உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  எதிர்க்கட்சிகளின் சதித்திட்டம் முறியடிப்பு

 எதிர்க்கட்சிகளின் சதித்திட்டம் முறியடிப்பு

மாணவர் நலன் தவிர, எங்களுக்கு வேறு எதுவும் முக்கியமில்லை என்பதை, செயலால் செய்து காட்டியுள்ளார் பிரதமர் மோடி. 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவிற்காக, அமைதியான வழியில் முன்னெடுக்கப்பட்ட மாணவர் போராட்டத்திற்குள், சமூக விரோத அமைப்புகள் ஊடுருவின. தேச, பாதுகாப்பிற்கு எதிரான முழக்கங்கள் ஒலிக்க தொடங்கின.காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக மாணவர்களை குறிவைத்து காய் நகர்த்த தொடங்கின. அதன் விளைவாகவே, அமைதி போராட்டம் அலங்கோல கலவரமாக உருவெடுத்தது. எனவே, தேச ஒற்றுமையை காக்கவும், மாணவர்களின் பாதுகாப்புக்காகவும், தன் மத்திய அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் துறந்துள்ளார். இதன் பெயர் தோல்வியல்ல, தார்மீகம். 'நீட்' விவகாரத்தில், எதிர்க்கட்சிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. - நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sundarsvpr
ஜூலை 27, 2026 13:36

மத்திய அமைச்சர் பதவி விலகல் ஒரு நாடகம். விலக தேவையில்லை விலகிவிட்டார்.. நீட் விவகாரம் என்ன என்று அறியாத மாணவர்கள் தூண்டப்பட்டுள்ளார்கள். அரசு நீட் விவகாரத்தில் பின்வாங்காது, மோடியின் செல்வாக்கு அரசியல் நேர்மை அவர் மேலும் ஐந்து ஆண்டு தொடர்ந்தால் இப்போதுஉள்ள எதிர்கட்சிகள் காணாமல் போய் புதிய நேர்மையானதிறமையான தலைமையில் எதிர்க்கட்சி ஓன்று தோன்றும்.


R.RAMACHANDRAN
ஜூலை 27, 2026 07:26

அனைவரும் ஆளும் கட்சிக்கு எதிராக திரண்டதால் இளைஞர்களுக்காக இருப்பதுபோல பாசாங்கு செய்கின்றனர்.இன்றேல் எத்தனை மாணவர்கள் உயிர் பறிக்கப்பட்டிருக்குமோ.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை