உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.411 கோடி அரசு நிலம் அபகரிப்பு; அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீது அறப்போர் இயக்கம் புகார்!

ரூ.411 கோடி அரசு நிலம் அபகரிப்பு; அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீது அறப்போர் இயக்கம் புகார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன்கள் மூலம் ரூ.411 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்துள்ளதாக அறப்போர் இயக்கம், ஆதாரங்களுடன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநருக்கு புகார் அனுப்பி உள்ளது.தாவி, தாவி அமைச்சர் ஆனவர், அரசு நிலத்தை ஆட்டைய போட்டவர், அரசு நிலத்தை அபகரித்தவர் பற்றிய விவரங்களை வெளியிடுவதாக அறப்போர் இயக்கம் அறிவித்து இருந்தது. இதையடுத்து, தமிழக அரசியல் களத்தில் மட்டும் அல்லாது, எதிர்க்கட்சிகள் முகாமிலும் திடீர் பரபரப்பு பற்றிக் கொண்டது. இந்நிலையில் அந்த அமைச்சரின் பெயர் அவர் அபகரித்த நிலம் பற்றிய முழு விவரங்களையும் அறப்போர் இயக்கம் தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் வெளியிட்டு உள்ளது. அமைச்சர் ராஜ கண்ணப்பன். தமது மகன்கள் மூலம் ரூ.411 கோடி மதிப்புள்ள 5 ஏக்கர் நிலத்தை(சென்னை ஜி.எஸ்.டி. சாலையில் இந்த நிலம் உள்ளது) அதிகாரத்தை பயன்படுத்தி அபகரித்துள்ளார். அந்த நிலத்தை தமது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்று கூறி முழு ஆதாரங்கள், ஆவணங்களை தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநருக்கு புகாராக அனுப்பி இருக்கிறது. அறப்போர் இயக்கத்தின் தலைவர் ஜெயராமன் இந்த புகாரை அளித்துள்ளார்.இது தொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையின் முழு விவரம் வருமாறு; அமைச்சர் ராஜ கண்ணப்பன் தன்னுடைய மகன்கள் மூலமாக ரூபாய் 411 கோடி மதிப்புள்ள கிட்டத்தட்ட ஐந்து ஏக்கர் சென்னை ஜிஎஸ்டி சாலையில் உள்ள அரசு நிலத்தை அபகரித்துள்ளார். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அந்த அரசு நிலத்தை தன்னுடைய குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இதற்கான ஆதாரங்களை அறப்போர் இயக்கம் புகாராக லஞ்ச ஒழிப்பு துறை, முதல்வர், துணை முதல்வர் தலைமைச் செயலர் வருவாய் துறை அமைச்சர் மற்றும் வருவாய் துறை செயலர்களுக்கு அனுப்பியுள்ளது.இந்த அரசு நிலம் உடனடியாக மீட்கப்பட்டு அமைச்சர் ராஜ கண்ணப்பன் உட்பட இதில் சம்பந்தப்பட்ட அனைத்து பொது ஊழியர்கள் மீதும் FIR பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அரசு நிலம் ஜிஎஸ்டி சாலையில் ஆலந்தூர் மெட்ரோவிற்கும் நங்கநல்லூர் மெட்ரோவிற்கு இடையே BSNL அலுவலகத்திற்கு அடுத்த படி உள்ள பரங்கிமலை கிராமம் சர்வே எண் 1353 எண் 12, GST சாலை. இந்த நிலம் அரசு நிலம் தான் என்பதற்கான வருவாய்த்துறை பதிவேடு நகலை புகாருடன் இணைக்கப்பட்டுள்ளது.சர்வே எண் 1353 என்பது 4 ஏக்கர் 31,378 சதுர அடி கொண்டது மற்றும் சர்வே எண் 1352 என்பது 12964 சதுர அடி கொண்டது. இவை இரண்டும் புறம்போக்கு நிலங்கள் என்று வருவாய்த்துறை பதிவேட்டில் உள்ள ஆதாரங்கள் புகாருடன் இணைக்கப்பட்டுள்ளது.முக்கியமாக 2015ல் ஆலந்தூர் தாசில்தார் சென்னை தெற்கு இணை அலுவலகம் இரண்டு சார் பதிவாளர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், சர்வே எண் 1353, 1352 மற்றும் பல சர்வே எண்கள் அரசின் காலம் கடந்த குத்தகை நிலங்கள் என்றும் இந்த நிலங்கள் தற்பொழுது அரசு நிலங்கள் என்றும், இந்த சர்வே எண்களில் எந்தவிதமான பத்திரப்பதிவும் செய்யக்கூடாது என்றும், இதற்கு முன்பாக யாராவது செய்திருந்தால் அதை ரத்து செய்து தாசில்தாருக்கு அறிக்கை அனுப்பும் படி கேட்டுள்ளார். பரங்கிமலை கிராமத்தில் உள்ள பெரும்பாலான அரசு நிலங்கள் பிரிட்டிஷ் ஆட்சி செய்த பொழுது சிலருக்கு குத்தகை கொடுத்து பிறகு சுதந்திரம் அடைந்ததும் இந்த நிலங்கள் மீண்டும் அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. டெக்கான் ஃபன் ஐலேண்ட் அண்ட் ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் தற்போதைய இயக்குனர்களாக இருப்பவர்கள் அமைச்சர் ராஜ கண்ணப்பனின் மகன்கள் பிரபு, திவாகர் மற்றும் திலீப் குமார். மேலும் இவர்கள் மூவரும் தான் இந்த நிறுவனத்தின் தற்போதைய பங்குதாரர்களாகவும் உள்ளனர்.சர்வே எண் 1353 மற்றும் சர்வே எண் 1352 நிலங்களை அபகரிப்பதற்காக இந்த நிறுவனம் 1991 முதல் 2018 வரை பல பத்திரபதிவுகளை செய்துள்ளது. 4.52 ஏக்கர் அளவிற்கு பத்திரபதிவு செய்ததற்கான ஆதாரங்களை புகார் உடன் இணைக்கப்பட்டுள்ளன.கடந்த 1990களில் காதியா பெயரில் இருந்த இந்த டெக்கான் ஃபன் ஐலேண்ட் அண்ட் ஹோட்டல்ஸ் லிமிடெட் ராஜ கண்ணப்பனின் மகன்கள் பெயருக்கு மாறுகிறது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக அமைச்சர் ராஜ கண்ணப்பனின் மூன்று மகன்கள் தான் இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் பங்குதாரர்கள்.முக்கியமாக 2015ல் ஆலந்தூர் தாசில்தார் இந்த சர்வே எண்ணில் எந்த பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று தெரிவித்த பின்பும் மற்றும் இதற்கு முன்பாக பதிவு செய்தவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று சொன்ன பிறகும் அந்த பத்திரப்பதிவுகள் எதுவும் இன்றுவரை ரத்து செய்ய வில்லை. இந்த கடிதத்திற்கு பிறகும் கூட 2018ல் இந்த நிலத்தை ஏழு லட்சத்திற்கு அடகில் இருந்து மீட்டது போல் டெக்கான் ஃபன் ஐலண்ட் அண்ட் ஹோட்டல்ஸ் லிமிடெட் பத்திரபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பத்திரப்பதிவின் பொழுது அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகன்கள் தான் இந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் மற்றும் இயக்குனர்கள்.கடந்த ஆண்டு 1352 சர்வே எண்ணில் உள்ள 12984 சதுர அடி நிலம் மீட்கப்பட்டதாக அதன் வாசலில் வட்டாட்சியர் பல்லாவரம் பலகை வைத்துள்ளார். ஆனால் அதற்கு அருகிலேயே உள்ள கிட்டத்தட்ட 4.75 ஏக்கர் அளவிற்கு அமைச்சர் ராஜ கண்ணப்பனின் மகன்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள சர்வே எண் 1353 அரசு நிலங்களை இன்று வரை மீட்கவில்லை.அரசு வழிகாட்டி மதிப்பு படி பார்த்தால் இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு 1 சதுரடிக்கு ரூ 11000 ஆகும். எனவே 205618 சதுரடி நிலத்தின் மதிப்பு ரூ 226 கோடி ஆகும். இந்த இடத்தில் சந்தை மதிப்பு குறைந்த பட்சம் 1 சதுரடிக்கு ரூ 20000 ஆகும். இதன் படி இன்றைய மதிப்பு ரூ 411 கோடி ஆகும்.அமைச்சர் ராஜ கண்ணப்பனின் அழுத்தத்தினால் வருவாய்த்துறை இந்த நிலத்தை மீட்காமல் உள்ளது. ராஜ கண்ணப்பன் தன் மகன்கள் பெயரில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் சொத்து சேர்ப்பதற்காக தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சொத்துக்களை சேர்த்து உள்ளார் என்று தெரிகிறது. இந்த நிலத்தை உடனடியாக அரசு மீட்க வேண்டும். அரசு நிலத்தை பத்திரப்பதிவு செய்வது சட்டவிரோதமாக இருந்தாலும் அதை தொடர்ந்து இந்த நிறுவனம் செய்து வந்துள்ளது. எனவே அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவரது மகன்கள் மற்றும் இதை மீட்டெடுக்காத வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் சட்டவிரோதமாக பத்திர பதிவு செய்த அதிகாரிகள் போன்றோர் மீது உடனடியாக FIR பதிவு செய்து விசாரிக்கும் படி அறப்போர் இயக்கம் கேட்டுக்கொள்கிறது.இவ்வாறு அறிக்கையில் அறப்போர் இயக்கம் குறிப்பிட்டு உள்ளது. மேலும், தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் தாம் கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக கிட்டத்தட்ட 101 பக்கங்கள் கொண்ட நில அபகரிப்பு சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் அறப்போர் இயக்கம் இணைத்துள்ளது.பதவியில் இருக்கும் ஒரு அமைச்சர், அவரது மகன்கள் மீது அறிவித்தபடி ஊழல் முறைகேடு, நில அபகரிப்பு புகார்கள் வெளியிடப்பட்டு உள்ளது, தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கி இருக்கிறது.

யார் இந்த ராஜ கண்ணப்பன்

அமைச்சர் ராஜ கண்ணப்பன் தி.மு.க.,வில் தற்போது இருக்கிறார். 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா அமைச்சரவையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின் துறையின் அமைச்சராக இருந்தார். அதன்பிறகு 2000ம் ஆண்டு மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியை நிறுவினார். இந்த கட்சி, 2001ம் ஆண்டு தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்டது. 2006ல் கண்ணப்பன் கட்சியை கலைத்து விட்டு தி.மு.க.,வில் இணைந்தார். 2006ல் தி.மு.க., சார்பில் இளையான்குடியில் போட்டியிட்டு வென்றார்.2009ல் தி.மு.க.,வில் இருந்து விலகி அ.தி.மு.க.,வில் இணைந்தார். அப்போது நடந்த லோக்சபா தேர்தலில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவினார். சில காலத்துக்கு பிறகு மீண்டும் தி.மு.க.,வில் இணைந்தவர், இப்போது அமைச்சராக இருக்கிறார்.

விளக்கம்

இது தொடர்பாக அமைச்சர் ராஜகண்ணப்பன் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: மாவட்ட நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகளை மறைத்து, என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் தவறான தகவல்களை, பத்திரிகைகள் மூலம் அவதூறு பரப்பி வருகிறவர்களை சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்பேன்! எனக்கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 101 )

V RAMASWAMY
அக் 25, 2024 09:39

மக்கள் வரிப்பணம் எப்படியெல்லாம் சுருட்டப்படுகிறது, மந்திரிகள் இப்படியென்றால், எம் ஏக்கள், கவுன்சிலர்கள், அதிகாரிகள், இவர்களெல்லாம் எப்படி சுருட்டுவார்கள் என்பதை ஓட்டளித்த வாக்காளர்கள் கவனிக்கவேண்டும், உணர்ந்து ஏதோ ஒரு நாள் சுவைக்காக பிரியாணியும் பாட்டிலும், ஒரு வாரத்திற்கும் போதாத இலவசப்பணம் பெரும் மக்கள் வரும் தேர்தலில் அறிவுபூர்வமாக வாக்களிக்கவேண்டும் .


ஆரூர் ரங்
அக் 22, 2024 22:08

திமுக அமைச்சர்கள் அதிமுக வில் இருந்த போது செய்த ஊழல்களுக்கு திமுக எப்படி பொறுப்பாக முடியும்? (அவர்களுக்கு அந்த திறமை இருப்பதால்தானே கழகத்தில் சேர்த்துக் கொண்டோம்.?)


Palanisamy Sekar
அக் 22, 2024 19:35

தமிழக வரலாற்றிலேயே ஊழலில் சிக்கிய அமைச்சர் பெருமக்களின் எண்ணிக்கை எப்போதுமே இருந்ததில்லை. எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்று தனக்குத்தானே புகழ்ந்துகொண்டு புளங்காகிதம் அடைகின்ற ஸ்டாலின் இதன் பின்னரேனும் சம்பந்தப்பட்ட கண்ணப்பன் மீது உடனே நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும். வெள்ளையறிக்கை மூலம். இந்தந்த அமைச்சர்கள் மீது இவ்வளவு ஊழல் புகார்கள் விசாரணையில் உள்ளது, இவர்கள் மீது கோர்ட் நடவடிக்கை உள்ளது. விசாரணையில் இருக்கும் அமைச்சர்களை பதவி விலக சொல்லி விசாரணை நேர்மையாக நடக்க முயற்சி செய்வாரா ஸ்டாலின். ஊருக்கு ஒரு நியாயம், பதவிக்கு வந்தபிறகு இன்னோர் முகம் என்று காட்டுவது சரியல்ல. இனி ஊழல் அமைச்சரவையின் முதல்வர் என்று ஸ்டாலின் பெருமையாக சொல்லிக்கொள்வாரா? இந்தியாவிலேயே தமிழக அமைச்சரவையில் மட்டும்தான் ஊழல்வாதிகள் நிறைந்த அமைச்சரவையாக இருப்பது தான் திராவிட மாடல் ஆகுமோ? தமிழர்கள் ஒருபோதும் இப்படி ஊழல் செய்து ஊரான் வாயில் விழுந்து பிழைக்க மாட்டார்கள். இந்த திராவிடர்கள் மட்டும்தான் இப்படியும் வாழ்வார்கள். ஸ்டாலின் தமிழனாக நேர்மையாக இருக்கப்போகிறாரா? அல்லது ஊழலில் உச்சம் தொட்டுகொண்டுள்ள அமைச்சர்களை வைத்துக்கொண்டு தன்னை திராவிடன் என்று சொல்லிக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அருவருப்பாக இருக்கிறது. நிஜமாகவே சொல்கின்றேன்... ஆட்சியை கலைத்துவிட்டு போகலாம்...ச்சை எவ்வளவுதான் எழுதுறது? திருந்த மாட்டேங்கிறாங்களே.. ஓட்டுப்போடுவோரையும் சேர்த்தே சொல்கின்றேன்


Anantharaman Srinivasan
அக் 22, 2024 19:22

படிப்போம் விடியலரசை காறிதுப்புவோம். மறப்போம். பொதுமக்களாகிய நம்மால் வேறென்ன செய்ய முடியும். மீறி முறைத்துக்கொண்டு நின்றால் கஞ்சா கேஸ் பாய்ந்து வரும்.


Indian
அக் 22, 2024 19:07

ஊழல் ஊழல் ஊஊ


GMM
அக் 22, 2024 18:33

பிரிட்டிஷ் கால குத்தகை முடிந்தவுடன் நிலம் தானே அரசுக்கு / உரிமையாளருக்கு மாறிவிடும்.1. கிராம , டவுன், வருவாய் சர்வே எண் 2. வார்டு, பழைய வார்டு, தேர்தல் வார்டு, 3 . கதவு எண் பலமுறை மாறி இருக்கும். குத்தகை பத்திரத்தில் /மூல பாத்திரத்தில் உள்ள விவரம் அடுத்த பதிவில் இருக்காது. ? பட்டா பெற்று நில பதிவு இருக்காது. வரி பாக்கியில்லை என்ற சான்று கேட்க மாட்டார்கள். நில மோசடிக்கு பத்திர பதிவு பெரிதும் உதவும். திராவிட நில அபகரிப்பை நிரூபிக்க முடியாது. நில அபகரிப்பு குறைய அனைத்து பதிவை ரத்து செய்து, கிரய பத்திர அடிப்படையில் கட்டணம் நிர்ணயித்து மறு பதிவு செய்ய வேண்டும்.


P.Sekaran
அக் 22, 2024 18:21

இந்த மாதிரி ஊழல் செய்யும் அமைச்சர்களை களையெடுப்பது மக்கள் சக்திக்கு தான் உள்ளது. அவர்களுக்கு காசை கொடுத்து ஓட்டு வாங்கும் கும்பல் இருக்கும் வரை இவர்கள் கொட்டம் இருக்கும். இப்பொழுது இருக்கும் அமைச்சர்களில் ஊழல் செய்யாதவர்கள் ஒருவரும் இல்லை என்றுதான் சொல்ல தோன்றுகிறது. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்றுதான் எல்லா அமைச்சர்களின் போக்கு இருக்கிறது. சுரண்டியது வரைக்கும் ஆதாயம் என்று உள்ளனர். இதற்கு 2026 தேர்தல்தான் பதில் சொல்ல வேண்டும்.


Rajarajan
அக் 22, 2024 18:03

ஒரு அரசியல்வாதி கட்சிக்கு பலகோடி நிதி எப்படி தர முடிகிறது ?? எங்கிருந்து வருகிறது ? அதை தாண்டி லாபம் எடுக்க, எப்படி எல்லாம் செயல்படுவார் ? தேர்தலுக்கு முன்னர் அவரது சொத்து மதிப்பு எவ்வளவு. பதவி முடியும்போது அவரது சொத்து மதிப்பு எவ்வளவு. இதையெல்லாம் கண்டுபிடித்து தெரிந்தாலே போதும். அவரது தகுதி தெரியும். நாம் தான் அதை செய்வதில்லையே. ஒன்று கட்சியை பார்ப்போம் அல்லது தலைவனை பாப்போம் அல்லது இலவசம் / குவார்ட்டர் / ரூபாய் / சலுகைக்கு மயங்கி வாக்களிப்போம். அதுசரி, இப்போது தெரிகிறதா, ஏன் அரசியல்வாதி ஆகி பதவிக்கு வர துடிக்கின்றனர் மற்றும் தங்கள் வாரிசுகளை தொடர்ந்து அரசியலில் பதவிக்கு சுய மரியாதை இழந்து தொடர்கின்றனர் என்று. எல்லாம் கலிகாலம்.


சாண்டில்யன்
அக் 23, 2024 17:33

மோடி தேர்தல் பத்திரம் வெளியிட காரணம் என்னவென்றும் மாற்றுக் கட்சிகளை சகல வித்தைகளாலும் அழிக்க துடிப்பதேன் என்றும் விளக்க வேண்டும்


kovanandi
அக் 22, 2024 17:54

3 வருடத்தில் 30000 கொள்ளை பெருசா? - 1991 முதல் இன்றுவரை கொள்ளை அடித்த 411 கோடி பெருசா...திராவிடத்திற்கு வந்த கேவலம்.


Ramesh
அக் 22, 2024 17:53

இவர் ஒரு தெலுங்கர் அதனால் இது மறக்கப்பட்டு விடும்


raja
அக் 23, 2024 05:00

இல்லை நண்பா பக்கா தமிழ் கோனார் ..


புதிய வீடியோ