பிளஸ் 2 தேர்வு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை : தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள், மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்க உள்ளன. இந்த தேர்வுகளை பள்ளிகளுக்கு செல்லாத, தனித்தேர்வர்களும் எழுதலாம். அவ்வாறு எழுத விரும்புவோர், வரும், 17ம் தேதிக்குள், கல்வி மாவட்டங்களில் உள்ள அரசு இ - சேவை மையங்களுக்கு சென்று, உரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம். அப்போது வழங்கப்படும் ஒப்புகை சீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே, 'ஹால் டிக்கெட்'டுகளை பெற முடியும். மேலும் விபரங்கள், www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் உள்ளன.