உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: மீண்டும் விசாரிக்க உத்தரவு

அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: மீண்டும் விசாரிக்க உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : சொத்துக் குவிப்பு வழக்கில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், அவர்கள் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிராக, அ.தி.மு.க., ஆட்சியின் போது வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் மேல் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறை, அறிக்கையை, சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தன. அதன் அடிப்படையில், வழக்கில் இருந்து இவர்களை விடுவித்து, சிறப்பு நீதிமன்றங்கள் உத்தரவிட்டிருந்தன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g6iu3zd7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த உத்தரவுகளை மறுஆய்வு செய்யும் விதமாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கைகளை விசாரணைக்கு எடுத்தார். இரு தரப்பிலும் மூத்த வழக்கறிஞர்களின் வாதங்கள் முடிந்த நிலையில், இன்று (ஆக.,7) உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, தங்கம் தென்னரசு மற்றும் ராமச்சந்திரனை வழக்கில் இருந்து விடுவித்த கீழமை நீதிமன்றங்களின் உத்தரவை ரத்து செய்ததுடன், அவர்கள் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்கவும் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

panneer selvam
ஆக 07, 2024 17:50

Again if they conduct judicial enquiry at lower courts , then all the witnesses will turn hostile and many documents will be disappeared so victory is sure for our DMK ministers


sankar
ஆக 07, 2024 15:38

தண்டனையை அறிவிக்காமல் எதற்கு இந்த இழுத்தடிப்பு ?


theruvasagan
ஆக 07, 2024 15:28

மறுபடியும் மொதல்ல இருந்தா. பயங்கரமா வெடிக்கும்னு எதிர்பார்த்தது நமுத்துப் போய் புஸ்வாணமாகிடுச்சே. இதுக்கா இத்தனை நாளா இத்தனை பில்டப்பு. ஆண்டவனே. உன்னாலதான் நல்லது நடக்கணும். இங்க யாரையும் நம்ப முடியல.


பச்சையப்பன் கோபால்புரம்
ஆக 07, 2024 14:18

செம! அவர்கள் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பு வரும் வரை விசாரிக்கப்பட வேண்டும். இவர்கள் மீதுவழக்கு போட்டவரைநீதி மன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடித்ததற்க்காக தண்டிக்பட்டு மற்றவர்களுக்கு பாடமாக இருக்கவேண்டும்


Raman
ஆக 07, 2024 14:05

கடைசியில் வயது முதிர்வுனு


Ganesh Subbarao
ஆக 07, 2024 14:27

ஹா ஹா ஹா. அப்படித்தான் நடக்கும்


Anand
ஆக 07, 2024 13:56

குளோசப்பில் போட்டு மேலும் பயமுறுத்துகிறீர்கள்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 07, 2024 13:48

அமைச்சர்களை குற்றவாளிகளை தப்பிக்க வைக்க வழங்கப்பட்ட தீர்ப்பு. அவசர நிலை பிரகடன காலத்தில் சிறைப்பட்ட திமுக பிரபலங்கள் அனைவரும் விடுதலை ஆன பின், தங்கள் பெயருக்கு முன்னால் மிசா என்று பட்டங்களை சுமந்துகொண்டனர். இன்றைய அமைச்சரவையில் பொன்முடி துவங்கி அனைவருமே மிக மிக நேர்மையானவர்களாகவே இருக்கிறார்கள். அதனால், இன்றைய அமைச்சர்கள் அனைவரையும் பெயர்களுக்கு முன்னால் புனிதர் என்று கூறி விளிக்கலாம்.


ராமகிருஷ்ணன்
ஆக 07, 2024 13:46

முழு களவாணிகள் என்று தெரிகிறது. இதுலே விசாரணை, வழக்கு என்று நேரத்தை வீணாக்காமல் உள்ளே போடுங்க


Sridhar
ஆக 07, 2024 13:37

ஆக வக்கீல்களுக்கு கொண்டாட்டம்தான் ஆனானப்பட்ட பொன்முடியையே இன்னும் சட்டம் தன வலைக்குள் கொண்டுவரமுடியவில்லை. எல்லா அமைச்சர்களுக்கும் நீதிமன்றங்கள்தான் பாதுகாப்பு அரணாக விளங்குகிறதே வக்கீல்கள் இருக்காங்க, நீதிபதிகள் இருக்காங்க, செலவழிக்க பணம்வேற நிறையவே இருக்கு, அப்புறம் என்ன, கொண்டாட்டம்தான்


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 07, 2024 13:36

பயனற்ற தீர்ப்பு. மீண்டும் விசாரிக்கையில் பல சாட்சிகள் மிரட்டப்படுவார்கள். பிறழ் சாட்சியாவார்கள். முடிவில் வழக்கு ஆதாரம் இல்லையென்று தள்ளுபடி ஆகும். கொள்ளையடித்த பணம் மட்டும் குதூகலத்துக்கு பயன்படும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை