கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள்விக்குறி?
கோவை சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகளை, மர்ம நபர்கள் சேதப்படுத்தியது, அதிர்ச்சி அளிக்கிறது. தி.மு.க., ஆட்சியில் ஹிந்து கோவில்களுக்கான பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகி வருவது ஏன்? மத சார்பின்மையையும், சட்டம் - -ஒழுங்கையும் நிலைநாட்டுவதில் சிறிதளவாவது அக்கறை இருந்தால், ஹிந்து மரபை இழிவுபடுத்த நினைத்த சமூக விரோதிகள் மீது, அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். - நாகேந்திரன்,தலைவர், தமிழக பா.ஜ.,