உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விளம்பரத்துக்கான போராட்டம் அல்ல: தி.மு.க.,வுக்கு மார்க்சிஸ்ட் பதிலடி

விளம்பரத்துக்கான போராட்டம் அல்ல: தி.மு.க.,வுக்கு மார்க்சிஸ்ட் பதிலடி

மதுரை : 'மதுரை மாநகராட்சியில் பட்டா கேட்டு போராட்டம் நடத்தியது தற்பெருமைக்காகவோ, விளம்பரத்திற்காகவோ அல்ல' என, மார்க்சிஸ்ட் கட்சியினர் அமைச்சர் மூர்த்திக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.இம்மாநகராட்சியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக, மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசன் போராட்டம் நடத்தி வருகிறார். அவரது பேச்சு, செயல்பாடுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி நேற்று முன்தினம் பேசினார்.''தன் புகழுக்காக எதையாவது பெற்றுத் தருகிறேன் என, தவறாக பிரசாரம் செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். யாரையும் நம்பி நாங்கள் இல்லை,'' என காட்டமாக பேசினார்.இந்நிலையில், மூர்த்திக்கு பதில் அளிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலர்கள் கணேசன், ராஜேந்திரன் தெரிவித்துள்ளதாவது:தமிழகம் முழுதும் பட்டாவுக்கான இயக்கத்தை எங்கள் கட்சி நடத்துகிறது. அதுபோல்தான் மதுரையிலும் வெங்கடேசன் எம்.பி., தலைமையில் பட்டா கேட்டு முறையீடு இயக்கம் கடந்த 7ல் நடந்தது.மாநகராட்சியில் பல ஆயிரம் பேர் பட்டா கேட்டு மனு அளித்து வருகின்றனர். அந்த ஏமாற்றம் தான் குமுறலாக, கோரிக்கையாக வெளிப்படுகிறது. விதிகளை காரணம் காட்டி, பல ஆண்டுகளாக அதிகார பீடங்களால் அலைக்கழிக்கப்பட்டவர்கள் தான், எங்களை நம்பி வருகின்றனர். அவர்களை ஏமாற்ற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. போராட்டத்தை திசை திருப்புவது எங்கள் நோக்கம் அல்ல. திசை தெரியாமல் திகைத்து நிற்கும் மக்களை அணி திரட்டுவதே எங்கள் கடந்த கால வரலாறு. அதை, இப்போதும் மார்க்சிஸ்ட் உறுதியோடு முன்னெடுக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.இதற்கு பதில் அளிக்கும் வகையில் மதுரை தி.மு.க.,வினர் கூறுகையில், 'அரசியல் செய்ய வேண்டும் என்ற எம்.பி.,யின் தனிப்பட்ட ஆர்வத்தால்தான் இப்பிரச்னையே ஏற்பட்டது. இதை சுட்டிக்காட்டிய அமைச்சருக்கு, கட்சி சார்பில் பதில் அளிக்க வைத்து பிரச்னையை திசை திருப்புகிறார். கூட்டணிக்குள் இருந்து கொண்டு இப்படி குழப்பம் செய்வது நல்லதல்ல' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

seshadri
அக் 21, 2024 11:42

வரும் இருபத்திஆறு தேர்தலில் 25 கோடிக்கு பதில் பெரிய பெட்டியாக வாங்க இப்போதே துண்டு போட ஆரம்பித்து விட்டார்கள். இதெல்லாம் ஒரு கட்சி ...


Rajarajan
அக் 21, 2024 09:38

கம்மி குடும்பத்தினரின் வோட்டு கூட, அவர்களுக்கு கிடைக்காது என தெரிந்திருந்தும், கட்சிகள் ஏன் அவர்களை கூட்டணியில் வைக்கின்றது ?? ஒன்றை எப்போதும் வீட்டிலேயே கட்டி போட்டிருப்பார்கள். வெளியே விட்டால், சவுண்ட் ஓவராக தரும், ஊரு வம்பை விலைக்கு வாங்கும். பெரிய தலைவலி. எனவே வெளியே விடமாட்டார்கள். அதே தான்.


veeramani
அக் 21, 2024 09:13

சிவப்பு கோடி காம் ரேடக்கள் இந்தியாவை விட்டு துடைத்து வெளியேற்றப்படவேண்டிய ஒன்று இந்த கூட்டத்திநர் முதுகில் குத்த தயங்காதவர்கள். இந்த மண்குதிரையை நம்பி சேருகின்ற ஆட்டி மந்தையை நினைத்து ......தமிழ்த்தாயின் தவப்புதல்வன் கலைஞரின் ஆட்சியில் இவர்களை வெளியே பிடித்து தள்ளுங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை