சில்மிஷ வாலிபருக்கு ஆயுள்
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், அணைக்கரையை சேர்ந்தவர் அன்பரசு, 23. இவர், அரியலுாரை சேர்ந்த, 18 வயது பெண் ஒருவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி, 2023, ஆக., 17ல், பலாத்காரம் செய்தார். ஜெயங்கொண்டம் மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில், அன்பரசை கைது செய்தனர். அரியலுார் மகளிர் நீதிமன்ற நீதிபதி மணிமேகலை விசாரித்து, அன்பரசுக்கு ஆயுள் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.