உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வருமானத்தை மறைத்த ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி மீது நடவடிக்கை; ஐகோர்ட்டில் வருமான வரித்துறை பதில்

வருமானத்தை மறைத்த ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி மீது நடவடிக்கை; ஐகோர்ட்டில் வருமான வரித்துறை பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆதாரங்களின் அடிப்படையில் ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக சென்னை ஐகோர்ட்டில் வருமானவரித்துறை உறுதி அளித்துள்ளது. ராமநாதபுரம் லோக்சபா எம்.பி.யாக இருப்பவர் நவாஸ் கனி. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்தவர். '2019 மற்றும் 2024ம் ஆண்டுகளில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை ஒப்பிட்டால் வருமானத்தை மறைத்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்த வருமானவரித்துறைக்கு உத்தரவிட வேண்டும்' என்று வெங்கடாஜலபதி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=e0xdq4ql&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்கானது தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது பதிலளித்த வருமானவரித் துறையானது, 'வருமானத்தை மறைத்தது தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக' கூறியது. இதையடுத்து, வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள்முருகன் அமர்வு கூறியதாவது; குடும்பத்தில் உள்ளவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள்? நவாஸ் கனியின் வருமானத்தில் எவ்வாறு இவ்வளவு பெரிய மாறுதல் ஏற்பட்டது? 2019-2014ம் ஆண்டு காலகட்டத்தில் 39.24 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக எந்த அடிப்படையில் கணக்கு காட்டப்பட்டது? பிரமாணப்பத்திரத்தில் இருந்து சுமார் 18 கோடி ரூபாய் வித்தியாசம் வருகிறது. ஏராளமான முரண்பாடுகள் இருக்கின்றன. எனவே வருமான வரித்துறையானது நவாஸ்கனியின் வருமான விவரங்களை தாக்கல் செய்யவேண்டும் என்று கூறி, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Venkat esh
மார் 03, 2026 22:27

மானமுள்ள இந்துக்கள் மானங்கெட்ட மாடல் கூட்டத்துக்கு பாடம் புகட்ட வேண்டும்


Venkat esh
மார் 03, 2026 22:02

கொள்ளை அடித்து விட்டு.... மாட்டினால் லுங்கிக்கு அடியில் ஒளிந்து கொள்ளும் கூட்டம்


தமிழ்வேள்
மார் 03, 2026 21:45

வெ.மா.சூ.சொ உள்ளவனாக இருந்தால் இவனே 72 தேடி ஜன்னத்துக்கு டிக்கெட் வாங்கிடணும்....பாய் மாரெல்லாம் துஆ கேளுங்கோ..


Modisha
மார் 03, 2026 21:08

மதத்தை வைத்து தப்பித்துக்கொள்ளும் இந்த aயோகியர்களுக்கு திமுக உறுதுணை .


பைரவன்
மார் 03, 2026 20:38

கர்மா சரியான நேரத்தில் தன் கடமையைச் செய்யும். Karma is a boomerang. It never misses it's target.


வில்லிபுத்தூரான்
மார் 03, 2026 20:24

ஹிந்து உணர்வு இருப்பவர்கள் வரும் தேர்தலில் திமுக வுக்கு வாக்களிக்காமல் இருந்தாலே போதும்.


Palanisamy Sekar
மார் 03, 2026 19:24

ராமநாதரபுறத்திலிருந்து மதுரை வந்து இந்த தெனாவட்டு செய்து போனவரா ? கனி இப்போதாச்சும் தெரிஞ்சுதா எங்கள் முருகப்பெருமானின் திருவிளையாடலை.. இன்னும் இருக்கு.. உமது ஆணவத்துக்கு ஆப்பு வைப்பார் . இதுதான் ஆரம்பம். இனி ஆட்சி இழக்கப்போவார்கள் . திகார் பயணத்துக்கு போவாரக்ள். அப்பன் முருகனிடம் விளையாடாதீங்க. அவர் விளையாட்டை இனி தொடர்ந்து பார்ப்பீங்க.


R. SUKUMAR CHEZHIAN
மார் 03, 2026 19:20

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ நவாஸ் கனியின் S.T. COURIER மூலம் வரி ஏய்ப்பு நடந்து உள்ளதா என வருமான வரி துறை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 03, 2026 21:30

எம்.எல்.ஏ அல்ல எம்பி. உதயசூரியன் சின்னத்துல நின்று ஜெயித்தவர்


Rathna
மார் 03, 2026 19:12

குன்றத்தில் பிரியாணி சாப்பிட்ட நபருக்கு இனிமேல் IT துறை முறையான பிரியாணி சமைத்து போடும் என்று நம்புவோமாக. அந்த பிரியாணியை இந்த நபர் வாழ்க்கையில் மறக்க கூடாது.


Kasimani Baskaran
மார் 03, 2026 18:58

திமிங்கிலங்களை விட்டுவிட்டு கொசுவை அடிப்பது சுத்த பயித்தியக்காரத்தனம்.