உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மொழி சிதைந்தால் இனமும், பண்பாடும் சிதைந்து விடும்; கலைமாமணி விருது விழாவில் முதல்வர் பேச்சு

மொழி சிதைந்தால் இனமும், பண்பாடும் சிதைந்து விடும்; கலைமாமணி விருது விழாவில் முதல்வர் பேச்சு

சென்னை: 'மொழி சிதைந்தால் இனமும், பண்பாடும் சிதைந்து விடும். நம் அடையாளம் அழிந்து விடும். அடையாளம் அழிந்தால், தமிழர் என்று சொல்லும் தகுதியை இழந்து விடுவோம்,' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் கலைமாமணி விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. 2021,2022,2023ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. எஸ்ஜே சூர்யா, சாய்பல்லவி, விக்ரம் பிரபு உள்பட மொத்தம் 90 பேருக்கு கலைமாமணி விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.முன்னதாக, அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது; இங்கு விருது பெற்ற பெரும்பாலானோர் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள் தான். பலருடைய கலை தொண்டு குறித்து எனக்கு தெரியும். மூத்த கலைஞர்களுக்கு மட்டும் இல்லாமல், வளர்ந்து வரும் கலைஞர்கள் அடையாளம் கண்டு மிக சரியானவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 90 வயதான முத்துக்கண்ணம்மாள் முதல் இளம் இசையமைப்பாளர் அனிரூத் வரையில் விருது பெறுகிறார்கள். கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு தங்கப் பதக்கம், விருது பட்டயம் வழங்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு நாட்டில் தங்கம் விலை என்னவென்று உங்களுக்கே தெரியும். ராக்கெட் வேகத்தில் ஒருநாளைக்கு இருமுறை விலை ஏறிட்டு இருக்கிறது. விருது அறிவித்த போது இருந்த தங்கத்தின் விலையும், இன்றைய விலையும் ஒப்பிட்டு பார்த்தாலே புரியும். ஆனால், அவ்வளவு மதிப்புக்குரிய வகையில் அமைந்துள்ளது இந்த நிகழ்ச்சி. தங்கத்தை விட கலைமாமணி விருதுக்கு தான் மதிப்பு அதிகம். ஏனெனில் இது தமிழகம் தரும் பட்டம். நலிந்த நிலையில் வாழும் கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக நிதியுதவி உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் கலை விழா நடத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இளையராஜா மீது நமக்கு இருப்பது கலைப்பாசம். அதே பாசத்தில் தான் உங்களுக்கு கலைமாமணி விருது வழங்குகிறோம். இந்தக் கலை தமிழை வளர்க்கும் பெரும் தொண்டை செய்தது. மொழி சிதைந்தால் இனமும், பண்பாடும் சிதைந்து விடும். நம் அடையாளம் அழிந்து விடும். அடையாளம் அழிந்தால், தமிழர் என்று சொல்லும் தகுதியை இழந்து விடுவோம். தமிழர் என்ற தகுதியையும், சுயமரியாதையையும் இழந்து வாழ்வதில் என்ன பயன்? கலை, மொழி, இனம், அடையாளத்தை காப்போம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

Rathna
அக் 12, 2025 19:02

தமிழ் இலக்கியம் முழுவதும் ஹிந்து இலக்கியமாகவே உள்ளது. அதனால் அதை வெறுக்கிறேன் என்று ஒரு ஈரோட்டு பெரியவர் சொன்னதாக நினைவு.


sankar
அக் 12, 2025 18:32

தந்தையும், தனயனும் பேசுவது தமிழா?


Venugopal S
அக் 12, 2025 11:02

திமுக மொழியை வைத்து அரசியல் செய்வதை நிறுத்த முடியாது!


Sivaram
அக் 12, 2025 08:00

தினமும் எதையாவது சொல்லி தமிழர்களை ஏமாற்றி காலத்தை ஓட்டுவது கொத்தடிமைகளும் உடன்பிறப்புகளும் இருக்கும் வரை இது ஒரு போதும் நிற்காமல் நடக்கும் வாழ்க திராவிட சமூக நீதி மாடல் அப்பாவும் என் தமிழனும்


Raj
அக் 12, 2025 06:22

ஹிந்து மதம் அழிந்தால் நம்ம கலாசாரம் அழியுமே. அதையே வேலையாக செய்து கொண்டு இருக்கீங்க


Murthy
அக் 11, 2025 21:53

G D நாயுடு ....என்பதில் முதல் இரண்டு எழுத்து ஆங்கிலம் . .....நாயுடு தெலுங்கு .....தமிழ் எப்படி வாழும் ??


V Venkatachalam
அக் 11, 2025 21:21

ஆம் அது உண்மைதான். ஆனால் அது டமிலுக்கு இல்லை. நாங்க டமில் வளக்குற விதமே வேற லெவல். மேயர் பிரியா ராஜன் கொஞ்சும் டமில் சாட்சி.


D Natarajan
அக் 11, 2025 21:00

தமிழன் வாழ வேண்டும். திருட்டு திராவிடம் விரட்டப்பட வேண்டும்


Venkatesan Srinivasan
அக் 12, 2025 00:24

வேலிக்கு ஓணான் சாட்சி. ஊழலுக்கு கலை இனம் மொழி சாட்சி.


Gurumurthy Kalyanaraman
அக் 11, 2025 20:53

இன்னும் எத்தனை நாள்தான் மொழியை வைத்து கொண்டு கதை சொல்லுவது ஓங்கோல் சாமி? கொஞ்சம் டிஜிட்டல் மொழி, சாட்போட் மொழி என்றுகூட யோசித்து மக்களை முட்டாளாக்கலாமே?


Duruvan
அக் 11, 2025 20:43

In a decade the language wont be bothered by the peoples around the world. The technology already swallowed it.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை