உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்: நயினார் நாகேந்திரன் உறுதி

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்: நயினார் நாகேந்திரன் உறுதி

திருநெல்வேலி: தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.திருநெல்வேலியில் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: அதிமுக கூட்டத்தில் தவெக கொடி பறப்பதை கவனித்தேன். அது தொண்டர்களாக ஒன்று சேரும் ஒரு விஷயம். அதுபோல் ஒட்டுமொத்த தமிழக மக்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓரணியில் திரளப் போவது உறுதி. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9m23rm3v&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விஜய் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று பார்த்தால் பொதுமக்கள் மத்தியில் ஒரு பெரிய வரவேற்பு இருக்கும் என்பது ஒருபுறம் இருந்தாலும், அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற கோணத்திலும் பார்க்க வேண்டும். தற்போது விஜய் கரூர் செல்வதற்கும் பாதுகாப்பு கேட்டு டிஜிபிக்கு மெயில் அனுப்பியிருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. தேர்தல் பிரசாரம், சுற்றுப்பயணங்கள் தொடங்கியுள்ள நிலையில், திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். ஒரு கட்சியில் இருப்பவர் அடுத்த கட்சி ஜெயிக்கும் என்று சொல்ல முடியாது என்பதால் அவர் அப்படி கூறியிருக்கிறார். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்.தமிழகத்தில் ஆசிரியர் சங்கங்கள், துப்புரவுப் பணியாளர்கள், தலைமைச் செயலக ஊழியர்கள் எனப் பல்வேறு தரப்பினர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதற்கு அரசு பதில் அளிக்கவில்லை என்றாலும், 2026 சட்டசபை தேர்தலில் மக்கள் ஒட்டுமொத்தமாகப் பதிலளிப்பார்கள், அது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்ற பதிலாக இருக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பெரிய கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் இணைய வாய்ப்புள்ளது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Indian
அக் 09, 2025 16:01

மத்திய அரசு , தமிழகத்துக்கு திட்டங்கள் கொண்டு வராமல் , பணம் வழங்காமல் இருந்தால் எப்படி வெற்றி பெரும் .


ராஜா
அக் 09, 2025 15:34

அத்தைக்கு மீசை வைத்ததால் சித்தப்பா என்ற நிலை எப்படி


Mr Krish Tamilnadu
அக் 09, 2025 14:03

தேசிய திட்டங்கள் செயல்படுத்த மாநில ஆதரவு என்ற கண்ணோட்டத்தில் மட்டும் அணுகாமல் மாவட்ட பிரச்சினை, அந்த மாவட்ட உங்கள் கட்சி பிரதிநிதியின் சேவைகளை முன் நிறுத்தி பேசினால், நீங்கள் வளரலாம். மக்கள் கேள்வி ஞானத்தை விரும்புபவர்கள்.தங்கள் மீது அக்கறை யார் செலுத்தினாலும் காது கொடுப்பார்கள்.


சமீபத்திய செய்தி