உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் சம்பவத்தை நீதிமன்றம் விசாரிக்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்; தவெக பொ.செ உட்பட 4 பேர் மீது வழக்கு

கரூர் சம்பவத்தை நீதிமன்றம் விசாரிக்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்; தவெக பொ.செ உட்பட 4 பேர் மீது வழக்கு

சென்னை: கரூரில் கூட்ட நெரிசல் சம்பவத்தை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக உரிய விதிமுறைகளை பின்பற்றவில்லை என தவெக பொதுச்செயலர் ஆனந்த் மற்றும் இணை பொதுச்செயலர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் உடலுக்கு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: கரூரில் நடந்த துயரம் இந்தியாவையே உலுக்கி உள்ளது. எவரையும் உடனடியாக யாரையும் குறை கூற முடியாது. தீவிரமாக விசாரிக்க வேண்டும். உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற அமர்வு இந்த பிரச்னையை இன்றே விசாரிக்க வேண்டும்https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=c4xhg13r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழக அரசு அமைத்த குழுவை நாங்கள் நம்பவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி அரசு வழங்க வேண்டும். கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களையும் சந்தித்தோம். எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

4 பேர் மீது வழக்கு

கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், உரிய விதிமுறைகளை பின்பற்றவில்லை என தவெக பொதுச்செயலர் ஆனந்த் மற்றும் இணை பொதுச்செயலர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது கொலை முயற்சி, மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல், பொது அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்ப்படியாமை உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அறிக்கை கேட்பு

இந்த சம்பவம் தொடர்பாக முதல்வரிடம் கவர்னர் ரவி அறிக்கை கேட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Padmasridharan
செப் 30, 2025 19:09

லட்சங்களும் கோடி பணத்தை கொடுத்தால் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்காது சாமி. வீட்டுல இருந்து சாகறத விட இந்த மாதிரி பொது கூட்டத்துல சாகலாம்னுதான் நினைக்கத் தோணும். மின்சார வெளிச்சத்த நம்பி வந்தவங்களுக்கு இருட்டாக்கி, இறந்தவங்களுக்கு பண வெளிச்சத்தை காண்பிப்பதெதற்கு. பொது மக்கள் பாதுகாப்புக்கு மட்டுமே அரசு காவலர்கள். இவங்க அதிகாரத்த எப்படியெல்லாம் அரசியலாக்கி பணமாக்கறாங்கனு அவங்களுக்கே தெரியும்.


Sridhar
செப் 28, 2025 16:18

நோய் நாடி நோய் முதல் நாடி என்பதுபோல இந்த அளவுக்கு சினிமா மோகம் வெறியாக சில இளைஞர்கள் மத்தியில் பரவ என்ன காரணம்? தமிழக இளைஞர்கள் அவ்வளவு அறிவு குன்றியவர்களா? அல்லது அவர்களது வெறித்தனமான ஈடுபாடு அவர்களை ஆக்கபூர்வமான ஆராய்ச்சிகளை செய்ய தூண்டுகோலாக அமையுமா? தமிழகத்தின் எதிர்காலமே கேள்விக்குரியாக இருக்கிறதே? 67 இல் நடந்த சீர்கேடுக்கு பிறகு இது 2.0 ஆ?


RAMESH KUMAR R V
செப் 28, 2025 12:47

இதை அரசியல் ரீதியாக பார்க்காதீர்கள் உயிரிழந்த அப்பாவி ரசிகர்கள் கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைக்கட்டும் அது அவரது குடும்பத்துக்கு உதவட்டும்


Rajarajan
செப் 28, 2025 12:21

என்ன வழக்கு பதிந்து என்ன பயன்? உடனே ஜாமீனில் வெளியே வந்து விடுவார். மீண்டும் ராஜபோக வாழ்க்கை. போன உயிர் திரும்புமா? இல்லை இவர்களின் அரசியல் வாழ்வு தான் முடிவுக்கு வருமா ??


kamal 00
செப் 28, 2025 11:53

போலீஸ் பணத்தை எடுத்து கொடுக்கட்டும்


GMM
செப் 28, 2025 11:51

ஒரு இடத்தில் கூட்டம், ஊர்வலம் போலீஸ் கட்டுபடுத்தும் அளவிற்கு மட்டும் அனுமதி. தர வேண்டும். கூட்டம் கலைந்து செல்லும் போது நெரிசலுக்கு வாய்ப்பு குறைவு. அரசியல் சதி பின் புலம் இருக்கும். ? உயிர் இழப்பு கட்சிக்கு அனுதாபம் கொடுக்கிறது. இதனை பெற வெற்றி கழகம் முயற்சியாக கூட இருக்கும். இந்தி எதிர்ப்பில் உயிர் இழப்பை தான் அண்ணா அரசியலுக்கு அதிகம் பயன் படுத்தியது.? சட்ட ஒழுங்கு போலீஸ் பொறுப்பு. முதலில் முக்கிய போலீஸ் அதிகாரிகள் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த , காயமடைந்த நபருக்கு நிதி உதவி வெற்றி கழகம் தான் கொடுக்க வேண்டும். நீதிமன்ற விசாரணையில் முதல் பகுதி மாநில போலீசார் மீது நடவடிக்கை மற்றும் வெற்றி கழக நிதியை முடக்க வேண்டும். மத்திய அரசு, கவர்னர், தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியின் அறிக்கை பெற வேண்டும். நிர்வாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் கூட்டம் போட தடை விதிக்க வேண்டும்.


Arul Narayanan
செப் 28, 2025 11:40

அரசு ஏன் ஒரு கோடி கொடுக்க வேண்டும்? நீதிமன்றம் அரசு மீது குற்றம் சாட்டினால் திமுகவும் திமுக அரசின் ஆலோசனைப்படி நடந்து கொண்ட காவல் உயரதிகாரிகளும் கொடுக்கட்டும்.


கல்யாணராமன் சு.
செப் 28, 2025 16:57

எனது கருத்தும் அதுவேதான் . ... அரசின் மீது குற்றம் இல்லையென்றால் , தவெக கட்சி மட்டுமே கொடுக்கவேண்டும் . ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை