இன்று முதல் 12 வரை மிதமான மழை பெய்யும்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் ஒரு சில இடங்களில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
பூமத்திய ரேகையை ஒட்டிய, இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இருந்து தமிழகம் வரை, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வரும், 12ம் தேதி வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. உள்மாவட்டங்களில் பொதுவாக வறண்ட வானிலை காணப்படும்.தமிழகத்தில் இன்றும், நாளையும் காலை வேளையில், லேசான பனி மூட்டம் காணப்படும். நீலகிரி மாவட்டத்தில் மலைப்பகுதிகளில், இரவு நேரத்தில் சில இடங்களில் உறைபனி நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.