உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீசாருக்கே இந்த நிலை என்றால்... இபிஎஸ் கேள்வி!

போலீசாருக்கே இந்த நிலை என்றால்... இபிஎஸ் கேள்வி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தென்காசி: ''சட்டம் ஒழுங்கு சீர்கேடு என்பது நிரூபணம் ஆகி விட்டது. நம்மை பாதுகாக்க வேண்டிய போலீசுக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது,'' என்று கடையநல்லுாரில் இபிஎஸ் பேசினார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கடையநல்லுார் பஸ்ஸ்டாண்ட் அருகே அவர் பேசியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zijap7ox&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. எஸ்.ஐ.யை வெட்டிக்கொலை செய்துள்ளனர். நமக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது? இது சாதாரண விஷயமல்ல, சட்டம் ஒழுங்கு சீர்கேடு நிரூபணம் ஆகிவிட்டது. நம்மை காக்க வேண்டிய போலீஸுக்கே இந்த நிலை. அதுமட்டுமில்லை கோவையில் எஸ்.ஐ அறையில் புகார் கொடுக்க வந்த ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்கு மோசம் என்பதை உணரவேண்டும். காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. இதுக்கெல்லாம் என்ன காரணம்? போதை ஆசாமிகள்தான். கிராமம் முதல் நகரம் வரை கஞ்சா அமோக விற்பனை. அதை தடுக்கத் திராணி இல்லாதது, இந்த திமுக அரசு. நான் பல முறை போதை குறித்துப் பேசினேன் அப்போதே முதல்வர் நடவடிக்கை எடுத்திருந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னையை தடுத்திருக்கலாம். ஆனால் அதற்கு தகுதியில்லாத முதல்வர் நம்மை ஆள்கிறார். தமிழ்நாடு போலீஸ் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாகப் போற்றப்பட்டது. அதுவே இன்று இப்படியிருக்கக் காரணம் அரசியல் தலையீடு. போலீஸுக்கே இந்த நிலை என்றால் மக்களை யார் பாதுகாப்பது? நாடு மோசமான நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது. நாட்டைக் காப்பாற்ற தேர்தலில் அதிமுக வென்று ஆட்சியமைக்க வேண்டும்.அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்தார்கள். இன்று சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை. பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லை. இவ்வாறு இபிஎஸ் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

vivek
ஆக 07, 2025 07:44

இங்கே இதயம் பத்திரம்


Padmasridharan
ஆக 07, 2025 06:37

சட்டத்தை பாதுகாத்து முதலில் ஒழுங்காக நடக்க வேண்டியவர்கள் காவலர்கள்தான் சாமி. இவர்கள் குழந்தைகள் அல்ல, செய்யும் எல்லா தவறுகளுக்கும் ஆட்சியை குறை சொல்ல. போதை ஆசாமிகளை பாதுகாக்கறதே காவலர்கள்தான். பொது இடங்களில் பார்த்தவுடன் இவர்களிடமிருந்து பணத்தை புடுங்குகிறார்களே தவிர மற்ற மக்களை பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணம் இல்லை. ஒரு சில இடங்களை இவர்களே, வரும் மக்களை துரத்திவிட்டு குற்றங்கள் நடக்குமாறு செய்துக்கொண்டு அங்கு வருபவர்களிடம் பணம்/பொருள் புடுங்கி அந்த இடத்தை குத்தவைக்கு விடுவது போல் நடக்கின்றனர். அங்கு வரும் மற்ற மக்களை பற்றி அவதூறு பேசி இவர்கள் நல்லவர்களாகின்றனர்.


Kumar
ஆக 07, 2025 04:09

நீங்கள் ஒரு விபரம் அறியாதவர்.


Kasimani Baskaran
ஆக 07, 2025 04:08

ஒரே நாளில் பேஸ் மேக்கர் , உடலுறுப்புக்களை வைத்து மோசடி, காவல்துறையினரே மர்ம எண்களுடன் வாகனங்கள் வைத்திருத்தல் போன்ற நூதனமான விஷயங்கள் தமிழகத்தில் மட்டுமே நடக்கும்.


Raja k
ஆக 06, 2025 22:46

உங்க கட்சி எம் எல் ஏ மகேந்திரன் தென்னை தோப்பில்தான் கொலை நடந்துள்ளது, கொலை செய்தவர்களை உங்க கட்சி எம் எல் ஏ தான் வேலைக்கு வைத்துள்ளார்,


Oviya Vijay
ஆக 06, 2025 21:48

இதில் அறிய வேண்டிய உண்மை என்னவென்றால் இவர்களது பொதுக்கூட்டத்திற்கு சேரும் கூட்டம் தானாக சேரும் கூட்டம் அல்ல... பணம் கொடுத்து அந்தந்த ஏரியா நிர்வாகிகளால் அழைத்து வரப்படும் கூட்டம் என்பது பலரும் அறிந்ததே... கூட்டத்தைக் காண்பிக்காவிட்டால் வசவு விழும் எனக் கூட்டத்தை சேர்த்த ஏரியா நிர்வாகிகள் அதற்காக பணத்தை வாரி வாரி இறைக்கின்றனர்... எப்படியாவது ஜெயித்து விட்டால் திரும்பவும் சம்பாதிக்க ஆரம்பித்து விடலாம் என்பது அவர்களின் எண்ணம்... ஆனால் 2026 தேர்தலில் மக்கள் நாமம் போடுவார்களேயானால் இப்போது நிர்வாகிகள் வட்டிக்கு வாங்கி தண்ணியாகச் செலவு செய்யும் பணம் எல்லாம் கானல் நீராய்ப் போய்விடும்... கோடிக்கணக்கில் பதுக்கிய தலைமையோ சுக வாழ்வு வாழ நிர்வாகிகள் நிலைமையோ அந்தோ பரிதாபம்... ஜாக்கிரதை... இதயங்கள் பத்திரம்...


Ramesh Sargam
ஆக 06, 2025 21:32

தமிழகத்தில் ஒரு போலீஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை. இதில் முதல்வர் தமிழகம் ஒரு அமைதிப்பூங்கா என்று பெருமை பேசுகிறார். தமிழகத்தில் நடப்பது திமுக ஆட்சி அல்ல, துப்புக்கெட்டவர்கள் ஆட்சி.


முருகன்
ஆக 06, 2025 22:21

நீங்கள் விரும்பும் ஆட்சி நடந்தாலும் இது போல் நடக்கும் . காரணம் நமது சட்டம் அப்படி தேவை சட்ட திருத்தம்


புதிய வீடியோ