வாசகர்கள் கருத்துகள் ( 11 )
வழக்கம் போல வெத்து கருத்து . அமைச்சர் சொல்வது இடத்தேர்வு மாநில அரசுடையது . தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் விமான நிலையம் அமைப்பது மத்திய அரசுடையது என்பது .
இப்போது அப்படித்தான் சொல்வோம்,பரந்தூர் விமான நிலையம் கட்டி முடித்து செயல்பாட்டுக்கு வந்த பிறகு நாங்கள் தான் எல்லாம் செய்தோம் என்று மார் தட்டிக் கொள்வோம் என்கிறாரா?
ஐயா சாமி விமான நிலையம் சீக்கிரம் கட்டுங்க.நான் ஒரு 5 சென்ட் நிலம் பரந்துர்லே வாங்கி போட்டு ஒரு 10 லட்சம் சம்பாதிக்கனும்
இதனை ஒரேயடியாக நிறுத்தி விடலாம். இந்த விமான நிலையம் தேவையில்லை என்று மக்கள் கூறிவிட்டனர் என்று தான் கொள்ளவேண்டும். இதை பணம் சுருட்டும் பேராசைகாரர்களுக்கு மண்ணு தான்
இதுதான் தெரியுமே. எதிர்ப்பு வந்தவுடன் மத்திய அரசின் மீது பழி போடுவார்கள். கட்டி முடித்தவுடன் பெயர் வைத்து கொண்டாடுவர். ஸ்டிக்கர் கூட ரெடியாக உள்ளது
பரந்தூர் ஏன் விமான நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டடது என்று தெரிய வேண்டும் ஆனால் ஜி ஸ்கொயர் சிட்டியிடம் கேட்க வேண்டும். உங்கள் ஊரில் இது போன்ற பெரிய நிலம் கையகப்படுத்தும் திட்டங்கள் நிறைவேற கூடாது என நீங்கள் கருதினால் நீங்கள் ஜி ஸ்கொயர் சிட்டியுடன் நட்புடன் இருக்க வேண்டும். அல்லது இது போன்ற திட்டம் வந்தால் உங்கள் நிலம் மதிப்பு உயரும் வாழ்க்கை தரம் உயரும் என்று நினைத்தால் நீங்கள் ஜி ஸ்கொயர் சிட்டி அனுக வேண்டும். வருக வருக வருக ஜி ஸ்கொயர் சிட்டி உங்களை அன்புடன் அழைக்கிறது. அனைவருக்கும் சொந்த சிட்டி ஜி ஸ்கொயர் சிட்டி. இங்கே கட்சி பேதம் ஆரியர் திராவிடர் இன் பேதம் இல்லை. வருக வருக வாழ்க வளமுடன்
உண்மையாக இருக்கலாம். பக்கத்தில் அவர்கள் சொத்து சொத்து வாங்கி விட்டார்கள். இப்போது விமான நிலையம் வரவில்லை என்றால் ஐயகோ .. எவ்வளவு நஷ்டம்
பாசிசமும் பாயாசமும் கூட்டு களவாணிகள்... பொது மக்கள் கிட்ட இருந்து யாருக்கு நெருக்கடி போகுதோ அப்போ அடுத்தவனை காட்டி கொடுத்துடுவாங்க...அதுவரைக்கும் கமுக்கமா இருப்பானுங்க... ராமர் பாலம்னு சொல்லி ரெண்டு பேரும் 720 கோடியை ஆட்டைய போட்டது முதல் ரம்மி காரன்கிட்ட தலா 1400 கோடி 540 கோடி வாங்கிகிட்டு மசோதாவை கிடப்பில் போட்டது வரை, வேதாந்தா நிறுவனத்துக்கிட்ட பணம் வாங்கிட்டு திரும்ப தொறக்கறவரை ரெண்டும் கூட்டு களவாணிகள்..
என்னப்பா நீங்க - - எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா - - பிட் - பிட்-ஆ தான் சொல்லுவீங்களா? அதாவது ஒங்களுக்கு பிரச்சினை வராத வரைக்கும் கமுக்கமா போயிருவாங்க, ஒங்களுக்கு பப்ளிக் பிரச்சினை வரும்போது சொல்லுவீங்க, அதுவும் முழுசா சொல்ல மாட்டீங்க - ஆப்போசிட்ல, டீலிங் பேசிக்கிட்டே கொஞ்சம் கொஞ்சமா உண்மைய சொல்லுவீங்க... ஆக - ஆக - ரெண்டு பேருமே திருட்டுல , டீலிங் வச்சிருக்கிறீங்க . . .
சென்னை மாநகருக்கு குடிநீர் நீர்பிடிப்பு ஆதாரமான பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது சென்னையை தண்ணியிலாக்காடாக ஆக்கிவிடும் .
உங்களுக்குத் தெரிந்தது, டெல்லியில் இருக்கும் ஒன்றிய அரசுக்குத் தெரிய வில்லை பாருங்கள். தெரிந்திருந்தால், "என்னய்யா இடம் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்? இது குடிநீர் பிடிப்பு ஆதாரம். எனவே, வேற இடம் பாருங்க " என்று மாநில அரசிடம் சொல்லியிருப்பார்கள்.