உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யார் என்ன சதி செய்தாலும் 2026ல் திமுக ஆட்சி நிச்சயம் அமையும்: முதல்வர் ஸ்டாலின்

யார் என்ன சதி செய்தாலும் 2026ல் திமுக ஆட்சி நிச்சயம் அமையும்: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தர்மபுரி: யார் என்ன சதி செய்தாலும், எத்தனை அவதூறுகளை நம் மீது பரப்பினாலும், 2026ல் திமுக ஆட்சி நிச்சயம் அமையும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். தர்மபுரியில் திமுக எம்பி மணி இல்லத் திருமண விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நேற்றைய தினம் மிக முக்கியமான, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தை, சென்னையில் நடத்தி முடித்துவிட்டு இங்கு வந்திருக்கிறோம். முக்கியமான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். அது என்ன என்று உங்களுக்கு தெரியும். அடுத்தாண்டு நாம் எதிர் கொள்ள இருக்கும் தேர்தலை அடிப்படையாக வைத்து, சீராய்வு என்ற பெயரில் ஒரு தீய செயலை, சதி செயலை செய்ய தேர்தல் கமிஷன் திட்டமிட்டு இருக்கிறது. அதனை தடுப்பதற்காக, அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து பேசி, தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம்.

தந்திரம்

அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என பேசினர். அதற்கு உரிய அவகாசம் கொடுக்க வேண்டும். பதற்றம் இல்லாத சூழலில் தான் அதனை செய்ய வேண்டும். தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் சூழலில், வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது உண்மையான வாக்காளர்களை நீக்க தந்திரம். இதனை தான் பீஹார் மாநிலத்தில் செய்தார்கள். இப்பொழுது மற்ற மாநிலங்களில் செய்ய முயற்சி செய்கின்றனர். நாம் நடத்திய கூட்டத்தில் கூட இன்றைக்கு எதிர்க்கட்சியாக இருக்கும், அதிமுக பங்கேற்கவில்லை. இரு கட்சிகள் பங்கேற்கவில்லை; தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். அதற்காக நான் அவர்களுக்கு நன்றி சொல்கிறேன்.

இரட்டை வேடம்

எதிர்க்கட்சி தலைவராக இருக்க கூடிய, பழனிசாமி இதில் கூட இரட்டை வேடத்தை காட்டி இருக்கிறார். பாஜவுக்கு பயந்து தேர்தல் கமிஷனின் நடவடிக்கையை எதிர்க்க பழனிசாமி பயப்படுகிறார். அதேநேரத்தில் அவர் அதிமுக தொண்டர்களுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். தேர்தல் கமிஷனின் நடவடிக்கையில் பழனிசாமிக்கு சந்தேகம் இருப்பதை காட்டுகிறது. ஆனால் அவரால் வெளிப்படையாக எதிர்க்க முடியவில்லை. தான் பாஜவின் பாதம் தாங்கி என்பதை நொடிக்கு ஒருமுறை அவர் நிரூபிக்கிறார். நான் உறுதியாக சொல்கிறேன், பாஜ எப்படிப்பட்ட சதி செயலை செய்தாலும் தமிழகத்தில் எதையும் செய்ய முடியாது.

திமுக 2.0 ஆட்சி

யார் என்ன சதி செய்தாலும், எத்தனை அவதூறுகளை நம் மீது பரப்பினாலும், திமுக தலைமையில் இருக்கக்கூடிய ஆட்சி, 2026ல் மீண்டும் நிச்சயம் அமையும். அன்றைக்கு எல்லா டிவி சேனல்களிலும் திமுக 2.0 ஆட்சி அமைந்தது என்ற செய்தி தான் வரப்போகிறது. அதனை நீங்கள் பார்க்க தான் போகிறீர்கள். தமிழக மக்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் இதனை பெருமையுடன் சொல்ல விரும்புகிறேன்.7வது முறையாக திமுக ஆட்சி அமைய நீங்கள் எல்லோரும் உறுதுணையாக இருக்க வேண்டும். 2021ல் தமிழகத்தை அதிமுகவிடம் இருந்து மீட்டு இருக்கிறோம். 2026 தேர்தல் பாஜ.,- அதிமுகவிடம் இருந்து பாதுகாக்க கூடியதாக அமைய போகிறது. மணமக்கள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள். தமிழ் உணர்வை தமிழகத்தில் உருவாக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 99 )

Ramu
டிச 03, 2025 11:34

உங்கள் ஆட்சி வேண்டாம் ஸ்டாலின் அய்யா, வன்னியர்களுக்கு 15% சதவீதம் உள்ஒதுக்கீடு தரமறுக்கும் நீங்கள் வேண்டாம் ஸ்டாலின் அய்யா பல லட்சம் வன்னியர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளார்கள், அவர்களுக்கு அரசு வேலை என்பது ஒரு கனவாகவே உள்ளது. சரியான இட ஒதுக்கீடு இல்லாததால் உங்கள் ஆட்சி இருக்கும் வரைக்கும் வன்னியர் சமுதாய மக்கள் நலன் பாதிக்கப்படும் என்பதில் மாற்று கருத்தில்லை ஆகையால் உங்கள் ஆட்சி மறுபடியும்வேண்டாம் அய்யா, உங்கள் குடும்பம் லஞ்சம் வாங்கிய பணம் கோடிகணக்கில் வச்சிருக்கிங்க, எங்களை தெருகோடியில் நிறுத்திருக்கிங்க. போதுமய்யா உங்கள் , இனிமேல் உங்கள் ஆட்சி வேண்டாம்.


