உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈக்வடாரில் இருக்கிறார் நித்யானந்தா; தமிழக அரசு ஐகோர்ட்டில் தகவல்

ஈக்வடாரில் இருக்கிறார் நித்யானந்தா; தமிழக அரசு ஐகோர்ட்டில் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சர்ச்சை சாமியாரான நித்யானந்தா ஈக்வடாரில் இருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. போலீசாரால் தேடப்பட்டு வந்த சாமியார் நித்யானந்தா மீது பல வழக்குகள் உள்ள நிலையில், கடந்த 2019ல் தலைமறைவானார். கைலாசா என்னும் தீவுக்கு சென்றுவிட்டதாக நித்யானந்தாவே கூறியிருந்தார். அதனை ஹிந்துக்களுக்கான தனி நாடாக உருவாக்கியுள்ளதாகவும் அவரே கூறியிருந்தார். தங்களுக்கென தனியாக அரசு, தனிக் கொடி, பாஸ்போர்ட், நாணயம் உள்ளதாகவும், நித்யானந்தா அறிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8yel9gel&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சமூக வலைதளங்கள் மூலம் வீடியோ சொற்பொழிவு ஆற்றி, வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். எனினும், கைலாசா நாடு எங்கு இருக்கிறது; நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பது தற்போது வரையில் புரியாத புதிராகவே இருந்து வந்தது.இந்த நிலையில், வழக்கு ஒன்றில் நித்யானந்தா குறித்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவின் மூலம், அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மடங்களை நிர்வகிக்க தக்காரை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி நித்யானந்தா சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, 'நித்யானந்தா இந்தியாவிலேயே இல்லை. தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடாரில் இருக்கிறார்,' என்று அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வாதத்தை கேட்ட கோர்ட், இந்தியாவிலேயே இல்லாத நித்யானந்தாவின் வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

kandappan
பிப் 03, 2025 13:47

Owning an island in a pleasant continent without any problems from crooked gangs.fearlessness he imbibed although he is without an army with drones which is not impossible for these saints.


RG
பிப் 01, 2025 03:24

The case was filed by Nityananda according to this report. Since he's outside the country, the court dismissed his petition. People commenting here do not seem to understand the basics of how govt and legal systems work nor do they seem to care to read the news report properly!


தமிழ்வேள்
ஜன 31, 2025 20:25

பரமஹம்ச நித்யானந்தா யோக குரு.. பரிபூரண சன்யாசி அல்ல.. கிட்டத்தட்ட வனப்ரஸ்த நிலையில் உள்ளவர் எனக் கொள்ளலாம்...இவரை தேவையின்றி கிண்டி விட்டு பிரச்சினை பண்ணப்போய் அவர் இன்னும் பிரபலமானதுதான் கிறிஸ்தவ மிஷநரிகளும் அடிமை திராவிடமும் கண்டபலன்...


sankaranarayanan
ஜன 31, 2025 18:39

நித்யானந்தா இந்தியாவிலேயே இல்லை. தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடாரில் இருக்கிறார், என்று அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பாருடா மக்களுக்கே தெரியாது ஆனால் அரசுக்கு மட்டும் எப்படியோ நித்யானந்தா இருக்கும் இடம் தெரிந்துவிட்டது அதை நீதிமன்றம் அரசைத்தான் முழுமையாக விசாரிக்க வேண்டும் உண்மை விளங்க வேண்டும் அப்போ மறைந்தமுகமாக அரசுக்கும் நித்யானந்தாவுக்கும் தொடர்பு உண்டு இல்லையென்றால் எப்படி நீதிமன்றத்தில் வந்து கூறமுடியும் இதைவிட நீதிமன்றங்களுக்கு வேறன்ன வேண்டும்


என்றும் இந்தியன்
ஜன 31, 2025 17:17

இந்த ஹை கோர்ட் அமெரிக்க சுப்ரீம் கோர்ட் மாதிரி இல்லை என்று தெரிகின்றது. அமெரிக்க கோர்ட் இந்தியாவில் தவறு செய்ததாக அதனை இது குற்றம் சாற்றி வழக்கு பதிய வைத்திருக்கின்றது அமெரிக்காவில்


அப்பாவி
ஜன 31, 2025 16:46

ஜெய் நித்திதானந்தா... எப்படி சார்?


தமிழன்
ஜன 31, 2025 16:38

இருக்காங்க என்று தெரிந்தும் ஏன் அவர்களை பிடிக்கவில்லை .. என கேட்கவில்லை. சரி.. தான்.. நீதிபதிகளும் அரசு சம்பளம் வாங்கும் ஊழியர்கள் தானே.. அவர்களுக்கும் குடும்பம் குட்டி என இருக்கும் தானே.


sri
ஜன 31, 2025 16:30

மதன் எங்கு இருக்கிறார் என்று ஏன் கேட்பதில்லை தமிழக அரசும் அறிவிப்பதில்லை அதுபோல செந்தில் பாலாஜியின் தம்பி எங்கே இருக்கிறார்?


theruvasagan
ஜன 31, 2025 18:14

செ.பா தம்பி செவ்வாய் கிரகத்துக்கு போய்ட்டார்னு ஒரு பதில் மனு தாக்கல் செய்து விட்டால் இல்லாத ஆளு மேல கேசு எதுக்குன்னு கோர்ட்டு தள்ளுபடி செய்யும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கு. அப்புறம் எவனும் தம்பி எங்கேன்னு கேட்டு நச்சரிக்க மாட்டானுக. அப்புறம் படிப்படியா சார் யார் கேசு இசிஆர் கேசு எல்லாத்துக்கு இதே டெக்னிக்கை கையாண்டு வழக்குகளை ஊத்தி மூடிவிடலாம். ஆங்...தா கிருட்டிணன் வேங்கைவயல் கேசுங்களை கூட இந்த மாடல்ல ஹேன்டில் பண்ணி ஊத்தி மூடிட்டா கவலையத்து இருக்கலாமே. ஒரு ஒரு கேசுலயும் போலிசு இலாகா புதுசு புதுசா கதை வசனம் எழுதி அதை நம்ப வைக்கிறதுக்கு எம்புட்டு கஷ்டப்படுது என்பதை பத்தி யாராவது யோசிக்கிறானுகளா.


ManiK
ஜன 31, 2025 15:30

நல்ல அரசங்கம், நல்ல கோர்ட் கேலிக்கூத்து. ஆல் இல்லைனாலும் அந்த தக்கார் பிரச்சனை இருக்குதானே... விசாரிக்காம பஞ்சாயத்த கலைப்பதுலயே குறியா இருக்காங்க.


அன்பு
ஜன 31, 2025 16:06

அந்த சார் யார் என்று கண்டு பிடிக்க முடியவில்லை. வேங்கை வயல் சம்பவத்துக்கு யாரோ அப்பாவிகளை குற்றவாளிகள் ஆக்கி காட்டுறாங்க. குற்றவாளிகளை காப்பாற்றும் அரசு நித்தியானந்தாவை காட்டி திசை திருப்பும் செய்தி விடுகிறது.


கந்தன்
ஜன 31, 2025 15:21

கதவை திற காற்று வரட்டும் நல்ல கருத்துள்ள தொடர் மற்றதெல்லாம் பிறகு