உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அமைச்சர் சுப்பிரமணியன் அட்மிட்

 அமைச்சர் சுப்பிரமணியன் அட்மிட்

சென்னை: மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை, ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், நேற்றிரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து பல்வேறு அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த அமைச்சர் சுப்பிரமணியனுக்கு, சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து, நேற்று முன்தினம், கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், அவர் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து, அன்றைய தினமே, வீடு திரும்பி, ஓய்வில் இருந்து வந்தார். ஆனாலும், காய்ச்சல் தொடர்ந்ததால், நேற்றிரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருவதாக, தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Mecca Shivan
பிப் 26, 2026 09:48

தனியார் மருத்துவமனையில் உயரிய சிகிச்சை அளித்துவருகின்றனர். அவரது வீட்டிற்கு அருகே உள்ள கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் மிக சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதாக அவர் சொன்னது பொய்யா? அந்த வளாகத்தில் உள்ள மத்திய அரசின் முதியோருக்கான சிறப்பு சிகிச்சை மைய்யமும் உண்மையில் சிறப்பாக செயல்படுகிறது. அங்கே சென்றிருக்கலாமே ?


Bala Sethuram
பிப் 25, 2026 06:28

கார்பொரேட் கம்பெனி ஆஸ்பத்திரிக்கா சார் போனாரு? நம்பவே முடியலையே கஞ்சாவே இல்லாத தமிழ்நாட்டுலே அவரு உண்மையான மானஸ்தனாச்சே அப்படியே நாங்க ஸாக் ஆயிட்டோம் போங்க


சோலை பார்த்தி
பிப் 25, 2026 04:52

மாநில சுகாதார மந்திரி மாநில அரசு மருத்துவமனைக்கு செல்லாமல் தனியார் மருத்துவமனை செல்கிறார் என்றால் இவரின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவமனையின் தரம் குறைவு என்று தானே அர்த்தம்.. அப்படியென்றால் இவர் சுகாதார மந்திரியாக இருக்க தகுதி இருக்கா மக்களே... சிந்தியுங்கள்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை