உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழர்கள் மீது மோடியின் அளவற்ற அன்பு; மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பேச்சு

தமிழர்கள் மீது மோடியின் அளவற்ற அன்பு; மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பேச்சு

மதுரை; பிரதமர் மோடி தமிழர்கள் மீது அளவற்ற அன்பு வைத்துள்ளார் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.மதுரை மேலுார் பகுதி டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்காக அப்பகுதி மக்கள் நடத்திய பாராட்டு விழாவில் பங்கேற்ற கிஷன் ரெட்டி பேசியதாவது:பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் ஏராளமான அன்பை தெரிவித்துள்ளனர். தமிழர்களின் பெருமை, பாரம்பரியம், பண்பாட்டை உலகம் முழுவதும் மோடி கொண்டு செல்கிறார். தமிழர்கள் மீது தனிப்பட்ட முறையில் பற்றுக் கொண்டு செங்கோலை பார்லிமென்ட்டில் நிறுவி பெருமை சேர்த்துள்ளார்.ஜல்லிக்கட்டுக்கு பிரச்னை வந்து போது அதை மீட்டு தந்தவர் பிரதமர் மோடி. தமிழ் பண்பாட்டை காப்பதற்காக அனைத்து பணிகளையும் செய்து வருகிறார் மோடி. தமிழ்ச் சங்கமம், சவுராஷ்டிர தமிழ் சங்கமம் நடத்தி காட்டியவர். இது குஜராத்திற்கும் தமிழகத்திற்கும் பண்பாட்டு சின்னமாக திகழ்ந்தது. தமிழக மீனவர்கள் இலங்கையில் சிக்கலுக்கு ஆளாகும்போது அவர்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் தந்தவர் மோடி.தமிழக மக்கள் தேசியத்தையும் மோடியையும் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

madhes
ஜன 31, 2025 12:12

பிறகு எதற்க்கு டங்ஸ்டன் னு கு அனுமதி தந்தது


Ray
ஜன 31, 2025 14:13

இதென்ன கேள்வி? சீண்டுனாதான் குழப்பம் விளையும் கலகம் பண்ணலாம் சட்டம் ஒழுங்கு சரியில்லைன்னு ஸ்டேட்மென்ட் விடலாம் அண்ணாமலை பேர்வாங்க மைக் புடிப்பாரு டில்லிக்கு ஓடுனாரு அவர் சொன்னா யாரும் நம்பவில்லை ஒன்னும் நடக்கல பிறகு கொஞ்சப்பேர் ஏற்பாடு பண்ணி டில்லிக்கு காவடி எடுத்தாரு இப்போ ஸ்டாலின் எதிர்க்கல அதனால குடுத்தங்களாம் இப்போ சட்டசபைல தீர்மானம் போட்டா ரத்து செய்வோமா என்ன மதுரை மக்களின் போராட்டம் மாதக் கணக்கில் நடந்ததால் டெண்டரை ரத்து பண்ணிட்டாங்களாம் உண்மையில் அதனிக்கு அடுத்த சக்திவாய்ந்த வேதாந்தாவின் அழுத்தம்தான் டெண்டர் தமிழ்நாட்டை விட்டு ஓடிடுவோமான்னு சவால் டில்லி எல்லையில விவசாயிகள் பலகாலமா போராடுறதுதான் கண்ணிலேயே படலையாம்


Ray
ஜன 31, 2025 10:28

தமிழ்நாட்டுல உள்ள சிந்திக்க முடிந்த தமிழர்களுக்கு இதெல்லாம் இப்போ நீங்க சொல்லித்தானா தெரியணும்? நெல்லை தூத்துக்குடியில் கொட்டித் தீர்த்த புயல் வெள்ளத்தப்போ ரெண்டுநாள் நடுவழியில் நின்று போன ரயில்ல சோத்துக்கு வழியில்லாம தவிச்சபோது பக்கத்து கிராம ஜனங்கள் ஓடிவந்து பசியாத்தினப்போவே அத பத்தியெல்லாம் அவர் ஒரு வார்த்தை சொல்லாதபோதே - பிசியா சினிமா பார்த்தாரே அப்போதே தெரிஞ்சுக்கிட்டோம். இந்த ஊர் மக்களின் மீது எவ்வளவு பாசம் அளவில்லாத அன்பையும் தெரிஞ்சுக்கிட்டோமே அதனாலதான் ஆபிகானிஸ்த்தான் தாலிபான்களுக்கு ஐம்பதாயிரம் டன் கோதுமை அனுப்பின அவர் ஒரு சல்லிக் காசுத்தற முன்வரவில்லை. இதெல்லாம் புரிஞ்சுக்காம இன்றைய செலவுக்காக ஒங்க பேச்சைக் கேட்க இதோ வந்திருக்காங்களே அவங்களைத்தான் நொந்துக்கணும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை