உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு மோர் பாக்கெட் வழங்க உத்தரவு

ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு மோர் பாக்கெட் வழங்க உத்தரவு

சென்னை : 'தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு, மோர் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும்' என, போக்குவரத்து கழக கிளை மேலாளர்களுக்கு, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அரசு பணிமனைகளில் உள்ள பணியாளர்களுக்கும், பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கும், மோர் பாக்கெட்டுகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பஸ் நிலையங்கள், நேர கண்காணிப்பாளர் அறைகள், உணவகம், ஓய்வறைகள் உள்ளிட்ட இடங்களில், போதுமான குடிநீர், மோர் உள்ளிட்டவற்றை ஊழியர்கள் அணுகும் இடத்தில் வைக்க வேண்டும்.தரமான குடிநீர் வழங்க, ஆர்.ஓ., இயந்திரங்களை பராமரிக்க வேண்டும். ஓட்டுநர், நடத்துநர் போன்றோரை, ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை, தண்ணீர் குடிக்க சொல்ல வேண்டும். ஓ.ஆர்.எஸ்., பொட்டலங்களை அவர்களுக்கு வழங்கி, நீர்ச்சத்து குறையும் நேரங்களில் அருந்தும்படி அறிவுறுத்த வேண்டும். தலையில் தொப்பி அணிய வேண்டும். வெயில் காரணமாக, தலைவலி, மயக்கம் உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டால், உடனே தெரிவிக்க வேண்டும். முதலுதவி பெட்டிகளை வைத்திருக்க வேண்டும். பஸ்களில் உள்ள ரேடியேட்டர் உள்ளிட்டவற்றின் வெப்பத்தை பரிசோதித்து, அதில் குறைகள் இருந்தால் உடனே சரிசெய்ய வேண்டும் என, கிளை மேலாளர்களுக்கு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

M Ramachandran
மார் 24, 2025 13:19

எப்படியெல்லாம் கொள்ளையடிக்க திட்டம் போடுகிறார்கள். ஏன் தீ மு கா நிதியிலிருந்து தருவது தானெ?


GMM
மார் 24, 2025 11:23

நீண்ட தூர பஸ் 8 மணி பயணம். மோர் குளிர் சாதனத்தில் இல்லை என்றால், வெயிலில் கெட்டு விடும்? சிலருக்கு ஒத்து கொள்ளாது. அப்படி என்றால் பஸ் நிலையம் ஆவின் மோர் மட்டும். நல்ல தண்ணீர் கொடுத்தால் போதும். முன் இருக்கைகள் பெண்கள், முதியவர், குழந்தைகளுக்கு மட்டும். முழு தூரம் டிக்கெட் கட்டாயம். எங்கும் இறங்கலாம். கட்டணம் அடிப்படையில் பயணிகளுக்கு அரசு குடிநீர் வழங்கலாம்.


கிஜன்
மார் 24, 2025 07:15

அருமை .... வைட்டமின்-சி பவுடர்களையும் ...குளிர்ந்த குடிநீரும் டெப்போக்களில் கொடுக்கலாம் .... இதைப்போல வெயிலில் வாடி வதங்கி நிற்கும் போக்குவரத்துத்துறை போலீசாருக்கும் தருமாறு .... இந்த திட்டத்தை விரிவு படுத்தலாம் ...


MUTHU
மார் 24, 2025 13:10

அவனவனுக்கு என்ன செய்துகொள்ளணும்னு தனக்கே தெரியாதோ. குளிருக்கு வெந்நி வெயிலுக்கு தண்ணி கூட அரசாங்கம் தான் தரணுமாக்கும். இவன் இதை சொல்லி ஆட்டை தான் போடுவான்.


Appa V
மார் 24, 2025 06:44

பனிரெண்டு மணி முதல் மதியம் மூணு மணி வரை பஸ்களை இயக்காமல் ஓய்வு தரலாமே ..இவ்வளவு வெய்யலில் டாஸ்மாக் சரக்கு எவ்வளவு கேடு தரும் என்று அரசு உணரவேண்டாமா ?