உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  திருப்பரங்குன்றம் மலைமேல் செல்ல இஸ்லாமியருக்கு மட்டும் அனுமதி: போலீசாருடன் உள்ளூர் மக்கள் வாக்குவாதம்

 திருப்பரங்குன்றம் மலைமேல் செல்ல இஸ்லாமியருக்கு மட்டும் அனுமதி: போலீசாருடன் உள்ளூர் மக்கள் வாக்குவாதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு, நேற்று காலை மலை மேல் செல்ல இஸ்லாமியர்கள் நான்கு பேருக்கு போலீசார் அனுமதித்ததால், அப்பகுதி குடியிருப்போர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மதுரை, திருப்பரங்குன்றம் தீபத்துாண் விவகாரம் காரணமாக மலை மேல் பக்தர்கள் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர். சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு, மலையில் உள்ள தர்காவிற்கு நேற்று இஸ்லாமியர்கள் நான்கு பேரை போலீசார் அனுமதித்ததை அறிந்து, உள்ளூர் மக்கள் திரண்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புதிய நடைமுறை அவர்களிடம், போலீஸ் உதவி கமிஷனர் சசிபிரியா, 'கடந்த ஆண்டுகளில் எப்படி கொடி இறக்கி, ஏற்றினார்களோ, அதுபோல் தற்போது கொடியை இறக்க செல்கிறார்கள். புதிய நடைமுறை ஏதும் இல்லை' என்றார். 'நீதிமன்ற தீர்ப்பின்படி தீபத்துாணில் தீபம் ஏற்ற எங்களை அனுமதிக்க மறுக்கிறீர்கள். ஆனால், நீதிமன்ற உத்தரவே இல்லாமல் இஸ்லாமியர்களுக்கு எப்படி அனுமதி அளிக்கிறீர்கள். முன்பு தீபத்துாணில் தீபம் ஏற்றியுள்ளனர். 'அங்கு தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் போலீசார் தான் தடுத்து நிறுத்தினீர்கள்' என, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 'அங்கு தீபம் ஏற்றியதை நீங்கள் பார்த்தீர்களா?' என, உதவி கமிஷனர் கேட்க, 'நாங்கள் பார்க்கவில்லை. எங்கள் மூதாதையர் பார்த்துள்ளனர். அவர்கள் பார்த்ததை எங்களிடம் கூறியுள்ளனர்' என்றனர். அதற்கு, உதவி கமிஷனர், 'கோர்ட்டில் வழக்கு உள்ளது' என்றார். கடும் கட்டுப்பாடுகள் 'கோர்ட் உத்தரவிட்டும் தீபம் ஏற்றுவதை தடுத்தது போலீஸ் தானே' என, திருப்பி கேட்ட பொதுமக்கள், 'எங்களுக்கு மலை மேல் தீபம் ஏற்றாமல் அவர்களது கொடியை ஏற்றக்கூடாது. எங்களை சுவாமி கும்பிடக்கூட மலைக்கு அனுப்ப மறுக்கிறீர்கள். ஆனால், அவர்களை கொடியேற்ற அனுமதிக்கிறீர்கள். இது என்ன நியாயம்? 'எங்கள் மலையில் நாங்கள் கும்பிடக்கூட எங்களுக்கு உரிமை இல்லாமல் போய்விட்டது' என, தொடர்ந்து வாக்குவாதம் செய்தனர். அதற்கு உதவி கமிஷனர், 'உங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுங்கள். உயர் அதிகாரிகளுக்கு அனுப்புகிறோம்' என்று கூறி சென்றார். அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது: மலை படிக்கட்டுக்கும், பெரிய ரத வீதிக்கும் இடையில் மலை அடிவாரத்தில் பழனி ஆண்டவர் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவில் நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கார்த்திகை தீபம் அன்று முதல் இன்று வரை அனைத்து இடங்களிலும் இரும்பு தடுப்புகளை அமைத்து வீட்டில் குடியிருப்பவர்களை கூட உள்ளே அனுமதிப்பதற்கு போலீசார் கடும் கட்டுப் பாடுகளை விதிக்கின்றனர். நாங்கள் ஏதோ குற்றம் செய்தவர்களை போல் எங்களிடம் நடந்து கொள்கின்றனர். மேலே உள்ள காசி விசுவநாதர் கோவிலுக்கு செல்ல எங்களையும் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

Vasan
டிச 23, 2025 10:44

இந்த செய்தியை படித்தால், மயிலாப்பூர் டிரஸ்ட் 5-ம் குறுக்கு தெரு வெங்கடராமன் மிக்க சந்தோஷப்படுவார்.


venkat subramanyam
டிச 21, 2025 20:51

That is not Sikandar Hill its name was given by the British & DMK. Traditionally, belongs only to Hindus, not invaders.


Richard Cunningham, Edinburgh
டிச 21, 2025 16:16

ISNT THE NAME OF THAT HILL SIKANDAR HILL? WHAT ARE HINDUS DOING THERE? THERE MUST BE A LIMIT FOR HINDUTVA EXTREMIST INVASION


Vasan
டிச 23, 2025 10:45

Are you a ?


Muralidharan S
டிச 21, 2025 15:34

இன்று இங்கே சென்னையில் ஒரு குப்பத்து கோயில் அருகில் திராவிஷ கட்சி இலவச பிரியாணி திருவிழா நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.. தேர்தல் நெருங்க நெருங்க இந்த குவாட்டர் திருவிழா.. எல்லாம் நடக்கும்.. கோவில்களில் வைத்து இலவசங்களை பணமும் திராவிஷங்களால் பட்டுவாடா செய்யப்படும்.. சொரணை இல்லாத ஹிந்துக்கள் அனைத்தையும் வாங்கிக்கொண்டு மீண்டும் திராவிஷங்களுக்கே ஓட்டுப்போட்டு ஆட்சியில் அமரவைப்பார்கள்.. அதன் பிறகு நடப்பதை பாருங்கள்.. ஹிந்துக்களுக்கு, இப்பொழுது நடப்பது எல்லாம் ஒன்றுமே இல்லை என்று ஆகிவிடும்... கோவிலுக்கு செல்லவே அறமற்ற துறைக்கு கப்பம் கட்டி.. கட்டணம் செலுத்தி அனுமதி வாங்கவேண்டும்.... தமிழகம் ஒரு பாகிஸ்தானாக மாறிக்கொண்டு வருகிறது..


கல்யாணராமன் மறைமலை நகர்
டிச 21, 2025 15:23

இப்போது புரிகிறதா மத அரசியல் செய்வது திருட்டு திராவிட மாடல் அரசுதான் என்பது. தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து இந்து அறநிலையத் துறையே மேல் முறையீடு செய்து இஸ்லாமியர்கள் மனம் குளிர வைத்தது, சந்தனக்கூடு விழாவுக்கு அனுமதி. முஸ்லிம்கள் மலை ஏற அனுமதி. இந்துக்களுக்கு மறுப்பு. இவர்கள் மதவாத வெறுப்பு அரசியல் செய்யவில்லை. இது தவறு என்று சொன்னால் பிஜேபி மதவாத வெறுப்பு அரசியல் செய்கிறது என்று கதறல். இந்த விடியா அரசே திட்டம் போட்டு கலவரத்தை உருவாக்கி பிஜேபி மீது பழி போட்டு அரசியல் ஆத்தாயம் தேடப் பார்க்கிறது என்பது மட்டும் புரிகிறது. இந்துக்கள் ஒன்றுபடுவோம். திருட்டு திராவிடத்தை வாக்குரிமை மூலம் விரட்டுவோம்.


Balasubramanian
டிச 21, 2025 13:28

படிக்கும் திருப்புகழ் போற்றுவன், கூற்றுவன் பாசத்தினாற் பிடிக்கும் பொழுது வந்து, அஞ்சல் என்பாய் பெரும்பாம்பில் நின்று நடிக்கும் பிரான் மருகா! கொடுஞ் சூரன் நடுங்கவெற்பை இடிக்கும் கலாபத் தனிமயில் ஏறும் என அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரம் பாடலில் இடம் பெற்ற அந்த முருக பெருமான் தான் இறங்கி வந்து தன் பக்தர்களை இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காக்க வேண்டும்


எஸ் எஸ்
டிச 21, 2025 12:50

இந்துக்கள் 2026 இல் ஓட்டு மூலம் பாடம் கற்பித்தால், தீபாவளி என்ன பிரதோஷம், பௌர்ணமிக்கு கூட விழுந்து விழுந்து வாழ்த்து சொல்வார்கள்


R.MURALIKRISHNAN
டிச 21, 2025 12:21

வரும் தேர்தலில் அடித்து விரட்டுவோம் திராவிட களவாணிகளை


Rathna
டிச 21, 2025 11:35

மானம் உள்ள ஹிந்துக்கள் உண்டியலில் பணம் போடுவதை நிறுத்துங்கள்.


M S RAGHUNATHAN
டிச 21, 2025 11:25

எனக்கென்னவோ போலீஸ் அதிகாரிகள் வேண்டும் என்றே இம்மாதிரி நடக்கின்றனர் என்று தோன்றுகிறது. இப்படி செய்வதால் எதிரிடையாக மக்கள் திமுக ஹிந்து விரோத அரசு என்று காட்ட விழைகிறது. போலீசார் தொடர்ந்து வரப் போகும் ஹிந்து பண்டிகை காலங்களில் இந்துக்களுக்கு எதிராக செயல் பட வேண்டும். பக்தர்களை கைது செய்து ஒரு 15 நாள் remand செய்தால், வரும் காலங்களில் கலவரம் நடக்காது.


சமீபத்திய செய்தி