உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்பது தலைகுனிவு இல்லையா: நயினார் கேள்வி

பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்பது தலைகுனிவு இல்லையா: நயினார் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்பது தலைகுனிவு இல்லையா என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை:கடந்த 5 நாட்களில் 17 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் என்ற செய்தியைப் படித்ததும் மனதில் எழுந்த முதல் கேள்வியே கடந்த 5 நாட்களில் வெளியே தெரிய வந்த வன்கொடுமைகள் 17 எனில், வெளியே சொல்ல பயந்து மறைக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எவ்வளவு? 17 குற்றங்களில் 12 குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் என்பதை உற்று நோக்கும் போது, கடந்த நான்காண்டுகளில் எத்தனை குழந்தைகளின் வாழ்வு சிதைக்கப்பட்டுள்ளது?'தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன்' என்று போலியாக சூளுரைக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு நம் வீட்டுப்பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லை என்பது தலைகுனிவு இல்லையா? ஆட்சி முடியும் தருவாயிலாவது விளம்பரத்தை விடுத்து வெளியுலகம் வாருங்கள். நிர்வாகத்திறனின்மையால் அவதியுறும் பொதுமக்களின் அழுகைக் குரலைக் கேட்டுப் பாருங்கள்.இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Padmasridharan
செப் 22, 2025 19:01

சில பெண்களின் குடும்பங்கள் தைரியமாக வெளியில் புகாரளிக்கிறார்கள். ஆனால் பால ஆண்களுக்கும் நடத்தபடும் தொல்லைகள் வெளியில் வரவே வராது சாமி. எ கா. காவலர் சேகர் திருவான்மியூர் கடற்கரையிலிருப்பவர்களை செக்கிங் செய்கிறேனென்று உடல் உறுப்புகளை தொட்டுப் பார்ப்பார் பக்கத்திலேயே சிறுநீர் கழிப்பார் மொபைலை பிடுங்கி மிரட்டி பணத்தை அதிகார பிச்சையெடுப்பார் அதட்டி வண்டியில் உட்கார வைத்து அறைக்கு அழைத்துச் செல்வார்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 21, 2025 01:22

உங்க ஆட்சியில் தான் பொள்ளாச்சி கொடூரம் நடந்து மூடி மறைக்கப்பட்டது மக்கள் மறக்கல்லை, மறக்க மாட்டார்கள்


V Venkatachalam
செப் 21, 2025 13:51

மக்கள் மறக்கவில்லை மறக்க வேண்டாம். அதுக்கு இப்போ என்ன? அதுனால பாதுகாப்பு இல்லங்குறது சரியா? முட்டு குடுக்குறவன்களுக்கு ஒரு ரூலும் கிடையாதுங்குறது எல்லாருக்கும் தெரியும். அதுக்குன்னு தனி தம்பட்டம் தேவையா?


Vasan
செப் 20, 2025 22:37

தாம்பரம் ரயில் நிலைத்தில், உங்கள் மூன்று தொண்டரிடம் பிடிபட்டது 3.99 கோடி ரூபாய் நோட்டுக்கள் எனில், பிடிபடாதது எவ்வளவு? இது தலை குனிவு இல்லையா ? திமுக வை குறை சொல்ல உமக்கு என்ன யோக்கியதை இருக்கிறது நைனா?


V Venkatachalam
செப் 21, 2025 13:44

வந்துட்டானுங்க துண்டை தூக்கிகிட்டு..


Raja k
செப் 20, 2025 22:32

உங்க கட்சி ஆளும் வட மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்பு எந்த லட்சணத்தில் இருக்கிறது தெரியும்தானே


அஜய் இந்தியன் தெற்கு தமிழகம்
செப் 20, 2025 22:16

நைனா நாகேந்திரனுக்கு தமிழக பாஜக வில் மிக பெரிய அளவில் ஆதரவு இல்லை. வெறுப்பு தான் இவர் மேல் உள்ளது. கூட்டணி கட்சியில் பிரித்து விட்டனர். இதுக்கு காரணம் இவர்தான். அதிமுக எடப்பாடி பாஜகவை மதிக்கவே இல்லை. நைனா நாகேந்திரன் கண்டிப்பா இவர் தோல்வியை ஏற்று கொள்ள வேண்டும். பதவி விலக வேண்டும் உடனடியாக


ديفيد رافائيل
செப் 20, 2025 21:55

மத்தியில் ஆளுங்கட்சியாக இருந்தும் தமிழகத்தில் ஒரு MP கூட இக்கட்சிக்கு இல்லை. எப்படி தமிழக மக்கள் ஓட்டு போடுவாங்க மத்தியில் உள்ள BJP கட்சியும் ஏதாவது செஞ்சா தமிழகத்தில் ஏதாவது லோக்சபா MP கிடைப்பார்கள்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 21, 2025 01:20

கவுன்சிலருக்கே ததிங்கிணத்தோம், பாஜக எம்பி கேக்குறீரே?


ديفيد رافائيل
செப் 20, 2025 21:51

மத்தியில் BJP கட்சியும் ஆளுங்கட்சி தானே. இந்த கட்சி பாதுகாப்புக்கு என்ன செஞ்சாங்க. மாநிலத்தில் DMK கட்சியையும், மத்தியில் BJP கட்சியையும் மக்கள் தானே ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தாங்க. இரண்டு கட்சியும் பாதுகாப்பு தர துப்பில்லை.


சமீபத்திய செய்தி