உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தி.மு.க., மாநாட்டிற்கு சரளை மண் திருட்டு; எதிர்த்தவர்களை கைது செய்தது பேரவலம்: சீமான்

 தி.மு.க., மாநாட்டிற்கு சரளை மண் திருட்டு; எதிர்த்தவர்களை கைது செய்தது பேரவலம்: சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தி.மு.க., இளைஞர் அணி மண்டல மாநாட்டிற்காக, சரளை மண் திருடியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க கோரியவர்களை, கைது செய்தது பேரவலம்' என, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்

அவரது அறிக்கை:

திருவண்ணாமலையில், 14ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற, தி.மு.க., இளைஞரணி மாநாடு நடந்தது. அந்த இடத்தை சமப்படுத்த, மலப்பம்பாடி ஏரியில் இருந்து, 2,000 லோடு சரளை மண் சட்டவிரோதமாக திருடப்பட்டுள்ளது. இது, தி.மு.க.,வினருக்கு சொந்தமான அருணாச்சலேஸ்வரா சர்க்கரை ஆலை வளாகத்தில், கொட்டி வைக்கப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kvqek020&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அனுமதியின்றி ஏரிக்கரையில், 30 அடி தார் சாலை அமைக்கப்பட்டது. இதை எதிர்த்து, உழவர் உரிமை இயக்கம் சார்பில், அருள் ஆறுமுகம், அம்மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு மனு கொடுத்தார். கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியும், குற்றவாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, 14ம் தேதி, 2,000 விவசாயிகளை திரட்டி மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அருள் ஆறுமுகம் மற்றும் 22 விவசாயிகளை முன்னெச்சரிக்கையாக, போலீசார் கைது செய்து, போளூர் சிறையில் அடைத்தனர். தி.மு.க., மாநாடு முடிந்ததும் விடுதலை செய்யப்படுவர் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கிருந்து வேலுார் மத்திய சிறையில் அடைத்தது பேரவலமாகும். கொலை, கொள்ளை, பாலியல் குற்றவாளிகள், போதைப் பொருள் விற்போரை கைது செய்ய திறனற்ற தி.மு.க., அரசு, அப்பாவி விவசாயிகளை பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைப்பது தான், விவசாயிகளை பாதுகாக்கும் முறையா. தி.மு.க.,வின் மண் காக்கும், மானம் காக்கும் முறையா. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

duruvasar
டிச 19, 2025 07:55

அராஜகம் உச்சத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. விரைவில் முடிவுக்கு வரும்.


Svs Yaadum oore
டிச 19, 2025 07:40

நாடெங்கும் ஏரி குளம் குட்டை ஆறு என்று அனைத்தும் விடியல் ஆட்சியில் கொள்ளை .....கன்யாகுமரியில் மலையை வெட்டி கேரளா ஏற்றுமதி ....மலப்பம்பாடி ஏரியில் மணல் திருடி, அனுமதியின்றி ஏரிக்கரையில், 30 அடி தார் சாலை அமைக்கப்பட்டது. இதை எதிர்த்து, அம்மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு மனு கொடுத்தும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியும், குற்றவாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம் .....ஆனால் போராட்டம் என்று அறிவித்தால் போளூர் சிறை .....மானங்கெட்ட படு கேவலமான ஆட்சி நடக்குது ....


D.Ambujavalli
டிச 19, 2025 06:12

இளைஞர் அணி மாநாடு, துணை முதல்வர் தலைமையில் என்றால் ஏறி மண் மட்டுமா, மலையையே பெயர்த்தெடுத்து திருவண்ணாமலையிலிருந்து அவர் வீடு வரை சாலை போடா வேண்டாமா? இதை விவசாயிகள் கேள்வி கேட்கலாமா? அந்த 'மண் திருடர்கள்' மீது நடவடிக்கை எடுத்துவிட்டு ஆட்சியரும், அவர் குடும்பமும் உயிரோடு மிஞ்ச முடியுமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை