உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீவிரமடையும் பருவ மழை: 17 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தீவிரமடையும் பருவ மழை: 17 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக, கடலுார் , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் , தஞ்சை , கள்ளக்குறிச்சி , மயிலாடுதுறை, திருவாரூர் , திருவள்ளூர் ,ராணிப்பேட்டை, திருச்சி ஆகிய 17 மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று (அக்.22) விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும், விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, சென்னை வானிலை மையம் சென்னைக்கு நாளை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டதை அடுத்து, பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tgbc8n62&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னையில் 900 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.மழை நீர் தேங்க வாய்ப்பு உள்ள 17 இடங்களைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கையாக தேவையான உபகரணங்கள் உடன் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் வட கிழக்கு பருவ மழை தீவிமடைந்து வருவதால், கடலுார் மாவட்டத்தில் பள்ளி,கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து செங்கல்பட்டு விழுப்புரம், தஞ்சை , கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர் ,திருவள்ளூர் , ராணிபேட்டை என ஓன்பது மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கும்இன்று ( அக்.22) விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை, சிவகங்கை, புதுக்கோட்டை, சேலம், பெரம்பலூர், நாமக்கல், மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும்இன்று (அக்.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

angbu ganesh
அக் 22, 2025 09:16

நீர் வடிகால் சீர் செய்யப்படும் முன்பை விட இப்போ படு கேவலமா இருக்கு ரோடு ஒரு துளி நீர் கூட நிக்கதுன்னு சொன்னவனுங்க எல்லாம் கார்ல போவானுங்க இப்போ வெளில வந்து பாக்க சொல்லுங்க நாங்க படர அவஸ்தை கேவலமான அரசாங்கம்


Kalyanaraman
அக் 22, 2025 08:20

மழைநீர் தேங்கக் கூடாது என்பதற்காகவே மழை நீர் வடிகால் சென்னை முழுவதும் கையாலாகாத திமுக அரசால் போடப்பட்டுள்ளது,. இதனால் மாதக்கணக்கில் சென்னை மக்கள் சாலையில் பல துயரங்களை அனுபவித்தார்கள். தற்போதும் ஆங்காங்கே முடியாமல் உள்ளது. தற்போது தாழ்வான பகுதியாக கண்டறியப்பட்டுள்ள அந்த 19 இடங்களில் மழைநீர் வடிகால் ஏன் அமைக்கவில்லை / செயல்படவில்லை 4000 கோடி அபேஸ்.


அயோக்கிய திருட்டு திராவிடன்
அக் 22, 2025 07:06

தயவுசெய்து திமுக அரசு என்று கூற வேண்டாம். அது நமது திராவிட மாடல் அரசு.


சோழநாடன்
அக் 21, 2025 21:42

சென்னை மற்றும் பக்கத்து மாவட்டங்களில் பெய்யும் கனமழையைக் கட்டுப்படுத்த முடியாது, படிக்கும் பிள்ளைகளின் அறிவில் மண்ணை அளிப்போடும் வகையில் விடுமுறை அறித்துள்ள தமிழ்நாடு அரசை, திமுக அரசைக் கண்டிக்கின்றோம். திமுக அரசைக் கண்டிப்பதுதானே இப்போதைய பேசன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை