உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்; மதுரையில் நயினார் நாகேந்திரன் பேட்டி

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்; மதுரையில் நயினார் நாகேந்திரன் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: ''தி.மு.க.,வை வீழ்த்த த.வெ.க., உட்பட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்'' என மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு பூமி பூஜைக்கு பின் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.தமிழகம் முழுவதும் உள்ள அறுபடை வீடுகள் உள்ளிட்ட முருகன் கோவில்களை சீரமைக்க வலியுறுத்தியும், முருக பக்தர்களை ஒன்று திரட்டவும், மதுரையில் 'குன்றம் காக்க... கோவிலை காக்க' என்ற பெயரில் முருக பக்தர்கள் மாநாடு ஹிந்து முன்னணி சார்பில் ஜூன் 22ம் தேதி நடைபெறுகிறது.https://www.youtube.com/embed/xZVMrXkHH88அதற்கான அடிக்கல் பூமி பூஜை மதுரை வண்டியூரில் இன்று (மே 28) நடந்தது. தொடக்கத்தில் கோ பூஜை நடந்தது. விழாவில் அமைக்கப்பட்ட மாநாடு கட்டமைப்பின் மாதிரியை பா.ஜ., மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், கேசவ விநாயகம் பார்வையிட்டு கேட்டறிந்தனர்.பின்னர் 6:58 மணிக்கு தொடங்கிய பூமி பூஜையில் முகூர்த்தக்கால் நாட்டப்பட்டது. பின்னர் நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தி.மு.க.,வை வீழ்த்த த.வெ.க., உட்பட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். விஜய் இணைய வேண்டும் என்று கடம்பூர் ராஜூ கூறிய கருத்தை வரவேற்கிறேன். தமிழ் கடவுள் முருகனுக்கு நடைபெறும் மாநாட்டில் ஒரு வாரம் முன்பு அறுபடை வீடுகளின் மாதிரி அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே அரசு ஒரு மாநாடு நடத்தியது. ஆனால் இந்த மாநாடு முழுமையான பக்தி உள்ள மாநாடாக அமையும். மலேசியா, சிங்கப்பூரில் இருந்து பக்தர்கள் வருவர். இது முழுக்க முழுக்க பக்தி மாநாடு. இதில் அரசியல் கிடையாது. பக்தர்களுக்காக நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

5 லட்சம் மக்கள் வருவார்கள்

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் கூறியதாவது: ஜூன் 22ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும். இந்த மாநாட்டிற்கு 5 லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹிந்து அமைப்பினர், மடாதிபதிகள், கலைத்துறையினர், அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக துணை முதல்வர் பவண் கல்யாண், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கந்த சஷ்டி கவசம் பாடிய சென்னிமலைக்கு ஒரு பிரச்னை வரும் போது ஏற்பட்ட எழுச்சியின் வெளிப்பாடு தான் தற்போது நடக்கும் மாநாடு. இதற்கிடையில் திருப்பரங்குன்றத்தில் ஒரு எழுச்சி வந்தது. எல்லா பகுதிகளிலும் முருகருக்கு வேல் வழிபாடு நடத்தப்படுகிறது. மாநாடு மதியம் 3 மணிக்கு தொடங்கி இரவு 9 மணிக்கு நிறைவடையும். தற்போது தேசியக்கொடி ஏந்தி பேரணி செல்ல அரசு தடை விதிக்கிறது. அதற்கெல்லாம் இந்த மாநாடு பதில் சொல்லும்,என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Ramesh Sargam
மே 28, 2025 13:17

விழா நடத்த செய்ய ஆளும் ஹிந்துவிரோத திமுக அனுமதி கொடுத்ததா? எல்லா ஏற்பாடுகளும் செய்தபிறகு அனுமதி மறுக்கப்பட்டால் நமக்கு பிரச்சினை. ஆகையால் முறையாக அனுமதி பெற்று நாம் விழா கொண்டாடுவோம். அனுமதி மறுக்கப்பட்டால் நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெறுவோம். முருகனுக்கு அரோஹரா.


Raja k
மே 28, 2025 12:06

அப்போ நீங்க பலம் இல்லாத கட்சிதானே, ஒத்துகுறீங்க


மே 28, 2025 10:49

திமுகவை வீழ்த்தினால் ... ஸ்டாலின் அசராமல் அமெரிக்காவுக்கு சென்று போட்டியிட்டு அமெரிக்க ஜனாதிபதி ஆவார் .. இந்த போஸ்டிற்கு ரூ 200 நிச்சயம் கிடைக்கும்


Padmasridharan
மே 28, 2025 10:49

எத்தனை கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் அடுத்த தேர்தலுக்கு முன்னாடி இறக்க முடியுமா சாமியோவ்..


sankaranarayanan
மே 28, 2025 09:45

திராவிட மாடல் அரசின் முதல்வருக்கு சென்ற தேர்தலின்போது வட சென்னையில் ஒரு இடத்தில் வெள்ளி வேல் ஓர் எம்.பியால் கொடுக்கப்பட்டது நினைவிருக்கலாம் அந்த வேல் எங்கோ ஒரு பூஜை அறையில் இருக்கிறதாம் தினந்தோறும் கிராமமாக பூஜை செய்து ஓர் அம்மையார் வேண்டிக்கொண்டே இருக்கிறாராம் என்ன செய்வது யார் என்றுகூட சொல்ல வேண்டுமா ?


மே 28, 2025 11:10

பெரியாரின் இரும்பு பட்டறையில் தயார் செய்யப்பட்ட போர்வாள் கலைஞரின் மகன் தளபதி ஸ்டாலின் என்பதை மறக்கக்கூடாது ... தினந்தோறும் கிராமமாக பூஜை செய்து ஓர் அம்மையார் வேண்டிக்கொண்டே இருப்பது பகுத்தறிவு கொள்கையை கோவில்களில் பரப்பிடத்தான் ..


என்னத்த சொல்ல
மே 28, 2025 09:45

தி மு காவை வீழ்த்திவிட்டு உங்களை முதல்வர் ஆக்கணுமா? அல்லது EPS முதல்வர் ஆகணுமா? இதுவரை தமிழ் நாட்டுக்காக மத விஷயங்களை தவிர்த்து என்ன போராட்டம் அல்லது செயல் செய்துள்ளீர்கள் என பட்டியலிட முடியுமா?


மே 28, 2025 11:06

திமுகவை வீழ்த்திவிட்டு யார் முதல்வரானாலும் தமிழகம் தப்பி பிழைக்கும்


P. SRINIVASAN
மே 28, 2025 16:46

இந்த சங்கிகள் ஒருபோதும் திமுகவை வீய்த்தமுடியாது.. பிஜேபி பகல் கனவு காண்கிறது. தமிழ்நாட்டில் டெபாசிட் வாங்காத கட்சி பிஜேபி. வெட்டிப்பசங்க.


மோகனசுந்தரம்
மே 28, 2025 09:33

முதலில் அண்ணாமலைக்கு வேண்டிய மரியாதை கொடுங்கள். அதன் பிறகு எதையாவது உளறி வையுங்கள். நோட்டா உடன் போட்டி போட்டுக் கொண்டிருந்த உங்கள் கட்சியை 11% அளவுக்கு உயர்த்திய மனிதனை விலக்கி வைப்பது உங்கள் கட்சிக்கும் நல்லதல்ல.


c.k.sundar rao
மே 28, 2025 09:32

Advise your high command not to support and save in the ED cases involved by DMK party men


Barakat Ali
மே 28, 2025 09:12

டிவிகே, நாம் தமிழர் இரண்டும் அதிக பொருட்செலவில் டீம்காவால் இறக்கப்பட்டுள்ள கட்சிகள் .... இறக்கப்பட்டதின் நோக்கம் திமுகவின் எதிர்ப்பு வாக்குகளை பிரிக்க .... அதாவது எதிர்ப்பு வாக்குகள் மொத்தமாக அதிமுகவுக்குப் போய்விடக்கூடாது என்பதற்காக ..... டிவிகே, நாம் தமிழர் இரண்டும் எதிர்ப்பு வாக்குகளில் பங்கெடுத்தால் அதிமுக-பாஜக வின் வாக்குவங்கியில் ஓட்டை விழும் ..... திமுக மீண்டும் வெல்லும் ..... ஆகவே டிவிகே, நாம் தமிழர் இரண்டும் உங்களுடன் பயணிக்க வாய்ப்பில்லை .... பயணித்தால் எங்கள் துக்ளக்கார் அவற்றை உடைத்து நொறுக்கி விளையாடுவார் ....


GMM
மே 28, 2025 09:05

திராவிட கட்சிகளை விரும்பாமல் பலர் வாக்களிக்க முன் வருவது இல்லை.? தற்போது ஆதார் முகவரி அடிப்படையில் வாக்காளர் அடையாள எண் வழங்கும் முறையும் உண்டு. ? இதன் மூலம் தொகுதி வாக்காளர் கண்டறிந்து சேர்க்க முடியும். போடாத ஓட்டு சிதறி கிடக்கிறது. அவர்களை வாக்களிக்க செய்தால், வாக்கு சதவீதம் நிச்சயம் அதிகரிக்கும். மேலும் வெற்றி பெற முடியாத சுயேட்சை வேட்பாளர் போட்டியை தவிர்க்க வேண்டும். நோட்டா வாக்காளர் ஒரு கட்சிக்கு வாக்களிக்க செய்ய வேண்டும். இதற்கு தனி பிரிவுகளை பிஜேபி உருவாக்க முடியும். திமுக கூட்டணி குறைந்த சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது.? திமுக கூட்டணி வாக்கு கூட வாய்ப்பு இல்லை. ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை