களப்பணியால் தான் மக்களை காக்க முடியும்
வடகிழக்கு பருவமழைக்கு, தமிழகத்தில் சிலர் பலியாகி உள்ளதாக செய்திகள் வருகின்றன. 'எவ்வளவு பெரிய மழை பெய்தாலும், எந்த உயிரிழப்பும் இல்லாமல் எதிர்கொள்வோம்' என, முதல்வரும், துணை முதல்வரும், அமைச்சர்களும் கூறினர். ஆனால், இன்று நிலவரம் வேறு மாதிரியாக உள்ளது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தோல்வி என்பதையே இது காட்டுகிறது.இரண்டு நாள் மழைக்கே மதுரை தத்தளித்தது. அமைச்சர்கள் முகாமிட்டு பணியாற்றுகின்றனர் என, முதல்வர் தெரிவித்தார். ஆனாலும், துறை வாரியாக இடைவெளி ஏற்பட்டது. துறைகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை. ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படாததே காரணம். துறை வாரியாக ஆய்வு கூட்டத்தை முதல்வர் நடத்துகிறார். ஆய்வு கூட்டத்தால் மட்டும் மக்களை காப்பாற்ற முடியாது. களப்பணியால் தான் காக்க முடியும். உதயகுமார், எதிர்கட்சித் துணைத் தலைவர்