உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டாலின் வெற்றி வழக்கில் உத்தரவு

ஸ்டாலின் வெற்றி வழக்கில் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை கொளத்துார் சட்டசபை தொகுதிக்கு, 2011ல் நடந்த தேர்தலில் முறைகேடு செய்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி, சைதை துரைசாமிக்கு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011ல் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில், சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து, அ.தி.மு.க.,வின் சைதை துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சைதை துரைசாமி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், 'கொளத்துார் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தியதோடு, தேர்தலில் வெற்றி பெற முறைகேடுகளிலும் ஈடுபட்டார்' என, வாதிட்டார். அப்போது பேசிய நீதிபதிகள், 'குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள்; வழக்கு தொடர்பாக ஆவணங்கள் எவை எவை? அது தொடர்பான விபரங்கள் அடங்கிய குறிப்புகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள்' என, உத்தர விட்டு விசாரணையை நவம்பர் மாதத்துக்கு ஒத்தி வைத்தனர். - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

ஆரூர் ரங்
செப் 26, 2025 10:34

அப்போ கூட வாக்குத் திருட்டு? தி.மு.க நேர்மையா ஜெயிச்ச வரலாறே இல்லை.


நிவேதா
செப் 26, 2025 09:43

இந்த வழக்கை சீக்கிரம் முடிக்க சொல்லி மஹாதேவன் அய்யா கிட்ட அணு கொடுங்க. அவர், நீதிமன்ற தீர்ப்புகளுக்கு காலநிர்ணயம் செய்து தீர்ப்பு வழங்குவார்


GMM
செப் 26, 2025 09:30

சட்ட மன்ற உறுப்பினர் ஆயுள் 5 ஆண்டுகள். நீதிமன்றம் வழக்கை ஆயுளுக்கு பின் விசாரிப்பது பலன் தராது. நீதிமன்றம் சுய கட்டுபாட்டில் இருக்க வேண்டும். அல்லது மத்திய அரசு கட்டுபாடுகள் வகுத்து அமுல்படுத்த வேண்டும். நீதிமன்றம் இந்திய அரசின் கட்டுபாட்டில் கொண்டு வர வேண்டியது காலத்தில் கட்டாயம்.


வாய்மையே வெல்லும்
செப் 26, 2025 08:20

பொய் அணுகுண்டு சார் .. இங்க பிரச்சனை நீதியரசர்கள் நேரத்தில்.. நீங்க புதுசா ஒரு அறுந்து போன உப்புசப்பில்லாத பாயிண்டை இருவது வருஷம் கழித்து எழுதவேண்டிய சம்பந்தம் என்ன அதுவும் நாளிதழில். நீங்களே சட்டமேதை ஆக இருந்தால் மூர்க்க கட்சிக்கு ஆதரவாக இப்பவாவது வாதாடி வீணாப்போன ட்ராவிடத்துக்கு டில்லியில் முட்டுகுடுக்கவும் . அல்லக்கைகள் வீணாப்போன பேச்சை யாரும் இங்கு மதிக்கமாட்டார்கள் ..அப்படியே பிசகாமல் அச்சில் இடவும் தினமலர் சார்


Barakat Ali
செப் 26, 2025 08:07

2011ல் நடந்த தேர்தலில் ???? பதினாலு வருசமா வழக்கு நடக்குது ....... அதுவும் மக்களின் வரிப்பணத்தில் ..... நாடு நாசமாப்போச்சு .....


Moorthy
செப் 26, 2025 07:32

தீர்ப்பு வருவதற்குள் 2026 இல் ஸ்டாலின் மீண்டும் வெற்றி பெற்று வருவார் பிறகு என்ன? மக்கள் தீர்ப்பே மஹேசன தீர்ப்பு


jss
செப் 26, 2025 07:10

இந்த ஆதிரி தாமதிக்கப்பட்ட வழக்கு தீர்ப்பு கேவலமானது. இதிலிருந்து தெரிகிறது உச்ச நீதிமன்றமும் லஞ்சம் பொறுப்பின்மை போன்ற விடியரசின் திராவிட மாடலில் சிக்கி இருக்கிறது என்று. அதனால்தான் தமிழக அரசு கேஸகளுக்கு சாதகமான தீர்ப்புகள் வருகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. 2011 வழக்கை இன்று கையிலெடுத்த சுப்ரீம் கோர்ட் எவ்வாறு கவர்னருக்கும் ஜனாதிபதிக்கும் ஒரு மாதம், மூன்று மாதம் என்று கட்டுப்பாடு விதிக்கலாம். உங்கள் அதிகாரம் உங்களை கட்டுப்படுத்தாதா. கவலமன சிஸ்டம். இதற்க்கு சுப்ரீம் கோர்ட்டை கலைத்து விடலாம். சாமான்னிக்கு கிடைக்கும் நீதி இருந்தால் என்ன , போனால் என்ன. அதைநேரம் தவறி அமுல் படுத்தும் சுப்ரீம் கோர்ட்டு இருப்பதால என்ன பயன். சஞ்சீவ் சான்யாலின் சமீபத்திய கூற்று சரி என்பது இறுதியாக விட்டது. இந்த நாட்டின் முன்னேற்றத்தின் முதல் தடை கற்கள் கோர்ட்டுகள், சுப்ரீம் கோர்ட்


Vasan
செப் 26, 2025 06:48

What will be the consequences of this time barred case and the judgment awaited? As 15 years have passed, can there be any meaningful consequence? If the victory by Mr.Stalin is proved as wrong, what will be the implication? Can his position in the period 2011-16 be reversed? He might have used that power in subsequent elections in 2016 and 2021 too, to emerge victorious. Can they also be reversed? Can any of the knowledgeable persons, post as reply in this column, in the best interest of all Dinamalar readers, for the sake of awareness?


raja
செப் 26, 2025 06:22

நாக இன்னும் கூட விசாரிக்க பல வருடங்கள் எடுப்போம் ஆனா மாநில ஆளுநர் மற்றும் இந்திய குடியரசு தலைவருக்கு மூணு மாதத்தில் முடிவெடுக்க உத்திரவு இடுவோம்...என்ன சட்டமோ என்ன இழவோ....


Subramanian
செப் 26, 2025 06:02

They will fix time limit only for President and Governors. They can take a life time also


சமீபத்திய செய்தி