Ramu
டிச 03, 2025 11:27

தயவு செய்து வேனாம் அய்யா நீங்கள் வராதீர்கள் என் என்றால் எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம் பெருகிவிட்டது எங்கள் ஆட்சியில், ஒரு சாதரண அரசு வேலைக்கு 10 இலட்சம் முதல் 15 இலட்சம் வரை லஞ்சம் வங்கிகொண்டுதான் ஆள் எடுப்பீர்கள. உங்கள் ஆட்சியல் கீழ் உள்ள மக்கள் கீழே இருக்க வேண்டியதுதான் மேல வரமுடியாது. உங்கள் திட்டங்கள் அரசியல்வாதிகள் சம்பாதிப்பதற்காகவே அரசு திட்டங்களை கொண்டுவருவீர்கள். மக்களுக்கு சென்றடையாது. அதனால் மக்களும் மேலே வரப்போவதில்லை உங்கள் ஆட்சி வேணாம் அய்யா. தமிழ்நாட்டை நல்லாருக்க விடுங்காய்யா . நன்றி வணக்கம்


K.Rajasekaran
நவ 24, 2025 05:51

தி மு க ஆட்சி வேரோடு அளிக்கப்படவேண்டிய ஆட்சி, எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம், சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது, மது மற்றும் போதை வஸ்துக்கள் தாராளமாக கிடைக்கிறது, பெண் குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகவும் பயமாகவும் உள்ளது, மக்கள் திருந்தி நல்லவர்களுக்கு ஒட்டு அளித்து தமிழகத்தையும் தமிழ் மக்களையும் காத்து அருள மாக்களை இரு கரம் கூப்பி கேட்டு கொள்கிறேன் .


Mayuram Sridhar Jagannathan
நவ 22, 2025 14:24

இன்னும் எத்தனை காலம் தான் ஏமாத்துவார் இந்த நாட்டில் , நம் நாட்டில் .?


நிக்கோல்தாம்சன்
நவ 16, 2025 04:24

ஒரு ரெண்டு நாளு போயி வந்ததற்க்கே இவ்வ்ளோ புல்லா கவுத்துடீங்களே , வருடம் முழுக்க இருக்கும் இடத்திற்கு எவ்ளோ பெரிய சிக்கல் அது ?


M Ramachandran
நவ 15, 2025 11:41

இதில் கருணாநிதியை நிமிடத்திற்கு நிமிடம் தந்தை என்று கூறி அவர் பெயரை மிக மோசமாக கெடுத்து விட்டார். இதில் பட்டி தொட்டியெல்லாம் கருணாநிதி பெயர். என்ன பெரியதாக தமிழக மக்களுக்கு செய்தார். தியாகிகள் பலர் இருக்க அவர்கள் பெயர்களையை இருட்டடிப்பு செய்து கருநாநிதி பெயரை வைத்துள்ளார். காசியில் பாரதியார் வீட்டை கையாக படுத்தி அங்கு வாழும் பாரதியாரின் சகோதிரியின் பேத்திக்கு வாழும் வகைய்ய செய்ய வில்லை.


M Ramachandran
நவ 15, 2025 11:34

தீ மு கா ஆட்சி செய்த காலங்களிலேயே மிக மோசமான ஆட்சியை ஸ்டாலின் இந்த ஆட்சியை கொடுத்துள்ளார். இந்த அளவுக்கு ஊழல் மலிந்த ஆட்சியை ஸ்டாலின் கொடுத்துள்ளார்.


Natarajan Ramanathan
நவ 12, 2025 19:33

மண்ணை கவ்வ வைப்பார்கள்


S.V.Srinivasan
நவ 05, 2025 15:52

ரொம்பவே பயந்து போயிருக்காரு பாவம்.


Matt P
நவ 05, 2025 08:31

ஆட்சிக்கு வருவதற்கும் தவறு செய்து வந்த பிறகும் தவறு செய்கிறார்கள். இலவச பணத்துக்கு இலவசங்களுக்கு ஆசைப்படுகிற மக்கள் உள்ளவரை தமிழ்நாட்டில் நடப்பதே நடக்கும். குழந்தையை இழந்தவர்கள் கூட இன்றைக்கு பணத்துக்காக என்க குழந்தைகள் போனதில் வருத்தமில்லை என்று சொல்லுமளவுக்கு தமிழ் நாடு ஆகி விட்டதே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை