உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கச்சத்தீவு தாரை வார்த்தது ராஜதந்திரம் என ஸ்டாலின் ஒப்புக்கொள்வாரா; அண்ணாமலை கேள்வி

கச்சத்தீவு தாரை வார்த்தது ராஜதந்திரம் என ஸ்டாலின் ஒப்புக்கொள்வாரா; அண்ணாமலை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; கச்சத்தீவைத் தாரைவார்த்தது இந்திராவின் ராஜதந்திரம் என்று தமிழக காங்கிரஸ் கூறுவதை முதல்வர் ஸ்டாலின் ஒப்புக்கொள்வாரா என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=whmp6d9c&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை; தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை, கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது, மறைந்த இந்திராவின் ராஜதந்திரம் என்று கூறுகிறார். எங்களுக்கு சில கேள்விகள்;கடந்த 30 ஆண்டுகளில், இலங்கை அரசால், பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தான் அந்த ராஜதந்திரமா? பலநூறு இந்திய மீனவர்கள் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்டனரே. அதுவும் உங்கள் ராஜதந்திரம் தானா? மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்தார்கள் நம் தமிழக மீனவ சொந்தங்கள். இதுவும் ராஜதந்திரத்தில் தான் அடங்குமா? கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தபோது, அன்று தமிழகத்தில் ஆட்சியிலிருந்த தி.மு.க., கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்க முழு சம்மதம் தெரிவித்துத் தமிழக மீனவ மக்களுக்குத் துரோகம் செய்ததோடு, கடந்த ஐம்பது ஆண்டுகளாக, ஒவ்வொரு தேர்தலின் போதும், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு, தமிழர்கள் உரிமை, என்றெல்லாம் நாடகமாடிக் கொண்டிருக்கிறது. அப்போதெல்லாம் இந்த ராஜதந்திரத்தைப் பற்றித் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி பேசியதில்லையே ஏன்? தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை சொல்வதுபோலக் கச்சத்தீவைத் தாரை வார்த்தது ராஜதந்திரம் என்று ஒப்புக்கொள்வாரா முதல்வர் ஸ்டாலின்? இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 22, 2025 19:57

கச்சத் தீவை தாரை வார்க்க எதிர்ப்புத் தெரிவித்ததாக திமுகவினர் கூறுவது பச்சைப் பொய் ..... அதிகார பூர்வ எதிர்ப்பு ஏதாவது உண்டா ???? அப்படியென்றால் கருணாநிதி இந்திராவுக்கு எழுதிய கடிதம் அல்லது சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு சபைக்குறிப்பு ..... இப்படி எதுவும் இல்லை .... துணிந்து தவறுகள், புரட்டுக்கள், வஞ்சகர்கள் செய்துவிட்டு பிறகு குற்றம் சொல்பவர்கள் மீதே சேற்றை வாரியிறைப்பதே திமுகவின் ஆதிகாலப் பழக்கம் ....


GMM
ஜன 22, 2025 18:50

கட்ச தீவு ராமநாதபுரம் சமஸ்தான பகுதி. பின் இந்திய பகுதி. தமிழக நிர்வாகம் கருணாநிதி குழு மேற்பார்வையில் உள்ள போது , அண்டை நாட்டிற்கு கொடு அல்லது கொடுக்க வேண்டாம் என கூற அதிகாரம் இல்லை. கருணாநிதி தன் பரிந்துரையின் கீழ் வராது என்று கூறி இருக்க வேண்டும். இந்திரா காங்கிரஸ் தீவை கொடுக்க பாராளுமன்ற பரிந்துரை மற்றும் ஜனாதிபதி அவர்கள் ஒப்புதல் தேவை. ராஜ தந்திரம் புரிய மன்னர் ஆட்சி கிடையாது. இந்த நடைமுறை பின்பற்றவில்லை. தீவு இலங்கைக்கு சட்டப்படி இன்றும் உரியது அல்ல. காங்கிரஸ் இப்படி தான் பாரத நாட்டை பாகிஸ்தானுக்கு பிரித்து கொடுத்தது. சர்வதேச சட்டப்படி இந்தியா, பாக் . வங்கதேச பகுதியை பனாமா கால்வாயை அமெரிக்கா திரும்ப பெறுவது போல் பெற முடியும். காங்கிரஸ் கட்சியை நிரந்தரமாக தடை செய்ய முடியும்.


அப்பாவி
ஜன 22, 2025 18:49

பத்து வருஷமா வேடிக்கை பாத்ததும் ராஜதந்திரம் தான்.


பேசும் தமிழன்
ஜன 22, 2025 18:33

ஆஹா... நம்ம பிச்சை பெருந்தகை.... சேம் சைடு கோல் போட்டு விட்டாரே.... இப்போது என்ன சொல்லி சமாளிக்கலாம் !!!


M Ramachandran
ஜன 22, 2025 16:52

மக்கள் காதுலே பூ சுத்தும் கும்பல். இப்போ நார் தீர்ந்து போச்சி. பூ கட்டி சுத்த நிற மில்லை. பீ பீ ஊதி சமாளிக்க பெருசும் இல்லை. சீமான் சரியாண அடி மரண அடி குடுக்கிறார் பெரியார் பூச்சாண்டியெல்லாம் இனி வேலைக்கு ஆகாதுடா தம்பி என்று. இப்போ பள்ளத்தில் இரங்கு முகாமா போய்கிட்டு இருக்கு. ஜாக்கிரதை குடும்ப பாரத்தால் குடை சாயா போகுது.


Professional
ஜன 22, 2025 16:38

இன்னக்கி நம்ம வைகுண்ட்ஸ் உப்பி ஓவர் டைம் பாக்குது.. எசமான்ஸ் 200க்கு மேல ஏதாவது போட்டு கொடுங்க .. பாவம் மண்டி போட்டு கதறுது


veera
ஜன 22, 2025 16:31

நானும் இந்த அறிவீலியை பலமுறை கழுவி உத்திட்டேன் . என்ன பண்றது....டிசைன் அப்படி...


KumaR
ஜன 22, 2025 16:03

முட்டு குடுக்கும் வைகுண்டம் முரசொலி மட்டும் படிப்பாரு போல.. 2014 கு அப்புறம் இதுவரை இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை சுட்டு கொல்ல ல. உங்க திருட்டு திராவிட திமுக காங்கிரஸ் கூட்டணில இருக்கும் பொது தான் அவளோ பிரச்சனை வந்துச்சு. வெறும் நிலம் னு சொல்லுற உன்னோட இடத்தை இன்னோருத்தனுக்கு தூக்கி குடுத்த நீ மூடிட்டு தான் இருப்பியா.. அங்க மீன்வளம் அதிகமா இருக்கு அதனால தான் மீனவர்கள் கட்ச தீவை மீட்கணும் சொல்லுறாங்க.. கூட்டணில இருக்கும் பொது ஒரு வாய் எதிர் கட்சியா இருக்கும் பொது ஒரு வாய் இது உங்க திருட்டு திராவிட அடிமைகளுக்கு புதுசு இல்லையே..


V வைகுண்டேஸ்வரன்
ஜன 22, 2025 16:41

அறிவற்ற அநாகரிகமான பதிவு. என்னை ஏன் விமர்சனம் செய்ய வேண்டும்?? 2014 க்குப் பிறகு, யாரும் சுடப்படவில்லை அல்லவா? அப்புறம் இதைப் பற்றிப் பேச அவசியம் என்ன வந்துச்சு ? கச்சத் தீவில் மீன் வளமா? தீவில் எப்படி மீன்? என் பதிவில் இருக்கும் ஐயப்பாடுகளுக்கு பதில்கள் எங்கே? கலைஞர் எதிர்த்தாரா இல்லையா?? Just be specific and say "yes" or "No". கச்சத் தீவு உன்னோட இடமா? காங்கிரஸ் தூக்கி குடுத்துடுச்சா? சரி விடு. யார் மீட்கணும்?? மாநில அரசா?? அல்லது ஒன்றிய அரசாங்கமா? - ஏதேதோ உளறி வைத்திருக்கிறீர்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 22, 2025 21:36

\\ யார் மீட்கணும்?? மாநில அரசா?? அல்லது ஒன்றிய அரசாங்கமா? //// இலங்கைக்குத் தூக்கிக் கொடுப்பார்களாம் .... பாஜக மைய அரசு மீட்கவேண்டுமாம் ........


V வைகுண்டேஸ்வரன்
ஜன 22, 2025 16:02

Any senior citizens here please explain: As per Union govt of India records, 1. Karunanidhi passed a resolution against writing off Katchath theevu to Srilanka. 2. Actually the memorandum of handing over this island happened during MGRs ruling. Then why present politicians targets DMK on this? Whats there in this small piece of uninhabited land???


Suppan
ஜன 22, 2025 16:19

தவறான கருத்து, இந்திரா தன்னிச்சையாக கச்சத்தீவை தாரை வார்த்தார். இது தெரிந்திருந்தும் கருணா வாயை மூடிக்கொண்டு இருந்தார். அதாங்க கூட்டணி தர்மம் . அது வெறும் தீவாக இருக்கலாம். மர்மமே இந்த தானத்துக்கு பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படவில்லை. ஆனால் அங்குதான் மீன்வளம் உள்ளது. பல்லாண்டுகாலமாக தமிழர்கள் தடையில்லாமல் அங்கு மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். இப்பொழுது எல்லை தாண்டும் மீனவர்கள் கைது செய்யப்படும் பொழுது ஸ்டாலின் தந்தையின் தவறை ஒப்புக்கொள்ளாமல் ஏன் கூப்பாடு போடுகிறார்? ,


Professional
ஜன 22, 2025 16:35

வைகுண்ட்ஸ்: எதுக்கு இங்கிலீப்பீசு.. வரலன்னா வுட்ரு .. கருணாதிநிதி தீர்மானம் போட்டாரு.. வாஸ்தவம்.. எப்புடின்னா நான் அடிக்கிறமாதிரி அடிக்கிறேன் நீ அழுவுற மாதிரி அழு .. கட்ச தீவு கூட்டத்துல நடந்த உரையாடல் போன வருஷம் வெளில வந்துச்சு.. அதாவது, மிஸ்டர் கட்மரம் சொன்னது: இந்த முடிவுநாளா இங்க அரசியல் பிரச்னை வரும். நாங்க வழக்கம்போல தீர்மானம் போராட்டம் எல்லாம் செஞ்சிர்ரோம். இல்லன்னா மக்களை சமாளிக்க முடியாது.. தயவு செஞ்சி புரிஞ்சிக்கோங்கன்னு இந்திராகாந்திகிட்ட இன்பார்ம் செஞ்சிட்டு போட்டதுதான் நீ சொன்ன தீருமானம் .. மானம் உள்ளவன் / வரலாறு ஹெரிஞ்சவன் அதப்பத்தி பேசமாட்டான்


Professional
ஜன 22, 2025 16:36

வைகுண்ட்ஸ்: நோ இங்கிலீப்பீசு. வரலைன்னா வுட்ரு ..டுமீல் வால்க..


Mohammad ali
ஜன 22, 2025 16:48

வைகு ஏன் திருட்டு திமுகவுக்கு ஏன் இவ்வளவு முட்டு?


veera
ஜன 22, 2025 16:52

வைகுண்டம் தமிழ்ல சொன்னா அதுபுருடா...if English it is buruda....


Indian
ஜன 22, 2025 16:01

if we have this island we have nearly 40km sea in our indian own sea