வழிப்பறி வழக்கில் தேடப்பட்டவர் கைது
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் அடுத்த மணம்பூண்டிமேடு பகுதியில், கடந்த 20ம் தேதி காலை 11:30 மணிக்கு, 60 வயது முதியவர் ஒருவர் வங்கியில் 65 ஆயிரம் பணம் எடுத்துக்கொண்டு வந்தார். பைக்கில் வந்த 2 பேர், பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.இதுகுறித்து, அரகண்டநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்ததில், பெரம்பலுார் தாலுகா, அரும்பாவூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் செந்தில்குமார், 37; என தெரிந்தது. நேற்று அந்த நபரை கைது செய்து, 65 ஆயிரம் ரூபாய் மற்றும் 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். வழக்கில் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.