உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழநி கோவிலுக்கான ரூ.100 கோடி நிலம் மீட்பு

பழநி கோவிலுக்கான ரூ.100 கோடி நிலம் மீட்பு

பழநி: பழநி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோவில் தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான, 1.40 ஏக்கர் நிலம் பழநி ஆண்டவன் பூங்கா ரோடு, சன்னிதி வீதியை இணைக்கும் வகையில் உள்ளது. இந்த இடத்தில் புதர் மண்டி முட்செடிகளுடன் இருந்தது. இது குறித்த வழக்கு பழனி சார்பு நீதிமன்றத்தில் நடந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி, தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான நிலத்தை நேற்று கோவில் இணை கமிஷனர் மாரிமுத்து தலைமையில் சுத்தம் செய்து கையகப்படுத்தினர். இந்த நிலம் 60 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு, 100 கோடி ரூபாய். இங்கு அத்துமீறி நுழைபவர்கள் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் நிர்வாகம் எச்சரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

திகழ்ஓவியன்
செப் 13, 2025 12:03

கடந்த 10 வருடம் மோடி மேற்பார்வையில் எடுபுடி ஆட்சி அப்போ இருந்த அறநலத்துறை என்ன செய்து கொண்டு இருந்தது


Vinayagam
செப் 13, 2025 10:53

அதிக தண்டனை கொடுத்தால், னுமதியின்றி ஆக்கிரப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து இடத்தை காலி செய்து விடுவார்கள்.


Iyer
செப் 13, 2025 08:43

தமிழ்நாட்டில் ஒரு மோடியை போன்ற தேசபக்தரின் சனாதன ஆட்சி உருவாக கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 13, 2025 08:18

யாரிடமிருந்து மீட்டார்கள்? அதை மட்டும் சொல்லமறுத்துவிடுகிறார்களே ஏன் ? கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அறுபது ஆண்டுகளாக அனுபவித்து அதன் மூலம் பல கோடிகளை சம்பாதித்து வந்தவருக்கு தண்டனை எதுவும் கிடையாதா?


தியாகு
செப் 13, 2025 07:11

இந்த நிலம் 60 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்டுள்ளது....விளங்கிடும் டுமிழ்நாட்டின் எதிர்காலம். ....தலைமுறை குடும்ப கொத்தடிமை கழக அடாவடி அடிமை இளிச்சவாய இந்து உடன்பிறப்புகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கட்டுமர திருட்டு திமுகவில் இருக்கும்வரையில் 60 ஆண்டுகள் அல்ல 600 ஆண்டுகள் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 13, 2025 07:56

எந்த பட்டாச்சாரியார் பிடியிலிருந்து மீட்டார்கள்?


திகழ்ஓவியன்
செப் 13, 2025 12:01

இப்படி தான் திருவண்ணாமலையில் சங்கர் என்கிற H ராஜாவின் FOLLOWER 50 கோடி இடம் மடக்கி லாட்ஜ் வெச்சி பணம் பார்த்தார் , அவரிடம் இருந்து மீட்டார்கள் அது மாதிரி இது எந்த பிஜேபி ஆள் மடக்கி இருந்தார்


Ravi
செப் 13, 2025 06:26

இது போல் ஒட்டன்சத்திரம் வட்டம் கேதையுறம்பு கிராமத்தில் உள்ள நிலங்களை எப்போது மீட்பீர்கள்


Iyer
செப் 13, 2025 06:25

இன்னும் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள கோயில் நிலங்களை கைப்பற்றி உள்ளார்கள் அவை அத்தனையும் மீட்டு அந்த நிலங்களில் இயற்கை விவசாயம் செய்து கோயில் ப்ரசாதத்திற்கு உபயோகிக்கணும்


ஜெய்ஹிந்த்புரம்
செப் 13, 2025 07:55

இறங்கி மாட்டை ஓட்டி உழுவாரு


முக்கிய வீடியோ