உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிர்மலா சீதாராமன் திறமைசாலி: பள்ளி ஆசிரியர் பெருமிதம்

நிர்மலா சீதாராமன் திறமைசாலி: பள்ளி ஆசிரியர் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுச்சேரி: பள்ளிக்காலத்திலேயே, நிர்மலா சீதாராமன், அனைத்து துறைகளிலும் மிகுந்த திறமை வாய்ந்தவராக விளங்கியதாக, அவரது பள்ளி ஆசிரியர் நினைவு கூர்ந்தார்.புதுச்சேரியில் நடந்த இலக்கிய திருவிழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். விழாவில் அவருடைய பள்ளி ஆசிரியர் சபிதா, பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றார். அவரது காலில் மத்திய அமைச்சர் விழுந்து ஆசி பெற்றார்.பின்னர், முன்னாள் ஆசிரியர் சபிதா கூறியதாவது:கடந்த, 1974-76ம் ஆண்டு காலகட்டத்தில், திருச்சி, ஹோலி கிராஸ் பள்ளியில், நான் ஆசிரியராக பணிபுரிந்தேன். அப்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்னிடம், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 படித்தார். நான் அவருக்கு சமூக அறிவியல், வரலாறு, புவியியல் பாடங்களை சொல்லிக் கொடுத்தேன்.அவர் அப்போதே, பேச்சு, கட்டுரை மற்றும் வினாடி - வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பரிசுகள் பெற்றுள்ளார். ஒரு வினாடி - வினா போட்டியில், 'மிசா' குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பள்ளி மாணவர்கள் யாரும் பதிலளிக்கவில்லை. அந்த கேள்விக்கு, சரியான பதில் அளித்த ஒரே மாணவி, நிர்மலா சீதாராமன் மட்டுமே. அவர் பதில் சொன்னதற்கு முதல் நாள் தான், அந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. அந்த விஷயமும், அன்றைய நாள் காலையில் செய்தித்தாளில் தான், வெளியாகி இருந்தது. அந்தளவிற்கு பள்ளிக்காலத்திலேயே, பொது அறிவில் சிறந்து விளங்கியவர். அவரை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நிர்மலா சீதாராமனை பா.ஜ., மாநில செயலர் அஸ்வத்தாமன் சந்தித்தார். அப்போது, திருவண்ணாமலையில் விமான நிலையம் அமைக்கக்கோரி மனு அளித்தார்.

வியாபாரிகளுடன்

புகைப்படம்விழா முடிந்து கடற்கரை சாலை அருகில் செல்லும் போது, வாகனத்தை நிறுத்தி விட்டு சாலையில் இறங்கி நடந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், அங்கு இளநீர், துணிப்பை வியபாரம் செய்யும் பெண்களை சந்தித்து பேசி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

பாரதி
செப் 23, 2024 15:51

சிங்கப் பெண்மணி..


skrisnagmailcom
செப் 23, 2024 14:00

நல்ல வேளை இதுவே தமிழ் நாட்டில் ஒரு ஆசிரியர் நிர்மலா சீதாராமனை பாராட்டியிருந்தால்?


Tiruchanur
செப் 23, 2024 13:22

மிகவும் திறமைசாலி தான். பாரதத்தின் பொருளாதாரத்தை மிக நேர்த்தியாக பராமரிக்கின்றார். எள்ளளவும் ஸந்தேஹமில்லை . வருமான வரியை மட்டும் பணவீக்கத்திற்கு தகுந்தாற்போல் ஏற்றினால் நல்லது. அதில் மட்டும் "மாட்டேன்" என்று பிடிவாதமாக இருக்கிறார். கொஞ்சம் மத்திய வர்க்க மக்களுக்கு ஆதரவாக இருந்தால் நல்லது


karutthu
செப் 30, 2024 17:57

அதேபோல் மத்திய அரசின் பொது துறை நிறுவனங்களின் ஊழியர்கள் வாங்கும் பென்ஷன் தொகை மிகவும் கம்மியாக உள்ளது .ஒய்வு பெற்ற ஊழியர்கள் அதுவும் 2016 முன் ஒய்வு பெற்ற தொழிலாளர்களின் நிலைமை படு மோசமாக உள்ளது 32 வருடமாக உழைத்து ஓய்வூதியம் பெருகிறவர் ஈ பி எப் முலம் கிடைக்கும் தொகை ரூபாய் 1800 /= மட்டுமே சாகும்வரை இது தான் பென்ஷன் .நானும் நிதி அமைச்சருக்கு தனிப்பட்ட முறையில் லடித்தம் எழுதியும் இன்றுவரை எந்த நடவடிக்கையும் இல்லை பொறுத்திருந்து பார்ப்போம்


ஆரூர் ரங்
செப் 23, 2024 13:14

விடுதலை நாள் குடியரசு தினம் மாற்றிச் சொன்ன புத்திசாலியான முதல்வரைக் கேள்வி கேட்டுவிட்டு நடமாட முடியுமா ? வயது மூப்பால் மறதியில் ஆசிரியை ஆண்டை மாற்றிக் கூறியிருக்கலாம் . உங்களின் பிரச்சனை ஒரு பெண்மணி பெரிய பதவி வகிப்பது.


Velan Iyengaar
செப் 23, 2024 16:57

நீர் கூறும் எதுவும் எமது பிரச்சினை இல்லை .. இல்லவே இல்லை ... பெரிய பதவியில் உக்காத்துகொண்டு இப்படி அழுகுண்ணி ஆட்டம் ஆடும் விதம் தான் எங்கள் பிரச்சனை .... திசை திருப்புவது .... whataboutry செய்வது தான் பிரச்சனை .... கேடுகெட்ட நிலையவித்துவானே ... கொஞ்சமாவது பொறுப்பு எடுத்துக்க கற்றுக்கொள் ... திசை திருப்பதே கேனயனே ...


Ganapathy
செப் 23, 2024 13:10

வக்கிரம் புடிச்சவனே..


venugopal s
செப் 23, 2024 13:02

நான் 1976 மார்ச் ல் எஸ் எஸ் எல் சி (பழைய பதினொன்றாம் வகுப்பு) முடித்தேன். அப்போது ப்ளஸ் டூ திட்டம் வரவில்லை. அதற்கு அடுத்த ஆண்டு வரை பழைய எஸ் எஸ் எல் சி (பதினோராம் வகுப்பு) தான் இருந்தது.பி யூ சி (பன்னிரண்டாம் வகுப்பு) கல்லூரியில் தான் படிக்க வேண்டும்.ப்ளஸ் டூ அதற்குப் பிறகு தான் வந்தது.சமூக அறிவியல் என்ற பாடமும் அப்போது கிடையாது. சொல்லிக் கொடுத்த பொய்யை கொஞ்சம் பொருந்தமாக சொல்லிக் கொடுத்து இருக்கலாம்!


ஆரூர் ரங்
செப் 23, 2024 12:26

அப்பள்ளி சிறுபான்மையினர் நடத்துவது. ஆசிரியை கூறுவது தவறென்றால் அவர்கள் மறுக்கட்டும் பார்ப்போம்.


Velan Iyengaar
செப் 23, 2024 16:26

இங்க மட்டும் எங்கிருந்து சிறுபான்மை வந்தது ?? அப்படிப்பட்ட பள்ளிக்கூடத்தில் படித்து மாறிப்போனது அந்த பள்ளியின் துரதிருஷ்டம் தான் என்பேன் ...


Velan Iyengaar
செப் 23, 2024 11:39

நாட்டு மக்களை அடிமுட்டாளாக நினைத்துக்கொண்டு அவிழ்த்து விட்டுக்கொண்டே இருக்கின்றனர் .... 1959 இல் பிறந்த ஊறுகாய் மிசா சட்டம் அமுல்படுத்தப்பட்ட 1971 ஆம் ஆண்டு என்ன வகுப்பு படித்திருப்பார் என்று நீங்களே கணக்கு போட்டுக்கொள்ளுங்கள் ... சத்தியமாக 11 அல்லது 12 வயதில் பத்தாவது அல்லது ப்ளஸ் 1 படித்திருப்பாரா ?? அந்த சட்டம் குறித்த செய்தி வந்த நாளுக்கு அடுத்த நாள் அவர் அது குறித்து பதில் சொன்னாராம் அதுவும் பத்தாவது அல்லது ப்ளஸ் 1 ????? பாடம் எடுத்த ஆசிரியரிடம் மக்களே ... பாருங்க மக்களே ... எப்படி எல்லாம் காது குத்துகிறார்கள் என்று


ஆரூர் ரங்
செப் 23, 2024 15:08

ஆனா உ.பி ஸ் ஈவேரா வுக்கு யுனஸ்கோ தெற்காசிய சாக்ரட்டீஸ் பட்டம் கொடுத்ததா இன்னும் நம்புறாங்க. அட.. பாடப்புத்தகங்களிலும் இப்பொய்யையும் பரப்புகிறார்களே.


karutthu
செப் 30, 2024 18:05

ஏலே வேலன் ஐயங்கார் என கருத்து போட்டு எழுதறவனே கொஞ்சம் நாக்கை அடக்கி வாசி நீ எவனோ யாரோ வேலன் ஐயங்கார் என புனைபெயரில் எழுதுகிறாய் ஊறுகாய் என நீ யாரை விமர்சிக்கிறாய்


Thirumal s S
செப் 23, 2024 10:50

ஆமாம் ஆமாம். நிதி அமைச்சராக இருந்து கொண்டு நான் சாப்பிடுவது இல்லை என்று சொன்னவரே


ஆரூர் ரங்
செப் 23, 2024 12:24

சாதி வெறுப்பு பெண்ணின வெறுப்பும் கூடாது நண்பா.


Velan Iyengaar
செப் 23, 2024 10:30

தமிழகத்தில் 1974-76 காலகட்டத்தில் சமூக அறிவியல் பாடம் மாநில கல்வி திட்ட பள்ளி அளவில் கற்று தந்தப்பட்ட்டதா ?? இங்கும் சமூக அறிவியல் அவியலை போட்டு தாக்குறாங்களே ?? கட்டுக்கதைகளுக்கு ஒரு அளவே இல்லையா ?? Civics என்ற பாடமே சமீப அறிமுகம் ... அந்த மையத்தில் வரலாறு மற்றும் புவியியல் ... அவ்வளவே ....ஐந்து பாடங்கள் ... தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணக்கு மற்றும் வரலாறு/புவியியல் இரண்டும் ஒரே பாடமாக ..... எப்படி எல்லாம் இந்த கும்பல் நமக்கு காது குத்துது பாருங்க .....


s sambath kumar
செப் 23, 2024 17:43

வரலாறு புவியலை தான் இப்போது சமூக அறிவியல் என்று சொல்கிறார்கள். அதைத்தான் ஆசிரியரும் சொல்கிறார். நான் படிக்கும்போதும் எழுபதுகளில் வரலாறு புவியியல் தனித்தனி சப்ஜெக்ட் ஆக இருந்தது.


Velan Iyengaar
செப் 23, 2024 20:19

அது எங்களுக்கும் தெரியும் .... இப்ப்போ சொல்வது இருக்கட்டும்... அப்போ அதை என்ன என்று சொன்னார்களோ அதை தானே சொல்லவேண்டும் ?? வருஷ கணக்கும் தப்பு ....இங்கு எல்லாமே தப்பு ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை