உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ம.செ.,க்கள் வேலை செய்யவில்லை என பழனிசாமி திட்டு!

ம.செ.,க்கள் வேலை செய்யவில்லை என பழனிசாமி திட்டு!

சென்னை : பா.ஜ.,வுடனான கூட்டணி பற்றி கிராம மக்களுக்கு தெரியவே இல்லை. ஊர் ஊராக, வீடு வீடாகச் சென்று, மக்களுக்கு நம் சாதனைகளை எடுத்துச் சொல்வதில் என்ன பிரச்னை? நீங்கள் யாரும் வேலையே செய்வதில்லை' என, அ.தி.மு.க., மாவட்டச் செயலர் களுக்கு, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி, 'டோஸ்' விட்டார். தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்க, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று, அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், பழனிசாமி தலைமையில் நடந்தது.கட்சியில் உள்ள 82 மாவட்டச் செயலர்களுக்கும் பூங்கொத்துகள் வழங்கி, சால்வை அணிவித்து, புத்தாண்டு வாழ்த்து கூறினார் பழனிசாமி.

பூத் கமிட்டி

அதை தொடர்ந்து நடந்த கூட்டத்தில், பிரசாரத்தை தீவிரப்படுத்துவது, கூட்டணியை வலுப் படுத்துவது, வாக்காளர்கள் சேர்ப்பு, காலியாக உள்ள பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. பின், பழனிசாமி பேசியுள்ளதாவது: சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. சில மாவட்டங்களில், பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் சிறப்பாக முடிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் விடுபட்டுள்ள பூத் கமிட்டி நிர்வாகிகளை விரைவில் நியமிக்க வேண்டும். தேர்தல் வெற்றிக்கு அடித்தளமே பூத் கமிட்டி நிர்வாகிகள் உழைப்பு என்பதை நாம் மறந்து விடக்கூடாது. தேர்தல் நெருங்குவதால், களப்பணிக்கு தயாராக இருக்க வேண்டும். சமூக வலைதளங்கள் வாயிலாக, தேர்தல் பிரசாரத்தை துவக்க வேண்டும். அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வாக்காளர் சேர்ப்பு பணியில் மெத்தனமாக இருந்து விடக்கூடாது. கள்ள ஓட்டுகள் போடுவதில், தி.மு.க.,வினர் வல்லவர்கள்; கள்ள ஓட்டு எப்படி போட வேண்டும் என்பதில் கைதேர்ந்தவர்கள். எப்படியாவது தேர்தல் அதிகாரிகளின் கண்களில் மண்ணை துாவி, கள்ள ஓட்டு போட்டு விடுவர். அதற்கு இடம் அளிக்காமல், விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும்.

முறியடிப்பு

வெளியூரில் வசிப்பவர்கள், வீடு மாறிய வாக்காளர்களை எல்லாம் சேர்ப்பதில் தி.மு.க.,வினர் ஆர்வம் காட்டுவர்; அதை முறியடிக்க வேண்டும். அ.தி.மு.க.,வின் ஒரு ஓட்டு கூட விடுபடக் கூடாது.கட்சியின் மா.செ.,வாக இருப்போர் ஒவ்வொருவரும், கிராமங்கள் தோறும் மக்களை தேடிச் செல்ல வேண்டும். மக்களை சந்தித்து, அவர்கள் பிரச்னைகளை கேட்க வேண்டும். முடிந்தால், பிரச்னைகள் தீர உதவியாக இருக்க வேண்டும்.

தெருமுனை கூட்டங்கள்

இதெல்லாம் செய்யாததால் தான், இன்று வரை கிராம மக்களிடம், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி சென்று சேரவில்லை. அதனால், சட்டசபை தொகுதி வாரியாக மக்களை சந்தியுங்கள்; தெருமுனை கூட்டங்கள் நடத்துங்கள். சமூக வலைதளங்கள் வாயிலாக பிரசாரத்தை துவக்குங்கள். தேர்தல் நேரம் என்பதால், எந்த சர்ச்சையிலும், பிரச்னையிலும் சிக்கிக் கொள்ளாதீர்கள் .கூட்டணி பற்றி யாரும் கவலையோ, குழப்பமோ அடைய வேண்டாம். இம்மாத இறுதியில், மேலும் சில கட்சிகள் கூட்டணியில் சேரும். அதனால், நீங்கள் யாரும் கூட்டணி பற்றி பேச வேண்டாம்; நானே பேசிக் கொள்கிறேன். அரசு ஊழியர்கள் முதல் அனைத்து தரப்பு மக்களும், அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக இருக்கின்றனர். நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத, திறனற்ற ஸ்டாலினிடம் சிக்கி, தமிழகம் தவித்தது போதும் என மக்கள் பேச துவங்கி விட்டனர். விடியா ஆட்சியிடம் இருந்து தமிழகம் விடுதலை பெறும்; அ.தி.மு.க., ஆட்சி மலரும். எனவே, தேர்தல் பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு பழனிசாமி பேசியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

ஆரூர் ரங்
ஜன 01, 2026 17:23

2021 வரை நன்கு சம்பாதித்து விட்டு புளியேப்பம் விட்டுக் கொண்டு திமுகவுடன் பங்காளிப் பாசத்தால் மவுனமாக இருக்கிறார்கள். இன்றும் எல்லா கமிஷனிலும் பங்கு வருகிறது. அப்புறம் பங்காளி திமுக வை எதிர்த்து எப்படி போராட்டம் நடத்துவாங்க? இதைக்கூட அறியாமல் டெல்லி சாணக்கியர் கூட்டணி வைத்துள்ளார்.


Zakir Hussain
ஜன 01, 2026 14:20

பாஜகவுடன் கூட்டணி என மக்களுக்கு தெரியத் தெரிய ஓட்டு விழுகாது என்பது லோக்கல் அதிமுகவினர்களுக்கு நன்றாகவே தெரியும், அதனால் இதை பத்தி பேசவே பயப்படுகிறார்கள், இதுதான் உண்மையான கள நிலவரம்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 01, 2026 16:24

பாஜகவுடன் கூட்டணி என மக்களுக்கு தெரியத் தெரிய ஓட்டு விழுகாது ...... இது 2021 அல்ல ..... 2024 ம் அல்ல .....


திகழ்ஓவியன்
ஜன 01, 2026 12:08

பா.ஜ.,வுடனான கூட்டணி பற்றி கிராம மக்களுக்கு தெரியவே இல்லை:: களத்தில் இருப்பவனுக்கு தெரியும் பீசப்பி என்றாலே மக்கள் கொலை வெறியில் இருக்கிறார்கள் என்று , வோட்டு விழாது என்று அவனுக்கு தெரியும்


Kasimani Baskaran
ஜன 01, 2026 10:31

பாஜக வளர்ந்ததால் ஆத்தா திம்க்கா தேய்ந்து விடும் என்ற கோட்பாடா அல்லது தன் கட்சியின் அணி ஜெயிப்பதை விட தீம்க்கா ஜெயிப்பது முக்கியமா என்று கேட்டால் தீம்க்கா ஜெயிப்பதுதான் முக்கியம் என்பது போல எசப்பாடியாரின் நடவடிக்கை 2025ல் இருந்தது. பிடிவாதமாக பாஜகவையே வளர்வதையே முடக்கினார். 2026ல் தேர்தல் வருகிறது - இனி மாறி ஒன்றும் ஆகப்போவது இல்லை.


ஜெய்ஹிந்த்புரம்
ஜன 01, 2026 09:10

பாஜகவுடன் கூட்டணி பத்தி தெரியலியா இல்லை பாஜகவையே தெரியலியா??


Sivasankaran Kannan
ஜன 01, 2026 10:49

200 - உளறுவதை நிறுத்தாதே.. கூலிக்கு பெயர் மாற்றி வேலை செய்வது ஒரு பிழைப்பு


mindum vasantham
ஜன 01, 2026 08:41

எவ்ளோ தான் பிஜேபி நியூஸ் மற்றும் திமுக நியூஸ் போட்டாலும் உள்ளுக்குள்ள எல்லாருக்கும் என்ன சொல்லுது அதிமுக அதிமுக


Barakat Ali
ஜன 01, 2026 07:51

ஒருவேளை மாவட்டச் செயலர்கள் மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும் ன்னு நினைச்சு நம்பிக்கையைக் கைவிட்டுட்டாங்களோ ???? அதனால்தான் சுறுசுறுப்பு இல்லையோ ???? நீங்களே உங்க ஆட்சியில் திமுக தீயாக வேலை செஞ்சமாதிரி 2021-25 இல் செய்யலையே ????


mindum vasantham
ஜன 01, 2026 07:24

பிஜேபி திமுக அழிய வேண்டும் என்பதை விட அதிமுக அழிய வேண்டும் என நினைக்கிறது அதை புரிந்து தமிழர்கள் வோட்டு போட்டால் தேர்தலுக்கு பின்பு தமிழர்களுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு


Kadaparai Mani
ஜன 01, 2026 10:19

பாஜக அல்ல. சில குறுகிய மனம் படைத்த கூட்டம் . மக்கள் அதிமுகவிற்கு ஒட்டு போட எப்போதோ முடிவு எடுத்து விட்டார்கள் . எடப்பாடி அடுத்த முதல்வர் .மீடியா அஞ்சும் எடப்பாடி தலைமை பண்பு


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 01, 2026 11:19

உண்மையான கருத்து. திமுக மீது அண்ணாமலை கூறிய அனைத்து குற்றச்சாட்டுகள்ளுமே ஆதார பூர்வமானவை. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதே பாஜக திமுக உறவை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. எப்படியும் இந்த தேர்தலுக்குப்பின் அதிமுக தமிழ் நாடு காங்கிரஸ் மாதிரி ஆகிவிடும். அதைத்தான் பாஜகவும் விரும்புகிறது. எடப்பாடி நன்றாக ஏமாந்தாரா அல்லது ஏமாற்றப்பட்டாரா என்பது இந்த மூன்று நான்கு மாதங்களில் தெரிந்துவிடும்.


Kadaparai Mani
ஜன 01, 2026 12:53

சுந்தரம் விசுவநாதன் அதிமுக தான் தமிழகத்தின் மிக பெரிய கட்சி . மீடியா பலத்தால் அதிமுக வென்றதில்லை .


Palanisamy Sekar
ஜன 01, 2026 03:24

கடந்த்த நான்கரை ஆண்டுகாலம் எதிர்க்கட்சியாக இருந்து திமுகவை எதிர்த்து எவ்வளவு போராட்டங்களை நடத்தினீர்கள் என்று கூட்டத்தில் தில்லாக ஒருவர் கூட கேட்கவே இல்லையே. காரணம் கேட்டும் பலனில்லை என்றுதான் மா செக்கள் கேட்கவே இல்லை. எவ்வளவு ஊழல்கள், மணல் கொள்ளை, போதை பற்றியெல்லாம் திமுகவை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் என்கிற முறையில் எதை நீர் செய்தீர்கள் என்று கேட்டால் அறிக்கையோடு நின்றுபோனதை எப்படி வெளியே சொல்வது? மந்திரிகள் மீதான ஊழலை பற்றி எதிர்க்கட்சியாக இருந்து செய்தது பற்றி விவரமாக சொல்லுங்களேன் பாப்போம் என்று கேட்டால் பதிலிருக்காது. திமுகவுடன் கள்ள உறவில் இருப்பதாகத்தாகத்தானே ஊரே சொல்லிற்று. அதற்கு கைமாறாகததன் ஸ்டாலின் உங்கள் மீதான கொடநாடு கொலைவழக்கு புகாரை பற்றி ஒருவார்த்தை கூட பேசவே இல்லை இதுநாள் வரையிலும். உங்கள் சம்பந்தி மீதான காண்ட்ரெக்ட் புகாரை பற்றி ஸ்டாலின் கண்டுக்கவே இல்லை. காரணம் உங்களது திமுக எதிர்ப்பு வெறும் ஏட்டளவில் மட்டுமே என்பதை அரசியல் அறிந்தோர் நன்கு அறிவார்கள். அண்ணாமலை என்கிற மனுஷன் மட்டும் இல்லை என்றால் திமுகவின் ஊழல்கள் பற்றிய செய்தி ஒன்றுகூட வெளியே வந்திருக்காது. அதனால்தான் அண்ணாமலை அவர்கள் உங்களைப்பற்றி அப்படி விமர்சித்தார். உங்கள் மனதில் நீங்கள் நூறு எம் ஜி யார் போல எண்ணிக்கொண்டீர்கள். கட்சியை சின்னாபின்னமாக்கிவிட்டு இப்போது திட்டிக்கொண்டிருந்தால் வெற்றிவாய்ப்பு தேடிவந்துவிடுமா என்ன? தன்னை எதிர்ப்போர் என்று தெரிந்தால் போதும் உடனே வெளியேற்றம்தான். இதுதான் கட்சியை நடத்தும் முறையா என்று கேட்க நாதியிலில்லை. வெறும் நாலரை ஆண்டுகால பாஜக துணையோடு ஆட்சியை முடித்துவிட்டு என்னமோ உலக சாதனை செய்ததுபோல நடந்துகொள்வது நகைபுரியதாகவே இருக்கிறது. சென்ற பாராளுமன்ற தேர்தலில் விசிக கூட்டணிக்கு வந்துவிடும் என்று நம்பிக்கையோடு திருமா பேசியதை வைத்து பாஜக கூட்டணியை உதாசீனப்படுத்தினீர்கள். மோடிஜியின் வெற்றியை பற்றி விமரிசனம் செய்தீர்கள், தோற்கப்போகும் மோடிக்காக ஏதும் செய்வதற்கில்லை என்கிறீர்கள். அப்படி உதாசீனமாக பேசியதாலேயே படித்த பண்புள்ள அண்ணாமலை அவர்கள் உங்களை தற்குறி என்று விமர்சிக்க நேரிட்டது. அண்ணாமலையின் செல்வாக்கு கூடுவதை கண்டு எரிச்சலில் அவரை உதாசீனம் செய்தீர்கள். இப்போதும் அதனையே தொடர்வது உங்களின் தோல்விக்கு நீங்களே காரணமாக இருக்கபோகிண்றீர்கள். இரண்டாம் கட்டத்தலைவர்களாக இருக்கக்கூடிய உங்கள் கட்சி தலைகள் எல்லோரும் சுயலானவாதிகளாகவே இருக்கின்றார்கள். செங்கோட்டையனை நீக்கியதை பற்றி ஒருவருக்கும் உங்கள்செயலை கண்டிக்க வக்கில்லாமல் கிடந்தார்கள். இப்போது செங்கோட்டையனின் அரசியல் வாழ்ககை அஸ்தமிக்கவில்லை, மாறாக நல்ல பதவியில் மரியாதையுடன் இருக்கின்றார். பதினோரு தேர்தல்களில் ஒன்றில் கூட வெற்றிபெறாத கட்சியை அழித்த கொடுமை எங்குமிருக்காது. டெல்லியில் உங்களைப்பற்றி இங்கிருந்து யாரோ ஆஹா ஓஹோ என்றெல்லாம் சொல்லி உங்களுடன் கூட்டணிக்கு அண்ணாமலையை பலிகொடுத்தார்கள். விவரமறியாதவர்கள். சூறாவளியாக அதிவேகமாகா வளர்ந்த கட்சியை முடக்கிய உங்கள்தலைமையிலான கூட்டணி இப்போதும் அண்ணாமலையின் பிரசாராதால் மட்டுமே வெற்றிவாய்ப்பை நோக்கி செல்ல முடியும். அதிலும் திமுகவின் குறிப்பாக ஸ்டாலினின் விவரமறியாத அரசியல் கொடுமையால் நொந்து நூடுல்சான மக்கள் வேறுவழியே இல்லை என்றிருந்த சமயத்தில் உங்கள் நினைப்பு வந்தது.. அதிலும் மண்ணள்ளிப்போட விஜய் வந்து காரியத்தை கெடுத்துவிட்டார். தோல்வியால் பாஜக ஒன்றும் சுருண்டுவிடாது. ஆனால் இந்த தேர்தலில் தோற்றுப்போனால் உங்களது நிலைமையானது அரசியலை அனாதையாகவே இருக்கப்போகிண்றீர்கள். இப்படி சொல்வதால் என் மீது கோபத்தில் பிராண்டுவர்கள். ஆனால் சொல்வதெல்லாம் உண்மை என்பதை அரசியலில் அறிவாற்றல் மிக்கவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். தான் என்கிற அகம்பாவத்தால் அழிந்துபோவதை அரசியலில் இனி வருவோர் உங்களை உதாரணமாக எடுத்து கூறுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. இது திட்டு அல்ல. மனதில் உள்ள குமுறல்கள்.. உங்களது கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரிகள் போல கோழைத்தனமாக அமைதி காக்க நான் ஒன்றும் பதவிக்காக எழுதுவதில்லை. திமுக என்கிற ஊழல் கட்சியை சமூகத்தின் அவலத்தை எடுத்து சொல்கின்றேன்.


மோகனசுந்தரம்
ஜன 01, 2026 04:21

உங்களுக்கு ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பழனிச்சாமி சேகர் அவர்களே. என் மனதில் உள்ளதை அப்படியே எழுதிய உங்களுக்கு நன்றி.


ஜெய்ஹிந்த்புரம்
ஜன 01, 2026 09:08

பதிலாக ஒரே ஒரு வார்த்தை..


Kadaparai Mani
ஜன 01, 2026 10:35

Sekar you are seeing only dmk channels. Aiadmk has organized numerous agitations and Media has not shown them .Next week big agitation in namakkal. On Monday Edappadi has gathered more crowds than vijay in gummidipoondi . Does any Media given attention. All are envy of aiadmk and EPS. EPS protecting aiadmk from all evil elements including dmk and one sided Media.


Barakat Ali
ஜன 01, 2026 16:18

இப்போது செங்கோட்டையனின் அரசியல் வாழ்ககை அஸ்தமிக்கவில்லை ???? சேகர் ஜி .... சட்டப்பேரவைத் தேர்தலுக்குப்பிறகு வரப்போகும் நிலைதான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் .... யார் யாருடைய வாக்குவங்கியைப் பிளப்பார்கள், யாருக்கு பாதிப்பு, யாருக்கு ஆதாயம் என்று விவாதங்கள் சூட்டைக் கிளப்புகின்றன ..... மக்களின் மனதில் என்ன உள்ளது என்று யாருக்கும் தெரியாது .... வருகின்ற கூட்டம் அனைத்தும் வாக்குகளாக மாறாது என்று சோ சொல்வது வழக்கம் .....


Oviya Vijay
ஜன 01, 2026 01:35

இவரது படத்தைப் போட்டு திட்டு, விளாசல், பாய்ச்சல் என்றெல்லாம் செய்திகள் மீடியாக்கள் வெளியிட்டால் அதைப் படிக்கும் எங்களுக்கு சிரிப்பு தான் வருகிறது... ஏனெனில் இவர் ஒன்றும் எம்ஜிஆர் போன்றோ ஜெயலலிதா போன்றோ ஆளுமை படைத்த தலைவர் அல்லவே... ஏதோ போகிற போக்கில் தனக்குக் கிடைத்த முதல்வர் பதவியை ஒரு நான்கு ஆண்டுகள் அனுபவித்தாயிற்று... அவ்வளவே... இவரது ஆட்சிக்காலத்தில் கொள்ளையடித்து இவரது கட்சியினர் சேர்த்து வைத்திருக்கும் பணத்தைத் தவிர, மற்றபடி சொல்லிக்கொள்ளும் படியாக இவரிடம் சரக்கு என்று ஒன்றும் இல்லை... ஒரு காலத்தில் தமிழகத்தில் ஆட்சி புரிந்த காங்கிரஸ் தற்போது என்ன நிலையில் உள்ளதோ, அதே நிலை தான் 2026 தேர்தல் முடிவுகள் வெளியான பின்னே அதிமுகவின் நிலையும்... அது இனி மீண்டு எழவே எழாது... தற்போது அஸ்தமனத்தை நோக்கி அதிமுக பயணப் பட்டுக் கொண்டிருக்கிறது...


vivek
ஜன 01, 2026 07:07

..நன்றாக கதறுங்க அலறுங்க


Kadaparai Mani
ஜன 01, 2026 10:41

Ovia vijay media afraid of EPS and aiadmk. Aiadmk is the only force can defeat dmk and all psephologists knew about this.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை