உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ம.பி., குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்: காஞ்சிபுரம் இருமல் மருந்து ஆலை உரிமையாளர் கைது

ம.பி., குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்: காஞ்சிபுரம் இருமல் மருந்து ஆலை உரிமையாளர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மத்தியப்பிரதேசத்தில் இருமல் மருந்து குடித்த குழந்தைகள் 20 பேர் உயிரிழந்த சம்பவத்தில், கோடம்பாக்கத்தில் தங்கியிருந்த கோல்ட்ரிப் உரிமையாளர் ரங்கநாதனை மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் செயல்படும், 'ஸ்ரீசென் பார்மா' நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட, 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து உட்கொண்டு, மத்திய பிரதேசத்தில் 20 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. குழந்தைகளின் சிறுநீரக செயழலிப்புக்கு காரணமாக கூறப்படும் இருமல் மருந்தில், பெயின்ட், மை போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்படும் 'டை எத்திலீன் கிளைசால்' என்ற ரசாயன வேதிப்பொருள் இருந்ததும் கண்டறியப்பட்டது. இச்சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுதும் அம்மருந்து பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கோல்ட்ரிப் மருந்து, தமிழகத்தில், 2,000க்கும் மேற்பட்ட பாட்டில்கள், சில்லரை மற்றும் மொத்த விற்பனையகங்களில் இருக்கலாம் என தெரிகிறது.அம்மருந்துகளை, மக்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில், அவற்றை பறிமுதல் செய்து, சென்னையில் உள்ள மருந்து கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆலை உரிமையாளர் ரங்கநாதனை கைது செய்ய போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று (அக் 09) கோடம்பாக்கத்தில் தங்கியிருந்த கோல்ட்ரிப் உரிமையாளர் ரங்கநாதனை மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை