உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எத்தனை கெட்டப் போட்டு வந்தாலும்... யாரைச் சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

எத்தனை கெட்டப் போட்டு வந்தாலும்... யாரைச் சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை: நம்மை எதிர்ப்பவர்கள் எத்தனை 'கெட்டப்' போட்டு வந்தாலும் களம் நமதே என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.கட்சி தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்: நாளுக்கு நாள் திராவிட மாடல் அரசுக்குத் தமிழக மக்களின் ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது. இந்த ஆதரவு வெற்றியாய் எதிரொலிக்க உங்களில் ஒருவனான நான் நம்புவது உடன்பிறப்புகளான உங்களின் உழைப்பைத்தான். அந்த உழைப்பே தி.மு.க.,வை ஆறாவது முறையாக ஆட்சிக்குக் கொண்டு வந்தது. ஆட்சியில், மக்கள் நலனுக்கான திட்டங்களை அறிவித்து, அதனை முழுமையாகச் செயல்படுத்திடும் வகையில் அயராமல் உழைக்கின்ற காரணத்தினால்தான் மக்களிடம் ஆதரவு பெருகியுள்ளது. தமிழகம் அனைத்து நிலைகளிலும் வளர்ச்சி பெற வேண்டும் என்ற லட்சிய நோக்கத்துடன் நமது திராவிட மாடல் அரசு செயலாற்றி வரும் நிலையில், தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் மத்திய பா.ஜ., அரசு நமக்குரிய நிதியை வழங்காமல் தமிழக மக்களுக்குத் தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. மாநில உரிமைக்கு எதிரான பா.ஜ., அரசின் பழிவாங்கும் போக்கையும் எதிர்கொண்டு இந்தியாவின் முன்னோடி மாநிலமாகத் தமிழகத்தை உயர்த்தியிருக்கிறோம். மத்திய அரசின் நிறுவனங்களும், நிதி ஆயோக் போன்ற அமைப்புகளும் வெளியிடும் புள்ளிவிவரங்களில் தமிழகம் பல்வேறு இலக்குகளில் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தை பா.ஜ., வஞ்சித்தாலும், தி.மு.க மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்த மக்களுக்கு வாழ்வளிக்கும் வகையில் திராவிட மாடல் அரசின் நலத் திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் பயனளித்து வருகின்றன.தமிழக மக்களுக்கு எதிரான, தமிழகத்துக்கு எந்தப் பயனுமில்லாத, கள்ளக் கூட்டணி வைத்திருக்கிற, காசு வாங்கிக் கொண்டு கூவுகிற அந்த முகமூடிகளைக் கிழித்தெறிந்து தி.மு.க.,வின் வெற்றியை உறுதி செய்வோம். அந்த வெற்றியை அடைவதற்கான நிர்வாக வசதிக்காகத்தான் மாவட்டக் கழக நிர்வாகத்தில் மாற்றங்கள் தொடங்கியுள்ளன.தமிழக மக்கள் மனதில், குறிப்பாகப் பெண்கள் - இளைஞர்கள் ஆகியோரிடம் பெரும் செல்வாக்குப் பெற்றுள்ள தி.மு.க., தோழமைக் கட்சியினரும் வரும் சட்டசபை தேர்தலிலும் வெற்றி முத்திரை பதிப்பதைத் தடுக்க முடியாது என்பது அரசியல் எதிரிகளுக்கும் நன்றாகத் தெரியும். அதனால்தான் கள்ளக்கூட்டணி, திரைமறைவுக் கூட்டணி, வாக்கைச் சிதறடிக்க நினைக்கும் கூட்டணி என நம்மை எதிர்ப்பவர்கள் எத்தனை 'கெட்டப்' போட்டு வந்தாலும் களம் நமதே! மக்களின் ஆதரவு நம் பக்கமே! மக்களுக்குத் துணையாக நிற்போம்! கவனமாக உழைப்போம்! வெற்றி நமதே!. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

ஆரூர் ரங்
பிப் 15, 2025 13:05

மண்டைல மசாலா இல்லாததை மறைக்க கொண்ட தேவையா? பயன்படுமா?


V வைகுண்டேஸ்வரன்
பிப் 14, 2025 21:44

பாஜக கொத்தடிமை களின் புலம்பல்கள் படிக்க ஹாப்பி யா நல்லாருக்கு. தம்மாத் தூண்டு தொகுதியில் கூட திமுக வை எதிர்த்து ஜெயிக்க திராணி இல்லை. எதிர்த்த 46 பேருக்கும் டெபாசிட் காலி. இது திமுக ஆட்சிக்கு மக்களின் அங்கீகாரம். சாட்டையடி கெட்டப், செருப்பில்லாத கெட்டப்,,, வெள்ளை ஜிப்பா வுடன் காவடி கெட்டப் - இவரைத் தான் முதல்வர் சொல்கிறார்.


venugopal S
பிப் 15, 2025 07:41

யோவ் யாரும் எங்க முட்டு திலகம், அடிமை வை குண்டர் அவருக்கு போட்டியில் வந்தா எப்பிடி? பாருங்க, எப்டி கதறல்...வை குண்டர்க்கு ஈர வெங்காய பட்டம் குடுத்து பாராட்டு விழா எடுக்கப்படுகிறது


guna
பிப் 15, 2025 08:28

அப்போ அடுத்த தேர்தல்ல திமுக தனியா நிக்கும்மு சொல்றியா ஆபீஸர்? நடுங்கமா சொல்லு....


rasaa
பிப் 15, 2025 13:02

200 ரூபாய்க்கு என்னமாய் கூவகிறீர். பாராட்டுக்கள்


sankaranarayanan
பிப் 14, 2025 21:24

டோப்பா போட்டவர்கள் எல்லாருமே எம்.ஜி.ஆர். ஆகவே முடியாது. மக்கள் மன்னர் அவர் .அவரைப்போல காப்பி அடித்தாலும் அவர் நடத்திக்காட்டிய ஆட்சியை யாராலுமே குறையே சொல்ல முடியாது . டோப்பா தானியா மிஞ்சும்


D Natarajan
பிப் 14, 2025 21:11

கெட்டப் போடுவது யார். தமிழக முட்டாள்களுக்கு நன்றாக தெரியும்.


Vel1954 Palani
பிப் 14, 2025 20:55

இனி விழவேண்டியது பாக்கி இருக்கு.


Ganapathy
பிப் 14, 2025 20:26

மொதல்ல அந்த கேனத்தனமான விக்க கழட்டிட்டு கெட்டப் பத்தி பேசு. இந்த விக்குல கேனத்தனமான திருட்டுத்திராவிடிய லுக்கு உமக்கு நல்லாவேயில்ல.


Bala
பிப் 14, 2025 20:15

முதல்வர் அவர்களே நீங்களும் உங்கள் சினிமா பய புள்ளையும் எவ்வளவோ கெட்டப் போட்டு இருக்கிறீர்கள் . இனிமேல் எவ்வளவு கெட்டப் போட்டாலும் வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என்பது உறுதி. தமிழக மக்கள் செம காண்டில் இருக்கிறார்கள்.


M Ramachandran
பிப் 14, 2025 20:11

டோப்பா தலை தன்னை போல் பிறரையும் நினை என்று எண்ணுதல்


venkat
பிப் 14, 2025 20:00

சுடாலின் அவர்களே நீங்கள் கூறியபடி உங்கள் விடியல் ஆட்சியால் மக்கள் ஆதரவு பெருகி வருகிறது என்றால் வரும் தேர்தலில் எந்த மக்களை ஏமாற்றும் எந்த இலவச திட்டங்களும் அறிவிக்காமல், கள்ள வோட்டு போடாமல், மக்களுக்கு குவார்ட்டர், பிரியாணி, ருபாய், மற்றும் அன்பளிப்புகள் கொடுக்காமல், மக்களை பட்டியில் அடைத்து போடாமல் தேர்தலை சந்திப்பீர்களா. கூட்டணி இல்லாமல் மக்களை சந்திப்பீர்களா, உங்கள் கட்சி கு(தொ)ண்டர்களை ஏவி விடாமல் இருப்பீர்களா.


கத்தரிக்காய் வியாபாரி
பிப் 14, 2025 19:58

நாளுக்கு நாள் திராவிட மாடல் அரசுக்குத் தமிழக மக்களின் ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது. நாக்கு அழுகிட போகிறது.


புதிய வீடியோ