ஜூலை 26 வரை நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை; வானிலை மையம் தகவல்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
சென்னை: நீலகிரி, தேனி, தென்காசி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு;* தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். * சென்னையில் 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு காணப்படுகிறது. * நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள், ஜூலை 25ம் தேதி கனமழைக்கான வாய்ப்பு காணப்படுகிறது. *நீலகிரி, தேனி, தென்காசி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (ஜூலை 22) கனமழைக்கு வாய்ப்பு.* ஜூலை 26ம் தேதி நீலகிரி, தேனி, கோவை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.இவ்வாறு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது,