ஆன்மிகம் அறிவோமா
நம்பிக்கையுடன் செயல்படு
நம்பிக்கையுடன் செயல்படு. உன்னை விட்டு வேண்டாத பயம், நோய் விலகும். பலசாலியை விட மிதமாக கோபம் கொள்பவனே சிறந்த மனிதன். ஆசையின்றி இருப்பவரே பாக்கியவான். எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்பட்டால் லட்சியத்தை எளிதாக அடையலாம். நல்ல நோக்கம் ஆண்டவரால் நிச்சயம் நிறைவேறும். நன்மை செய்பவன் வாழ்வில் நன்மையை பெறுவான். வீண் விவாதம் கூடாது. ஏனெனில் அது தேவை இல்லாத சச்சரவை மட்டுமே உண்டாக்கும். - பைபிள்