ரூ.17.50 கோடியில் மருத்துவ கட்டடம்
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, பர்கூர்; நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை; கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி; திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி மருத்துவமனைகளில், கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. இதற்காக, ஒவ்வொரு மருத்துவமனைக்கும், தலா 3.50 கோடி ரூபாய் என, 17.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் செந்தில்குமார் வெளியிட்டுள்ளார்.