உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரையில் எம்ஜிஆர் சிலை சேதம்; கோழைகள் செய்த இழிசெயல் என இபிஎஸ் கண்டனம்

மதுரையில் எம்ஜிஆர் சிலை சேதம்; கோழைகள் செய்த இழிசெயல் என இபிஎஸ் கண்டனம்

சென்னை: மதுரையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை; மதுரை , திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதி வாடிவாசல் அருகே அமைந்துள்ள எம்ஜிஆரின் திருவுருவச் சிலையை சேதப்படுத்திய சம்பவம் பெரும் கண்டத்துக்குரியது. எம்ஜிஆரின் புகழையும், அவரது கொள்கைகளையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள் செய்த இழிசெயலாகவே இதை கருதுகிறேன். சிலையை சேதப்படுத்துவதன் மூலம் எம்ஜிஆர் செய்த சாதனைகளையும், அவரது புகழையும், அவர் தனது திட்டங்கள் மூலமாக மக்களிடையே ஏற்படுத்திய புரட்சியையும் சிறிதளவு கூட மக்கள் மனதில் இருந்து குறைக்கவோ, மாற்றவோ முடியாது. இச்செயலை செய்து, பொது அமைதியை சீர்குலைக்க நினைக்கும் சமூகவிரோதிகளை உடனடியாக கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை வலியுறுத்துகிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Vijay D Ratnam
அக் 06, 2025 14:51

எம்ஜிஆர் எனும் மாமனிதன் மறைந்து 38 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்றைக்கும் அவரது புகழ் கொஞ்சம் கூட குறையவில்லை. அவரால் தீயசக்தி என்று மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்ட மனிதன் அவர் மறைவுக்கு பிறகு 31 ஆண்டுகள் வாழ்ந்து எம்ஜிஆரின் புகழை கெடுக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. எம்ஜிஆர் இன்றைக்கும் இதய தெய்வம், வள்ளல், கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தமானவர் என்று கொடாடப்படுகிறார். ஆனால் எம்ஜிஆரின் தயவால் முதலமைச்சர் ஆன மனிதர் நன்றி மறந்து அவருக்கு எதிராக பல சதிகளை செய்த மனிதர் இன்றைக்கும் சண்டாளன், சதிகாரன் என்று பாடப்படுகிறார். ஃபாதர் ஆஃப் கரப்ஷன் என்று அடையாளம் காட்டப்படுகிறார். வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி - மக்களின் மனதில் நின்றவர் யார், மாபெரும் வீரர் மானங் காப்போர் சரித்திரந்தனிலே நிற்கின்றார் என்ற பாடல் எம்ஜிஆருக்கு மட்டுமே பொருந்தும்.


sundarsvpr
அக் 06, 2025 14:23

சேத படுத்தியவர் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனையை சட்டம் வழங்கும். சிலை நிறுவ சரியான இடம் உடல் புதைக்கப்பட்ட எரிக்கப்பட்ட இடங்கள் மட்டும். மற்ற இடங்களில் சிலைகள் வைப்பது சரியாய் இருக்காது. அப்படி வைத்தால் விருப்பப்பட்டவர் சொந்தமான இடத்தில வைக்கலாம். சிலைக்கு அரசு பாதுகாப்பிற்கு உட்பட்டு வராது


Vasan
அக் 06, 2025 11:57

ADMK should deploy round the clock security personnel for all statues of Dr.MGR in entire Tamilnadu, by deploying 3 security personnel per statue. ADMK can very well afford this expense, which will also give employment to needy people. They should also provide Cameras for surveillance, to identify the culprits, to take necessary legal action.


முக்கிய வீடியோ