உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரு காலத்தில் கேட்டு கேட்டு வாங்கினார்; தற்போது மருந்துக்கும் வரி விதிக்கிறார் அமெரிக்க அதிபர் அடுத்த அட்டூழியம்

ஒரு காலத்தில் கேட்டு கேட்டு வாங்கினார்; தற்போது மருந்துக்கும் வரி விதிக்கிறார் அமெரிக்க அதிபர் அடுத்த அட்டூழியம்

வாஷிங்டன்: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு, வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் 100 சதவீதம் சுங்க வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பின், நாள்தோறும் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறார். இந்நிலையில், தற்போது வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு, 100 சதவீதம் சுங்க வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறை வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உற்பத்தி ஆலை இல்லாத அனைத்து நிறுவன மருந்துகளுக்கும் இது பொருந்தும் எனவும், அமெரிக்காவில் ஆலை கட்டுமானப் பணியை துவங்கினால் வரி இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்திய மருந்துகள் ஏற்றுமதியின் முக்கிய சந்தையாக அமெரிக்கா உள்ளது. கொரோனா பரவல் மற்றும் அதைத் தொடர்ந்து, முக்கிய உயிர் காக்கும் மருந்துகளை வழங்கும்படி, இந்தியாவை அமெரிக்கா கேட்டுக் கொண்டது. தற்போது, இந்த வரி விதிப்பு, இந்திய நிறுவனங்களை குறி வைத்து அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாதிப்பு ஏற்படாது

இந்த வரி விதிப்பு குறித்து இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவின் ஏற்றுமதியில் பெரும்பகுதி பொதுவான அதாவது 'ஜெனரிக்' எனப்படும் மருந்தாக உள்ளதால், அவற்றுக்கு உடனடியாக பாதிப்பு ஏற்படாது. ஆனால், சில முன்னணி மருந்து நிறுவனங்கள் சந்தைப்படுத்தும் சிறப்பு மருந்து பொருட்களுக்கு இந்த வரி பொருந்த வாய்ப்புள்ளது. இந்திய மருந்து நிறுவனங்கள் தங்களின் மொத்த வருவா யில் 40 முதல் 50 சதவீதம் வரை அமெரிக்க சந்தையிலிருந்து பெறுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் மொத்த மருந்து ஏற்றுமதியில் 40 சதவீதம் அமெரிக்க சந்தைக்கு அனுப்பப்படுகிறது. அமெரிக்காவின் மொத்த மருந்து இறக்குமதியில் கடந்த 2024ல் இந்தியாவின் பங்களிப்பு 6 சதவீதமாக இருந்தது. இந்தாண்டின் முதல் அரையாண்டில் மட்டும் 32,000 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகளை இந்திய மருந்து நிறுவனங்கள் ஏற்றுமதி செய்துள்ளன. இந்த அறிவிப்பால் சில பா திப்புகள் இருந்தாலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. இவ்வாறு அவை கூறியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

yasomathi
செப் 28, 2025 07:05

கொஞ்சம் செலவானாலும் பரவாயில்லை ஒரேடியாக போய் சேரும் மருந்துகளை அமெரிக்காவிற்கு அனுப்புங்கள். உலகம் முழுவதும் நிம்மதியா இருக்கும்.


ManiMurugan Murugan
செப் 27, 2025 22:28

ManiMurugan Murugan இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு வரியோடு சேர்த்து விலை நிர்ணயம் செய்யவேண்டும்


viki raman
செப் 27, 2025 13:40

அமெரிக்கா மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டுகிறேன்.


Ramesh Sargam
செப் 27, 2025 12:44

இந்த சந்தர்ப்பத்தை தமிழக அரசு சரியாக பயன்படுத்திக்கொண்டு, அயர்ச்சியை போக்கும் மருந்து டாஸ்மாக் தொழிற்சாலையின் கட்டுமானப்பணியை அமெரிக்காவில் துவங்கி வரிச்சலுகையை பெறவேண்டும். பிறகு அந்த மருந்து விற்பனை மூலம் பல கோடிகள் சம்பாதிக்கலாம். பிறகு அமெரிக்காவில் திமுக கட்சியை ஆரம்பித்து தேர்தலில் வெற்றிபெற்று ஸ்டாலின் அமெரிக்க அதிபராக கொடிகட்டி பறக்கலாம்.


பா மாதவன்
செப் 27, 2025 11:37

கொரானா காலத்தில் நம் நாடு எல்லா நாடுகளுக்கும் மருந்து கொடுத்து உதவியதை மறந்த நன்றி கெட்ட நாடு அமெரிக்கா. அவர்கள் மருந்திற்காக நம் நாட்டை மன்னிப்பு கேட்டு கெஞ்சக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். எல்லா மருந்து தயாரிப்பாளர்கள் உதவி இருந்தால் இது சாத்தியமாகும் . வரிச்சுமை சாதாரணமாக உபயோகிப்பாளர்களான அவர்களைத் தான் பாதிக்க வேண்டும். அல்லது ஒப்பந்தத்தை மாற்றி அத்யாவசிய மருந்துகளின் விலையை அதிகரித்து அவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்த வேண்டும் . திருடுபவன் கையில் ஆட்சி இருப்பதை விட பைத்தியக்காரன் கையில் ஆட்சி இருப்பது மிக மிக ஆபத்தானது. பாவம் அமெரிக்கர்கள்.


Anand
செப் 27, 2025 10:41

அவருக்கு ஒட்டு போட்டு உப்பை நின்றவர்கள் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும். ஒரு வகையில் உலகளவில் அமெரிக்காவின் ஆதிக்கம் இவருடன் முடிந்துவிடும்.


BALOU
செப் 27, 2025 09:55

இந்தியா தனது விற்பனை சந்தையை அதிக படுத்த வேண்டும் ஒரே நாட்டிடம் அதிக பொருட்களை விற்பனை செய்தால் அவர்கள் நம்மை அடிமை போல் நடத்துவார்கள் அதைதான் இப்பொழுது டிரம்ப் செய்கிறார்


shan
செப் 27, 2025 09:47

நமக்கு எந்த பாதிப்பும் இல்லை அமெரிக்கா மக்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி இருக்கும் அவ்வளவுதான்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 27, 2025 09:44

ஐயோ மருந்து கம்பெனி முதலாளிகள் கஷ்டப்படுகிறார்களே அவங்க கம்பெனி பங்குகள் விலை சரிஞ்சிடிச்சே பாவம்லா


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
செப் 27, 2025 10:46

சரி அது அவங்க பார்த்துப்பாங்க..... உனக்கு முதல்ல பேர் வெக்க சொல்லுங்க.... குடுக்க மாட்டாங்க... ஒரு கும்பல் மட்டுமே அடுத்தவர் சந்தோசப்படும்......


அப்பாவி
செப் 27, 2025 09:40

அங்கேயெல்லாம் தலைவலி மாத்திரை கூட ஒண்ணு, ரெண்டுன்னு வாங்க முடியாது. குப்பி குப்பியா 200, 300 ந்னுதான் விப்பாங்க. மக்களும் மருந்து விலை குறைவா இருக்குன்னு வாங்கி பாதி கூட சாப்புடாம தூக்கிப் போட்டுருவாங்க. பிறகு அடுத்த தலைவலி வந்தா இன்னொரு பாட்டில். வலியே வராம இருக்க தினமும் ரெண்டு சாப்புடுவாங்க. இதையெல்லாம் கவனித்த ஜெனரிக் மருந்து கம்பெனிகள் கிலோ கிலோவா உற்பத்தி செய்து ஏற்றுமதி பண்ணிக்கிட்டு வர்ராங்க. அங்கே மருந்து விக்காத கடையே கிடையாது. அளவுக்கதிகமா மருந்துகளை உபயோகிப்பதாலும், வாங்கி வாங்கி கொட்டுவதாலும் புதுப் புது வியாதிகள் வந்தபடியே இருக்கு. ட்ரம்ப் இப்போ போடும் டாரிஃப் ஒருவகையில் அவிங்களுக்கு நல்லதே.. இந்தியாவிலும் இந்த கல்ச்சர் பரவி வருது. மருந்து கம்பெனிகள் இங்கேயே நிறைய விக்கலாம்.