உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 16 ஆண்டுகளாக விடிவு இல்லை; போராட்டம் நடத்த இடைநிலை ஆசிரியர்கள் முடிவு

16 ஆண்டுகளாக விடிவு இல்லை; போராட்டம் நடத்த இடைநிலை ஆசிரியர்கள் முடிவு

மதுரை : 'தமிழகத்தில் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் வாழ்வாதாரம் காக்கும் வகையில் 'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்க கோரி 16 ஆண்டுகளாக போராட்டம் நடத்தியும் பயனில்லை. இதைக் கண்டித்து செப்டம்பரில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது' என இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் (எஸ்.எஸ்.டி.ஏ.,) மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது:

தமிழக தொடக்கக் கல்வியில் 1.6.2009க்கு முன், பின் என ஒரு நாள் வித்தியாசத்தில் ஒரே கல்வித் தகுதியில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.3170 வித்தியாசத்தில் அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. ஒரே பணி, ஒரே கல்வியாக இருந்தும் 'சம வேலைக்கு சம ஊதியம்' இல்லாதது உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிரானது. இப்பிரச்னையை களைய கோரி 10 ஆண்டுகளுக்கும் மேல் தொடர் போராட்டங்களில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த எங்கள் போராட்டத்திற்கு அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் ஆதரவு தெரிவித்து, 2021 தி.மு.க., தேர்தல் அறிக்கையில் 311வது வாக்குறுதியாக 'சம வேலைக்கு சமஊதியம் கோரிக்கை நிறைவேற்றப்படும்' என உறுதி அளிக்கப்பட்டது. தற்போது வரை நடவடிக்கை இல்லை. 2023ல் நடந்த போராட்டத்தால் இப்பிரச்னைக்கு தீர்வுகாண 3 நபர் குழுவை முதல்வர் ஸ்டாலின் அமைத்தார். அக்குழு விரைவாக செயல்பட்டு அறிக்கை வழங்கும் நடவடிக்கையே இல்லை. 2009ல் நியமனமான ஆசிரியர்களில் பலர் எவ்வித பயனுமின்றி ஓய்வு பெறுகின்றனர். இதைக் கண்டித்து ஜூலை 19ல் மாவட்ட அளவில் உண்ணாவிரதம் நடைபெறும். அதிலும் முன்னேற்றம் இல்லையென்றால் செப்டம்பரில் கோரிக்கை நிறைவேறும் வரை சிறை நிரப்பும் போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த போராட்டம் வலுவானதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

anand raj
ஜூன் 30, 2025 23:48

வெளிநாட்டிலில் சம்பளம் பற்றவில்லை என்று போராட்டம் பண்ண முடியாது சம்பளம் கம்மி என்றால் வேற வேலை போயி சேருங்கள் என்று சொல்வார்கள் அங்கு எல்லாம் ரோடு,குடிநீர் வசதி , கல்வி ,மருத்துவம் இலவசம் இது தான் அரசுக்கு முதல் பணி


alagu mani
ஜூன் 30, 2025 14:46

பாஸ்கரன், வாய் உள்ளது என்று பேச கூடாது. நான் ஆசிரியர். 13 ஆண்டுகள் பணியாற்றிய பின் எனது மொத்த சம்பளம் ₹.48600. இன்னும் 50,000 கூட நான் தொடவில்லை.எனது உடன் பணியாற்றும் 2008 ஆசிரியர் 94 766 வாங்குகிறார். செய்யும் வேலை ஒன்று. சம்பளம் பாதி. ஆகவே சமவேளைக்கு சம ஊதியம் கேட்கிறோம்.


Bhaskaran
ஜூன் 30, 2025 11:11

உங்களுக்கு கொடுக்கும் சம்பளம் மிக மிக அதிகம் வட்டித் தொழில் மாதம் லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறவங்க நீங்க


Kjp
ஜூன் 30, 2025 09:37

எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி அப்பா


Thravisham
ஜூன் 30, 2025 08:57

த்ரவிஷன்களுக்கு நிர்வாகம் பற்றிய அறிவே இல்லே நிதி நிர்வாகம் பற்றிய அறிவு இல்லவே இல்லே


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 30, 2025 06:59

இடைநிலை ஆசிரியர்கள் பொறுமையாக இருக்கவேண்டும் ,,தலைவர் இன்பநிதி முதல்வராகும் போது உங்களுக்கு விடிவு வரும் .. போராட்டத்தை கைவிடுங்கள் ...


தாமரை மலர்கிறது
ஜூன் 30, 2025 06:49

ஏற்கனவே கொடுக்கிற சம்பளம் ஆசிரியர்களுக்கு போதும். மேலும் வேண்டுமெனில், தனியார் பள்ளிகளுக்கு சென்று பணியாற்றி கூடுதல் சம்பளம் பெற்றுக்கொள்ளலாம். போராட்டம் நடத்தும் நாட்களுக்கு அரசு சம்பளம், பென்ஷன், போனஸ் என்று எல்லாவற்றையும் கட் பண்ணவேண்டும். மீறி போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை கன்யாகுமரியில் பணிபுரிபவரை சென்னைக்கும், சென்னையில் பணிபுரிபுவரை கன்னியாகுமரிக்கு மாற்றுங்கள். போராட்டம் ஒரேநாளில் நின்றுவிடும்.


SENTHIL KUMAR
ஜூன் 30, 2025 22:14

தாமரை மலர்கிறது. நீ படித்திருந்தால் அதன் நிலை என்னவென்று தெரியும்.தாமரை மலராது கருகிவிடும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை