மேலும் செய்திகள்
ராஜ்யசபா எம்.பி.,யாக 25ல் கமல் பதவி ஏற்பு
16-Jul-2025
புதுடில்லி: பிரதமர் மோடியை , ராஜ்யசபா எம்.பி.,யும், நடிகருமான கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வான நடிகர் கமல்ஹாசன் கடந்த ஜூலை 25ம் தேதி டில்லி சென்று எம்.பி.,யாக பதவியேற்று கொண்டார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vf09i5zb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், கமல்ஹாசன் இன்று ( ஆக.,7) பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். வீடியோவை காண லிங்கை கிளிக் செய்யவும்.https://www.youtube.com/shorts/ClJhq_eqNDcஇது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். ஒரு கலைஞனாகவும், தமிழகத்தின் பிரதிநிதியாகவும் அவரிடம் சில கோரிக்கைகளை தெரிவித்திருக்கிறேன். அவற்றுள் தலையாயது கீழடி.https://x.com/ikamalhaasan/status/1953415546629988672தமிழின் தொன்மையை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகிற்கு உரக்க சொல்லும் தமிழர்களின் முன்னெடுப்புகளுக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன். இவ்வாறு அந்த பதிவில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
16-Jul-2025