை ஒரு ரெட்டியார் ஆண்டார், ஒரு மேனன் ஆண்டார், கடைசியில் கன்னட ஐயங்கார் ஆண்டார் என்று சொல்லி இருப்பது அவர் திருந்த போவது இல்லை என்பதையே காட்டுகிறது. அப்போ ஓங்கோல் குடும்பத்தை மட்டும் சொல்லாமல் போனது ஏன்? மேலும் கன்னட ஐயங்கார் என்று ஜெயலலிதாவை மறைமுகமாக குறிப்பிட்டது என் ? ஜெயா உயிரோடு இருந்தபோது இதை பற்றி இசை கமலுக்கு ஏன் தைரியம் வரவில்லை? ஜெயா தான் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் என்கிற விளக்கத்தை கொடுத்தபிறகும் அவரை அவர்தம் காலம் முடிந்தபிறகு வம்புக்கு இழுப்பானேன் ?
உண்மையாக இருந்தாலும் சிலவற்றைப் பேசாமல் இருப்பது உத்தமம். கன்னட எழுத்துலகில் சூப்பர் ஸ்டார் மாஸ்தி வெங்கடேச ஐயங்கார், கன்னட நாடக உலகின் தந்தை கைலாசம் போன்ற பல முன்னோடிகள் தமிழர்களே. பெங்களூருவை உருவாக்கிய அரசர் கெம்பே கவுடா தமிழர்.இதனை அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள் ஆனாலும் அவர்கள் மனம் கோணும்படி பேசுவது தவறு.
அவர் எங்கே கோணும்படி பேசினார் அன்பாகத்தானே பேசினார் கோணல் புத்தி உடையவர்கள் எதை பேசினாலும் கோணலாகவே புரிந்து கொள்வார்கள். மன்னிப்பு அது தமிழ்ல மட்டுமல்ல கன்னடத்திலும் பிடிக்காத வார்த்தை. சத்யராஜ் ,ரஜினிகாந்தை விட கமல் தஃ க் லைப் கொடுத்துட்டாரு?? இதுக்காக மட்டுமே தனியே கொடுக்கணும் ஒரு பூச்செண்டு.
என்னாப்பா அண்ணனுக்கு திடீரென்று தமிழ் பற்று. தமிழர்கள் ஆதரவுக்கு ஒரு நாடகமா?