உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே நாடு ஒரே தேர்தல் ஜனநாயகத்தை கொன்று விடும்; முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஒரே நாடு ஒரே தேர்தல் ஜனநாயகத்தை கொன்று விடும்; முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஜனநாயகத்தைக் கொன்று விடும்' என முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஜனநாயகத்தைக் கொன்று விடும். நாட்டின் ஜனநாயகம், பன்முகத் தன்மையை ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அழித்துவிடும். ஒற்றை ஆட்சி முறைக்கு வழிவகுக்கும். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. அரசியலமைப்பு சட்டத்தை காக்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டும். தேர்தல் சீர்திருத்தம் என்ற போர்வையில் திணிக்கப்படும் பா.ஜ.,வின் முயற்சியை எதிர்க்க வேண்டும். மறைமுகத் திட்டத்துடன் அரசியல் சாசனத்தை சிதைக்கும் நோக்கத்துடன் பா.ஜ., அரசு செயல்படுத்த முனைகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் சர்வாதிகாரத்திற்கு வழி வகுக்கும். மாநிலங்கள் உரிமையை இழந்து பிராந்திய உணர்வுகள் அழிக்கப்படும். நாட்டின் முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்பவே பா.ஜ., முயற்சி செய்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்ற பா.ஜ.,விற்கு பெரும்பான்மை இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

SRITHAR MADHAVAN
டிச 16, 2024 18:07

அரசாங்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அரசியல் கட்சிகள் உயரிய அரசாங்க அதிகாரிகளுக்கு நின்று சல்யூட் செய்ய வேண்டும். அதற்கு பதிலாக, மரியாதைக்குரிய ஐபிஎஸ், ஐஏஎஸ் மற்றும் படித்த அரசு அதிகாரிகள் ஒரு குடும்பத்திற்கு அடிமைகள் போல் அரசியல் செய்கிறார்கள். பேச்சு சுதந்திரம், வேலை சுதந்திரம், கடமைகளை நிறைவேற்றும் சுதந்திரம் போன்றவற்றைக் காட்டுவது, பொறுப்புகளின் அடிப்படையில் அரசியல் கட்சிகளால் கொல்லப்படுகிறது. பிறகு எப்படி ஜனநாயகம் பிழைப்பது? அரசாங்க அதிகாரிகளின் உண்மையான போர்வீரர்கள் தங்கள் கைகளை மடக்கி, தங்கள் தலையை பூமியை நோக்கிப் பார்த்துக் கொண்டு, அரசியல் அதிகாரிகளுக்குப் பின்வாங்கி நிற்பது, ஜனநாயகம் உங்களால் கொல்லப்படுவதைப் பிரதிபலிக்கிறது. "ONE COUNTRY ONE ELECTION" NEVER KILL OUR DEMOCRACY, WILL DISCIPLINE.


Balamurugan
டிச 16, 2024 17:46

ஜனநாயகத்தை கொல்லாது உங்களை போன்ற குடும்ப ஆட்சியை கொல்லும் வாய்ப்பு இருக்கு.


Balamurugan
டிச 16, 2024 17:43

ஒரே நாடு ஒரே தேர்தல் இந்தியாவுக்கு நல்லது. மக்களுக்கு நல்லது. ஆனால் திமுக போன்ற குடும்ப கட்சிகளுக்கு ஆபத்து. அதனால் தான் தலைவரு ரொம்ப பொலம்புறாருங்கோ


SRITHAR MADHAVAN
டிச 16, 2024 16:24

ஒரு குடும்பம் நம் நாட்டையும் மாநிலத்தையும் ஆளும் போது, ​​ஜனநாயகம் கொல்லப்படுகிறது. நாங்கள் சாதாரண மக்களுக்கு ஆட்சி செய்ய வாய்ப்பளிக்கவில்லை. சாமானிய மக்கள் ஏமாற்றப்பட்டு, நன்கு படித்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அரசியல் கட்சிகளின் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்படுகிறார்கள். கல்வி ஜனநாயகம் இன்று இல்லாமல் போய்விட்டது. ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் அறிவுரைகளைப் பெறுவதற்குப் பதிலாக, அரசியல் தலைவர்களின் அறிவுரைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. எனவே இலவசங்கள் அரசியல் கட்சிகளால் நாடு முழுவதும் பரவி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் தாமதமாகி வருகிறது. இந்தியா இப்போது தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துகிறது, நீண்ட காலத்திற்கு முன்பே வளர்ந்த நாடுகளில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கட்சியால் அரசியல் அனுகூலத்தைப் பெற்று, இந்திய வாக்குச் சங்கம் ஏமாற்றப்பட்டு, நாடுகளுக்கு பொருளாதாரச் செல்வம் சூறையாடப்படுகிறது.


SRITHAR MADHAVAN
டிச 16, 2024 16:09

கடந்த காலத்தில் இந்தியாவை ஒரு குடும்பம் ஆண்டபோது, ​​இன்னொரு குடும்பம் இப்போது தமிழ்நாட்டை ஆளும்போது, ​​எதேச்சதிகாரம் என்று அழைக்கப்படுகிறது. ஜனநாயக நாடு என்று அழைக்கப்படும் ஒரு நாடு ஒரே தேர்தல் அவசியம் இருக்க வேண்டும்.


ஆரூர் ரங்
டிச 16, 2024 14:49

எப்படி எப்போ தேர்தல் நடத்தப்பட்டாலும் நீங்க பிரதமராக முடியாது. அப்புறம் ஏனிந்த அழுகை?


ஆரூர் ரங்
டிச 16, 2024 14:48

அரசியல் சட்டத்தையே எரித்து விட்டு பிறகு காகிதம் மட்டுமே எரிக்கப்பட்டது என்று பல்டி. இப்போ திடீரென ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கான எதிர்ப்பும் போலி.


ஆரூர் ரங்
டிச 16, 2024 14:45

பார்லிமெண்டில் தீர்மானம் நிறைவேற்றாமல் காங்கிரஸ் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது செல்லாது. ஆனால் திமுக பெயரளவுக்கு ஓரிரு வார்த்தை கண்டனத்தை மட்டும் தெரிவித்து அதே கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இப்போது கூட தந்தை ஆதரித்த ஒரே நேரத்தில் தேர்தலை மகன் எதிர்ப்பது சந்தர்ப்பவாத பச்சோந்தித்தனம்.


Barakat Ali
டிச 16, 2024 13:42

கரெக்ட்டு .......... நாம எப்படியெல்லாம் ஜனநாயகத்தைச் சித்திரவதை செஞ்சோம் ன்னு எந்தக்கொம்பனும் பேச முடியாது .........


Ramamoorthy M
டிச 16, 2024 13:34

Any Press reporter who has guts, should ask him 'How?'. I'm sure everyone knows what answer we'll get?


புதிய வீடியோ