மேலும் செய்திகள்
கோவையில் நாளை துவங்குகிறது உலக புத்தொழில் மாநாடு
08-Oct-2025
கோவை: கோவை கொடிசியாவில் உலகப்புத்தொழில் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கோவை கொடிசியா வளாகத்தில், இன்றும் நாளையும் உலக புத்தொழில் மாநாடு நடை பெறுகிறது. இந்த மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஜெர்மனி, ஆஸி., ரஷ்யா, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா, ஜப்பான், மலேசியா உட்பட 40 நாடுகளைச் சேர்ந்த, 300 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.மாநாட்டில், மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் துறைகள், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான 75 தொழில் வளர் மையங்கள் (இன்குபேஷன் மையம்), 10க்கும் மேற்பட்ட யூனிகார்ன் நிறுவனங்கள், 100க்கும் மேற்பட்ட முதலீட்டு நிறுவனங்கள், உலக அளவில் பிரசித்தி பெற்ற நிறுவனங்கள் பங்கேற்றன.750 ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன. ஸ்டார்ட்அப் டிஎன், தலைமைச் செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன், எம்.எஸ்.எம்.இ., துறை கூடுதல் தலைமை செயலர் அதுல் ஆனந்த், அரசு பிரதிநிதிகள், தொழில் வல்லுனர்கள் பங்கேற்றனர்.
08-Oct-2025