உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனுமதி இல்லாத கட்டடங்களை இடித்து அகற்ற ஐகோர்ட் உத்தரவு

அனுமதி இல்லாத கட்டடங்களை இடித்து அகற்ற ஐகோர்ட் உத்தரவு

சென்னை: 'சென்னை தி.நகரில் உள்ள வணிக கட்டடத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை 8 வாரங்களில் இடிக்க நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.சென்னை தி.நகரில் வணிக கட்டடத்தில் அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டடங்களை இடித்து அகற்ற, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து கட்டுமான நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று (பிப்.,18) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=u510ns99&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டுமானங்களை வரன்முறை செய்ய உரிமை கோர முடியாது. * வரன்முறை சலுகையை வழக்கமான நடை முறையாக அரசு மேற்கொள்ளக் கூடாது. * அனுமதி இல்லாத கட்டுமானங்களை அனுமதிக்க கூடாது. பெரு முதலீடு என்ற காரணத்துக்காக இரக்கம் காட்டக்கூடாது.* அனுமதியில்லாத கட்டுமானங்களை நீடிக்க அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு நீதிபதிகள் திட்ட வட்டமாக தெரிவித்தனர்.* பின்னர், சென்னை தி.நகரில் உள்ள வணிக கட்டடத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை 8 வாரங்களில் இடிக்க நடவடிக்கை எடுக்க, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

தாமரை மலர்கிறது
பிப் 18, 2025 20:25

எந்த தீர்ப்பை திராவிட அரசு நிறைவேற்றி இருக்கிறது? ஆற்றில் மூன்றடிக்கு மேல் மணல் எடுக்க கூடாது என்று சுப்ரிம் கோர்ட் கூறியுள்ளது. தீர்ப்பு கொடுக்க கொடுக்க, கமிஷன் ரேட் ஏறுது . ஒவ்வொரு தீர்ப்பும் ஸ்டாலின் காதுகளுக்கு இன்பத்தேனாக பாய்கிறது.


chennai sivakumar
பிப் 18, 2025 18:53

கனம் நீதிபதி அவர்களே உங்கள் தீர்ப்பு சிந்துபாத் கன்னித்தீவை கண்டு பிடித்தவுடன் நிறைவேற்ற படும்.


M S RAGHUNATHAN
பிப் 18, 2025 18:41

மாநகராட்சி, நகராட்சிகள் அனுமதி இன்றி/ விதிகளை மீறி பெரும் கட்டிடங்கள் கட்டுவதை எப்படி கண்காணிக்காமல் இருந்தார்கள். அனுமதி பெறாமல் கட்டப் பட்ட கட்டிடங்கள், வரைவுகளை மீறி கட்டப் பட்ட கட்டிடங்கள் இவற்றுக்கு எப்படி மின்தொடர்பு கொடுக்கப் பட்டது. முடிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு ஃபிட்னஸ்/ fit for occupation சான்று எப்படி யாரால் வழங்கப்பட்டது. Property Tax எப்படி அனுமானிக்கப்பட்டது. வசூலிக்கப் பட்டது. இதற்கு துணை போன அதிகாரிகளை கண்டு பிடித்து உடனே நிரந்தர பணி நீக்கம் without any benefits செய்ய உயர்நீதி மன்றம் உத்தரவு இடவேண்டும்.அதே போல் நீதி மன்றங்களும் கண்ணை மூடிக் கொண்டு நீதி மன்றம் போட்ட உத்தரவுகளுக்கு தடை விதிக்கக் கூடாது. முக்கியமாக விதிகள் மீறி கட்டப் படும் கட்டிடங்களுக்கு " Regularisation" scheme கொண்டு வரக் கூடாது.


என்றும் இந்தியன்
பிப் 18, 2025 17:48

அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டடங்களை???அதாவது இந்த கட்டிடங்கள் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் என்று சொன்னவுடன் தானாக கட்டிடம் தயார் ஆகிவிட்டது அப்படித்தானே.இந்த கட்டிடம் கட்டி முடிக்க ஒவ்வொருவனும் குறைந்தது 3 வருடம் எடுத்துக்கொண்டிருந்திருப்பான்???அது வரை முனிசிபாலிடி குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருன்தது அப்படித்தானே


Oru Indiyan
பிப் 18, 2025 17:45

இன்னுமா இந்த இந்த ஊர் அரசியல்வாதிகளை நீதிபதிகள் நம்புறீங்க? நீங்க ஒரு தீர்ப்பு சொன்னீங்கன்னா அதுக்கு மதிப்பே கிடையாதுன்னா. பள்ளிக்கரணை குப்பைமேட்டிலே தான் தேடனும். 12 வாரத்தில் கொடி அகற்ற சொன்னீங்களே? ப்லெக்ஸ் போஸ்டர் தடை பன்னீங்க ட்ராபிக் ராமசாமி போட்ட கேஸ்லே. என்ன ஆச்சு. நீங்க எல்லோரும் வேற மாநிலத்துக்கோ வேற நாட்டுக்கோ ஓடி போய்டுங்க


Ram
பிப் 18, 2025 19:25

நம்ப ஊர்ல நீதிபதிகளுக்கு மரியாதை கிடையாது , தீர்ப்பை நிறைவேற்றாத தி மு க அரசை டிஸ்மிஸ் செய்ய நீதிபதிகளுக்கு தைரியம் கிடையாது.


கைலாஷ்
பிப் 18, 2025 17:43

நீதி மன்ற உத்தரவுகள் மீறபட்டால் contempt of court என்று தண்டனை அதிக படுத்த முடியும். அந்த தண்டனையை செயல்படுத்த வேண்டிய இடத்தில் அரசு இயந்திரம் இருக்கிறது. அரசே நீதி மன்ற உத்திரவை மீறினாலோ அல்லது செயல் படுத்த தாமத படுத்தினாலோ தண்டனை என்ன, யாருக்கு என்பதுபோன்ற நிலைகளில் தெளிவு இல்லை. இந்த சட்ட சிக்கலில் தேவை படும் சட்டதிருத்தம் வர வேண்டும்.


Ram
பிப் 18, 2025 19:26

இதற்கு தேர்வுக்கான நீதிபதிகளுக்கு துப்பில்லை , அதற்குள் ஆளுநர் அதிகாரத்தைப்பற்றி பேச வந்துவிட்டார்கள்


ஆனந்தகுமார்
பிப் 18, 2025 17:09

அடப்பாவமே... பெரிய பெரிய பட்டு சில்க், தங்கமாளிகைகள், மால்கள் இடிக்கப் போறாங்களா? சான்சே இல்கை. இது என்ன சிங்கப்பூரா, அமெரிக்காவா? நீதிமன்றங்கள் வறட் வறட்டுன்னு கத்திக்கிட்டிருக்க வேண்டியதுதான்.


Jai Sankar Natarajan
பிப் 18, 2025 17:04

அப்போ பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்ட அலுவலகம். எப்போது இடிக்கப்படும் ?


rama adhavan
பிப் 18, 2025 16:57

இடிக்கவா போகிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்குவார்கள்.


kalyanasundaram
பிப் 18, 2025 16:47

NOTHING WILL HAPPEN. THIS JUDGEMENT IS JUST AN EYE WASH.SUPREM COURT IS THERE TO GRANT STAY AND CONCERNED POLITIANS ARE ALSO THERE TO REGULARISE ON PAYMENT . SO WHY THIS DRAMA AND HYPE


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை