உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்காச்சோள இறக்குமதிக்கு மசியாத இந்தியா

மக்காச்சோள இறக்குமதிக்கு மசியாத இந்தியா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமெரிக்காவின் ஐயோவா மாகாண கவர்னர், கிம் ரெய்னல்ட்ஸ் சமீபத்தில் இந்தியா வந்தார். வெளிநாட்டு பிரமுகரின் இந்திய வருகை என பார்த்தால், இது சாதாரண வர்த்தக குழு வருகையோ, துாதரக நடைமுறை போலவோ தோன்றலாம். ஆனால், உண்மையில் இது அமெரிக்காவின் வியூக நடவடிக்கை. ஐயோவா, அமெரிக்காவின் மிகப்பெரிய மக்காச்சோள உற்பத்தி மாகாணம் என்பது தான் காரணம். மெக்சிகோவை விட அது மூன்று மடங்கு அதிக சோளத்தை உற்பத்தி செய்கிறது.அமெரிக்கா, நீண்ட காலமாக இந்தியாவை தன் அதிகப்படியான மக்காச்சோளத்திற்கான முக்கிய சந்தை என கண்டு வருகிறது. எனவே, ரெய்னல்ட்ஸ் இந்தியா வந்தது வெறும் பயணம் மட்டுமல்ல; இந்திய சந்தையை திறக்க வைக்கும் முயற்சியுமாகும்.

அமெரிக்காவின் சோள கதை

மக்காச்சோளம் அமெரிக்காவின் ஒரே பெரிய வேளாண் உற்பத்தி பொருளாகும். ஐயோவா, இல்லினாய்ஸ், நெப்ராஸ்கா, மின்னசோட்டா உள்ளிட்ட மத்திய மேற்கு மாகாணங்களில் பரவலாக இது சாகுபடி செய்யப்படுகிறது. 2024 - 25ல், அமெரிக்கா 37.76 கோடி டன் சோளம் உற்பத்தி செய்து, 7.17 கோடி டன் ஏற்றுமதி செய்தது.ஆனால், ஏற்றுமதி வாய்ப்புகள் குறைந்ததால், அந்த மாகாணங்களின் அரசியல் பொருளாதார சமநிலை பாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விற்பனை மீது அதிகமாக சார்ந்துள்ள மாகாணங்களே இந்த அழுத்தத்தை உருவாக்குகின்றன.அமெரிக்கா, நீண்ட காலமாக இந்தியாவை தன் அதிகப்படியான மக்காச்சோளத்திற்கான முக்கிய சந்தையாக பார்த்து வருகிறது.

இந்தியா ஏன் வாங்குவதில்லை?

இந்தியாவின் குறைந்த அளவிலான சோள இறக்குமதிக்கு இரண்டு காரணங்கள்.சுங்க கொள்கை: ஆண்டுக்கு 5 லட்சம் டன் சோளம் மட்டுமே 15 சதவீத வரியுடன் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது. அதற்கு மேலான இறக்குமதிக்கு, 50 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இது, உள்நாட்டு விவசாயிகளை காக்கும் நடவடிக்கை.மரபணு மாற்றப்பட்டதற்கு தடை: இந்தியா நீண்ட காலமாக மரபணு மாற்றப்பட்ட சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதிப்பதில்லை. பொது சுகாதாரம் மற்றும் அரசியல் பொருளாதாரம் இதற்கு காரணம். இந்தியாவின் கோழிகள், கால்நடைகளுக்கு உகந்த சோளம் அமெரிக்காவில் இருந்தாலும், இறக்குமதி செய்வது மிக குறைவு.

கொள்கையின் நோக்கம்

விவசாயிகளின் வருமானம் காக்கப்படுகிறது. கிராமப்புற வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது.உணவு தன்னாட்சி நிலைநிறுத்தப்படுகிறது. ஆனால், இந்திய சந்தையை நோக்கி காத்திருக்கும் அமெரிக்கா, இதை கடுமையாக விமர்சிக்கிறது. '140 கோடி மக்கள் இருக்கிறோம் என்று இந்தியா பெருமைப்படுகிறது. அப்படி என்றால், ஏன் அந்த மக்கள் அமெரிக்க சோளத்தை வாங்குவதில்லை?' என்று அமெரிக்க வர்த்தக செயலர் ஹோவர்ட் லுட்னிக் கேள்வி எழுப்பியுள்ளார்.

விலை ஒப்பீடு

இந்திய மொத்த விலை:கிலோ ரூ.22 - 23 (2025 - 26).

குறைந்தபட்ச ஆதரவு விலை:

ரூ.24 / கிலோ.அமெரிக்கா (ஜூலை 2025):ரூ.15 / கிலோ.இந்திய உற்பத்தியை விட, அமெரிக்க சோளம் மலிவானதாக இருந்தாலும், தன் மக்களின் உணவு பாதுகாப்பு மற்றும் தன்னிறைவுக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது.

அரசியல் பரிமாணம்

பீஹார், இந்தியாவின் மூன்றாவது பெரிய சோள உற்பத்தி மாநிலம். விரைவில் இது சட்டசபை தேர்தலை சந்திக்கப் போகிறது. இந்த சூழலில் மரபணு மாற்றப்பட்ட அமெரிக்க சோளத்தை அனுமதிப்பதோ, அல்லது இறக்குமதி வரியை குறைப்பதோ, ஆளுங்கட்சியின் அரசியலுக்கு அபாயமானது.எதிர்க்கட்சிகள் இதை, 'வெளிநாட்டு ஏற்றுமதியாளர்களுக்காக உள்ளூர் விவசாயிகளை தியாகம் செய்கின்றனர்' என்று பிரசாரம் செய்யும் வாய்ப்பு உண்டு. எனவே, பிரதமர் மோடி, அமெரிக்க கோரிக்கைகளுக்கு எதிராக இருப்பதை, விவசாயிகள் நலனுக்கான போராட்டமாக விளக்குகிறார்.

அமெரிக்காவின் அவசரம்

அமெரிக்காவுக்கு இந்தியா அடுத்த பெரிய சந்தை. இந்தியாவில் தனி நபர் வருமானம் தொடர்ந்து உயர்கிறது. சீன சந்தையை இழந்ததால், அமெரிக்காவுக்கு இந்தியா கண்ணில் நிழலாடுகிறது.அதன் ஒரு முயற்சி தான், ஐயோவா கவர்னர் ரெய்னல்ட்ஸ் இந்திய பயணம். ஆனால், இந்தியா தன் உணவு தன்னாட்சியும் விவசாயிகள் நலனும் காக்கும் வகையில் உறுதியுடன் நிற்கிறது.அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்தாலும், இந்தியாவின் இந்த இறுக்கமான பிடியால், மக்காச்சோள சந்தை திறப்பு உடனடியாக சாத்தியமாகும் சூழல் தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Mahendran Puru
அக் 02, 2025 07:15

மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளம் நமக்கு வேண்டாமென்று மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசு முடிவெடுத்து அறிவித்தது டிரம்ப் அறியமாட்டார். பாவம்.


மணிமுருகன்
அக் 02, 2025 00:33

சோளம் என்பது இந்தியர்களுக்கு ஊடு பயிர் அப்படி இருக்க அமெரிக்காவொன் விளைச்சலுக்காக ஏற்பது எனக்பது தவறு தேவை என்றால் ஏற்கலாம் மேலம் பிரதான உணவு அரிசி கோதுமை தாபன் வேண்டுமென்றால் அமெரிக்கா அதன் உற்பத்தியை ஐரோப்பிய நாடுகள் இடம் பேசலாம் அதைவிட்டு இந்தியாவை கட்டாயப்படுத்துவது தவறு அமெரொக்கா நமது அரிசியை வாங்குமா


RAMESH KUMAR R V
அக் 01, 2025 14:38

இது தேர்தலுக்காக இல்லை இந்தியா மக்களின் நலனுக்காக


SUBBU,MADURAI
அக் 01, 2025 10:25

இந்த பில்கேட்ஸ் பல நாடுகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் அளவில் விளைநிலங்களை வாங்கி போட்டு சோதனை முறையில் பல செயற்கையான விவசாய பொருட்களை பயிரிட்டு வருகிறார். அதுபோக மக்கள் அன்றாடம் உண்ணும் மாட்டிறைச்சி,ஆட்டிறைச்சி,வெண்ணெய், இன்னும் இது போன்று நாம் அன்றாடம் சாப்பிடும் பொருட்களை இயற்கையான முறையில் தயாரிக்காமல் இதற்கென்றே அதிக பொருட்செலவில் உருவாக்கிய மிகப்பெரிய ஆய்வுக் கூடங்களில் இதேபோன்று ஆபத்தான பல பொருட்களை செயற்கை முறையில் தயாரித்து அதை இந்தியா போன்ற மிகப்பெரிய சந்தையுள்ள நாடுகளில் விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதிப்பதே இந்த பில்கேட்ஸின் நோக்கமாகும்.


Mohan
அக் 01, 2025 10:06

இதுவே INDI யா இருந்திருந்தா ..டீலிங் போட்டுட்டு நீ என்ன வேணாலும் வித்துக்கொ எங்களுக்கு குடுக்க வேண்டியது மட்டும் கரெக்டா குடுத்துருங்க .. அப்பறோம் அடிக்கடி காசு கேப்போம் ஏன்னா அடிப்பொடிகள், கூட்டணி கட்சிகள், சமூக ஆர்வலர்கள் அப்படிங்கிற பேர்ல எவனாவது கூவுவான் அவுங்க வாயகட்டணும் ...


Gokul Krishnan
அக் 01, 2025 09:02

Why cant US sell it to Pakistan, your President has closed door discussion with Pakistan army chief Munir and prime minister. Go and sell there


SUBBU,MADURAI
அக் 01, 2025 08:53

விஞ்ஞான முன்னேற்றம் என்கிற பெயரில் பல ஆபத்தான பொருட்களை உருவாக்கி அதை நம் இந்தியா போன்ற நாடுகளின் விற்பனை செய்ய ஆரம்பித்து விட்டன அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள். இது போன்று மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோளம் மற்றும் இறைச்சி போன்ற அசைவ உணவுகளை பசு மாட்டிற்கு கொடுத்து அதன் மூலம் அதிக அசைவ பாலை உற்பத்தி செய்து அவற்றை 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து பில்லியன் கணக்கிலான டாலர்களை சம்பாதிக்க வேண்டும் என்பதே அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் நயவஞ்சக எண்ணம். இது போன்ற மரபணு மாற்றப்பட்ட பொருட்களை இந்திய சந்தைகளில் நுழைப்பதற்கு மூல காரணமாக இருப்பவர் மூஞ்சியை அப்புராணியாக வைத்துக் கொண்டு நல்லவர் போல் வேஷமிடும் பசுத்தோல் போர்த்திய ஓநாய் மைக்ரோசாஃப்டின் ஓனர் பில்கேட்ஸ் என்ற மனிதர்தான்.


karthik
அக் 01, 2025 08:53

எங்களுக்கு எது தேவையோ..நாங்கள் எதை அதிகமாக உண்கிறோமோ அதை தான் வாங்குவோம்


மொட்டை தாசன்...
அக் 01, 2025 08:35

சரியான நேரத்திற்கு மழை இல்லாமை, தொழிலாளர்களின் சம்பள உயர்வு, அதிக மூலதன செலவினங்களால் இந்திய விவசாயிகள் பெரும் சிரமத்துடன் குறைந்த லாபத்திற்க்கோ அல்லது நஷ்டத்திற்க்கோ விவசாயம் செய்கிறார்கள். பெரும் நஷ்டத்தினால் பல விவசாய குடும்பங்கள் தற்கொலைக்கு தள்ளப்படும் இந்த சூழ்நிலையில் அமெரிக்க மக்காச்சோளம் இறக்குமதி செய்தால் இந்தியா விவசாயம் பெரும் கேள்விக்குறியாகிவிடும் . அமெரிக்க மக்காச்சோளம் இறக்குமதி ஒருபோதும் கூடாது .


Nathan
அக் 01, 2025 07:54

ஒருபோதும் அமெரிக்க மக்காச்சோளம் இறக்குமதி செய்ய கூடாது. ஒரு வேலை இந்தியாவில் கூடுதல் மக்காச்சோளம் தேவைப்பட்டால் மரபனு மாற்றம் செய்த மக்காச் சோளத்தை உள்நாட்டில் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கலாம். நீண்ட காலம் நம்மால் மரபனு மாற்றம் செய்த மக்காச் சோளம் உற்பத்தி செய்வதை தவிர்க்க இயலாது என்பதே யதார்த்தம் அதைப் புரிந்து கொண்டு மரபனு மாற்றம் செய்த மக்காச் சோளம் உற்பத்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை