வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அன்னதானம் 1% பேருக்கு போதுமானது . மீதி 99% வரும் யாத்தரியர் தானமாக உண்ணாமல் உணவு வாங்கி உட்கொள்ள போதுமான வசதிகள் அங்கு உள்ளன.
ஒரு நாளைக்கு வருவது பல கோடி வெறும் 1% அதாவது 1 லட்சம் பேருக்குதானா அன்னதானம்??புரியவில்லையே
உ பி யை விட முன்னேறிய மாநிலமான டுமீலு நாட்டுல சரக்கு, கோழி பிரியாணி, பணம் இல்லாம தேர்தல் இல்லை....
நீங்கள் பிறந்த மாநிலத்தை நீங்களே அவமரியாதையாக எழுதுகிறீர்களே. உங்களுக்கு நாட்டுப்பற்று கிடையாதா? எந்த மாநிலத்தில் மது இல்லை?? எல்லா மாநிலத்திலும் அரசாங்கம் தான் மது விற்கிறது. அப்புறம் ஏன் தமிழ்நாட்டில் மட்டும் மது விற்கிற மாதிரி புலம்புகிறீர்கள்???
மதிற்பிற்குரிய தினமலர் ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். தற்போது, உத்திரப்பிரதேசம் பிரயாக் ராஜில் மஹா கும்பமேளா நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. 144 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் இந்த மாபெரும் நிகழ்ச்சியில் பங்கேற்க, நம் நாட்டிலிருந்து மட்டுமல்லாமல் உலகெங்கிலும் வாழும் பக்தர்கள், கோடிக்கணக்கில் பங்கேற்று புனிதம் அடைந்து வருகின்றனர். அதே சமயம், என் போன்ற வயதானவர்கள், தங்கள் வயது மூப்பு காரணமாக, அங்கு செல்ல முடியாமல் ஏங்குகிறார்கள். மேலும் இனி 144 வருடங்களுக்குப் பிறகு அடுத்த மஹா கும்பமேளா நிகழும்பொழுது இந்தத் தலைமுறை மட்டுமின்றி அடுத்த தலைமுறையினரும் உயிருடன் இருக்க மாட்டார்கள். அவர்களின் மனக்குறையைத் தீர்க்க, இதற்கு முன்பு பல சமயங்களில் செய்தது போல, நம் இந்திய தபால் துறை முன் வந்து, உத்திரப்பிரதேச அரசின் உதவியுடன் திரிவேணி சங்கமத்தில் இருந்து, புனித நீரை போதுமான அளவு சேகரித்து பிளாஸ்டிக் பைகளிலோ, பாட்டில்களிலோ நிரப்பி, சீல் வைத்து, தேவையனவர்களின் விண்ணப்பத்தின் பேரில் வினியோகிக்கலாம். இதற்காக ஆகும் தொகையையும் பக்தர்களிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம். இந்த புனிதமான காரியத்தை தினமலர் நாளிதழ் முன்னெடுத்து செய்து கொடுத்தால் என் போன்ற வயதானவர்கள் மிகவும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்போம்.
Welcome to the suggestion
ஆஹா இதை பிசினஸ் செய்பவர்கள் படித்தால் உடனே இன்னும் 6 நாட்களில் விளம்பரம் ஆரம்பித்து விற்பனை கொடிகட்டிப்பறக்கும்