உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் துயர சம்பவம்: விஜய் கட்சி மாவட்ட செயலாளர் கைது

கரூர் துயர சம்பவம்: விஜய் கட்சி மாவட்ட செயலாளர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கரூர்: கரூரில் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கட்சியின் மாவட்ட செயலாளர் மதியழகன் இன்று கைது செய்யப்பட்டார்.கரூரில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் சார்பில் பிரசாரக் கூட்டம் வேலுச்சாமி புரத்தில் நடந்தது. இதில் ஏற்பட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 41 பேர் பலியாகினர். சம்பவம் தொடர்பாக விசாரித்த போலீசார் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், மாவட்டச் செயலாளர் மதியழகன் மீது வழக்கு பதிந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ryfefjlz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் விஜய் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக விஜய் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மேலும் சிலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

கூத்தாடி வாக்கியம்
செப் 30, 2025 15:25

எதற்காக இந்த கைது சாட்சிகளை களைக்கவா. ஒருத்தர் கேட்கிறார் 10 ஆயிரம் பேர் சொன்னது தப்புன்னு. அது போலீஸ் கு தெரியாதா . அப்புறம் கூட்டம் அதிகம் அயிட்டுது அதுவும் போலீஸ் க்கு தெரியாத....


Kasimani Baskaran
செப் 30, 2025 04:15

அரசியல் கட்சி ஆதரவாளராக இருந்தாலும் இல்லை என்றாலும் நாய் வாய்க்குள் கையை விட்டால் அது கடிக்கத்தான் செய்யும். அதே போல ஒருவரது கட்சி சார்பு கூட்ட நெரிசலில் இருந்து விலக்களிக்க முடியாது. இது திராவிட சமூக விஞ்ஞானிகளுக்கு புரியவில்லை என்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இப்பேர்ப்பட்ட அறிவாளிகளுக்கு ஓட்டுப்போடும் அறிவாளிகளை கண்டிப்பாக தற்குறிகளின் வரிசையில் முழு முன்னுரிமை கொடுக்கலாம். அரசிதழில் பெயர் ஆதார் எண்ணுடன் வெளியிட்டால் கூட தப்பில்லை என்பேன்.


நிக்கோல்தாம்சன்
செப் 30, 2025 03:41

என்ன அழகான சதி , கதை திரைக்கதை வசனம் ஜார்ஜு சோரோஸ் இந்த ஓபன் foundation என்றால் நம்பமுடிகிறதா ? இப்படி செய்தால் மக்களின் கவனம் திமுக , தவேக மீது மட்டும்தான் இருக்கமுடியும் என்பதனை அரசியல் விமர்சகர் பார்வையில் இருந்து .


Ramanujam Veraswamy
செப் 30, 2025 01:57

CM has said that action will be taken only after the report of one man commission but arrest of TMK Dist leader has been done by Police. Who is the control of Administration of the State?


Rajkumar Ramamoorthy
செப் 30, 2025 01:46

அப்போ போலீசுக்கு டிஸ்ட்ரிக்ட் கலெக்டருக்கு எந்த பொறுப்பும் இல்லையா? எதுக்கு அவர்களுக்கு ஜீப்? தா வே க , இளைஞர்கள், ட்ரான்ஸபார்மர் மீது, ஜெனெரேட்டர் மீது எல்லாம் ஏறி இருக்க கூடாது. இதனால் தான் பலி ஏற்பட காரணம் என்று சொல்கிறார்கள் .விஜய் அவரது தொண்டர்களை நல் வழி படுத்துவது அவர் தான் பொறுப்பு .


Murugesan
செப் 30, 2025 00:47

மக்களை காப்பாற்ற வக்கற்ற திமுக காவல்துறை , பத்து ரூபா சாராய உத்தமன் எப்பொழுது கைதாவார்


xyzabc
செப் 30, 2025 00:34

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் யாரையாவது கைது செய்தீர்களா?


Ramesh Sargam
செப் 30, 2025 00:12

அவர்கள் மேல் ஏற்கனவே பல வழக்குகள் இருக்கலாம். மேலும் ஒரு வழக்கா? மேலும் ஒரு பூ மக்கள் காதில் சொருகுகிறீர்களா? இதுபோன்ற வழக்குகள் எதுவும் முடிவுக்கு வராது, எதிலும் யாருக்கும் தண்டனை கிடைக்காது. வெறும் பூ சொருகள்தான் ...


சேகர்
செப் 29, 2025 23:22

இத்தனை உயிரை வேட்டையாடிய பனையூர் அசிங்கத்தை எப்ப?


Sun
செப் 29, 2025 22:43

நேற்று வந்த இவரை வெறும் கண் துடைப்புக்காக கைது கணக்கில் காட்டி உள்ளனர். பாவம் இவருக்கு என்ன அதிகாரம் உள்ளது?சனிக் கிழமை சகடை, புஸ்ஸி , இவர்கள் மீது தான் முதல் நடவடிக்கை தேவை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை